Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

நத்தை
அகரம் அமுதா

தொழிலிலை எனினும் சுமைதூக்கி
தொடர்ந்து நகரும் சுமைதாங்கி
வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி – அவ்
வழிவழி போகா துள்ளபடி

ஒட்டகம் போலொரு திமிலுண்டு
உள்அதன் படுக்கை அறையுண்டு
கொற்றவ னில்லை என்றாலும்
கோள எழில்மணி முடியுண்டு

கடந்து போகும் இடமெல்லாம் - பொதி
கழுதை போலே சுமந்துசெலும்
அடடா அதுதான் வீடாகும்
அதன்பேர் அதன்பேர் ஓடாகும்

கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
கூரை அமைத்த கொத்தனிது
பட்டுத் தெளியு(ம);முன் பட்டறிவால்
ஜம்புலன் அடக்கும் சித்தனிது

கொம்பொடு உடலை உள்வாங்கி
கொடுமையி லிருந்து தப்பிக்கும்
ஜம்புலன் அடக்கும் வித்தையினை
அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்


- அகரம் அமுதா (agramamutha@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.