Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

மீசை வணிகம்
ஆதவன் தீட்சண்யா

வினோதகனாய்த் தெரியும் ஒருவன்
people நகரத்தின் சந்தடி மிகுந்த சதுக்கங்களில் நின்று
தன் கைவசமிருக்கும் மீசைகளை விற்றுவிட்டுப்போக காத்திருக்கிறான்
வேறொரு நகரத்தில் நேற்றிருந்தது போலவே

அவனுக்குத் தெரியும் அவனது வாடிக்கையாளர்கள் யாரென்று
மீசையின் மகிமையை அறிந்த அவர்கள்
நகரத்தின் இண்டு இடுக்குகளிலிருந்து கரப்பானைப்போல வெளிப்படுவார்கள்
இருட்டத் தொடங்கியதும்

நூறுமீசைகளை வைத்துப் பார்த்து ஒன்றை தேர்வுசெய்கிறவராய்
அவனது வாடிக்கையாளர் ஒருபோதும் இருப்பதில்லை
கஞ்சாப்பொட்டலம் கைமாறும் லாவகத்துடன்
முகமேற்றி அனுப்பிவிடுவான் மீசைகளை

வேண்டாமென யாரோ மழித்தெறிந்த வெறும் மயிர்களைக்கொண்டு
அவன் படைத்தனுப்பும் புதிய ஆண்கள்
அந்த நொடியிலிருந்தே மீசையை முறுக்கி
வீரத்தையும் அதிகாரத்தையும் ஆண்மையையும் வெளிப்படுத்துவார்கள்
தங்களது ஒட்டுமீசை விழுந்துவிடக்கூடாதென்ற பயத்தோடு.

நன்றி: உயிரெழுத்து

- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.