Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

கண்ணாடி உடையும் சத்தம்
ஆதவன் தீட்சண்யா

Broken gate தூக்கிலிடப்பட்டாற் போன்று
சுவற்றின் உச்சியில் தொங்கிக்கொண்டு
தரையிறங்க மறுக்கும் இப்புகைப்படத்திலிருந்து
இதோ வெளியேறிக் கொண்டிருக்கிறேன்

நாற்புறமும் மறித்துப் பூட்டப்பட்ட சட்டகச்சிறைக்குள்
மங்கி மகிமையிழந்து பழுப்பேறும் இப்புகைப்படத்தில் நீடிப்பது
அப்படியொன்றும் பெருமைக்குரியதல்ல.

நீர்த்தேடியலையும் வேரின் தாகமூறி
மண்நோக்கித் தாழும் கால்களை முறித்து
விண்ணுக்கு மீறுமெனது சிரசையும் அறுத்து
ஒரு சட்டகத்திற்குள் மடங்கிப் பொருந்திக்கொள்ளாமல்
எப்போதும் அதிருப்தியை பெருகவிட்டுக் கொண்டிருக்கும்
எனது ஒவ்வாமையும் ஒழுங்கீனமும்
புகைப்படத்தின் அமைதியை குலைத்துக் கொண்டிருப்பதை நானறிவேன்

சூனியக்காரியின் வசியக்கட்டுக்குக் கீழ்ப்படியும் ஏவல் பிண்டமாய்
புகைப்படக்காரனின் கண்ணசைப்பையும் கைஜாடைகளையும் மட்டுமே
நீங்கள் பின்தொடரும் நிலையில்
நான் மட்டும் ஒரு தெத்துப்பல்லைப்போல
என்னிஷ்டத்திற்கு நிற்பது குறித்த உங்களது குமைச்சல்
தெள்ளுப்பூச்சியைப்போல் அரித்துக்கொண்டிருக்கிறது
புகைப்படத்திற்குப் பதிலாக உங்களையே

ஒதுக்ப்பட்ட சிற்றிடத்தில் ஒண்டிக்கொண்டு
மிகுந்த சௌகர்யத்தோடு இருப்பதான பாவனை பூசி
சிரித்தபடியே காட்சிதரும் இங்கிதம் பழகாத என்னை
உதறியெறிய முடியாமல் உடன்வைத்துக் கொள்வதில்
உமக்கேற்படும் சங்கடங்களைத் தவிர்க்கும் பொருட்டும்
நான் வெளியேறித்தானாக வேண்டும்

காமிரா கோணங்களுக்காக
உட்கார வைக்கப்பட்டவர்கள் சொகுசாய் உட்கார்ந்தபடியேயும்
நிற்பவர்கள்
காலொடிய நின்றே சலிக்கும்படியாயுமிருக்க
முன்வரிசை என்று ஏமாற்றி தரையமர்த்தப்பட்டவர்கள்
எழுந்து நின்று இளைப்பாறவும் வழியற்ற இப்புகைப்படத்தின்
கண்ணாடிக்குள் பாய்ந்து வெளியேறுகிறேன் ரத்தம் சொட்ட

என்னால் உருவாகும் வெற்றிடம்
காட்சியின்பத்தைக் கெடுக்கவல்லதாகையால்
பிதுங்கி வழியும் உங்கள் சதைகளை அறுத்துப் பரப்பியோ
பணிதல்மிக்க பிளாஸ்டிக் பொம்மையிலொன்றை நிற்க வைத்தோ
அவசரமாய் நிரப்பியடையுங்கள் அவ்விடத்தை

நானில்லாத புகைப்படத்தில்
நீங்கள்
புதிய சௌகர்யங்களை உணரக்கடவதாகுக.

(நன்றி: தீராநதி)

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com