Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

புகைப்படத்தின் கொலையாளி அல்லது கொலையாளியின் புகைப்படம்
ஆதவன் தீட்சண்யா

நாடாளுமன்றத்தின் நடுமண்டபத்திலிருந்த
காந்தியின் படம் கழன்று விழுந்திருந்தது

குரல்வளையிலிருந்து கொப்பளித்து
குஜராத்வரை மிரண்டோடிய ரத்தம்
ஆஸ்ரமத்துக்குப் போக அஞ்சி
அகதி முகாமொன்றில் அடைக்கலம் வேண்டியது

மாட்டியிருந்த கொக்கியின் மறை கழன்றோ
தொங்கிக்கொண்டே இருக்கமுடியாத துயரில்
தானாகவோ
விழுந்திருப்பதற்கான சாத்தியங்களை விவாதிக்கும் முன்பே
அயலார் சதியென வழக்கம்போல் அறிக்கை வைத்த அரசு
கவனக்குறைவு குற்றத்திற்காகவென
கைதுசெய்தது காவலர்களை

எல்லாம் முடிந்து இருட்டிய பிறகு
இப்போதும் தப்பிக்கவைத்த சிஷ்யர்கள் விசுவாசத்தால்
நெஞ்சு விம்ம
கபடமாய் சிரிக்கும் சாவர்க்கர் கடைவாயில்
மீண்டும் குடித்த ரத்தத்தின் சிறுதுளி.

- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.