Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11 வது மாநில மாநாடு


வணக்கம்!

வாழ்வின் புனைவுகளுடன் உயிர்ப்பின் ரகசியம் தேடி வறுமையைப் புதைக்கும் உன்னதக் கனவுகளோடு உலகை அழகுபடுத்துகிறார்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உலகை அழகுபடுத்தும் இருபதாயிரம் (20,000) எழுத்தாளர்களையும், ஓவியர்களையும், கலைஞர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வருகிறது.

நவீன எழுத்தாளர்கள் தமிழின் பாரம்பரிய எழுத்தாளுமையைப் பற்றிக் கொள்ளும் வகையில் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து சங்க இலக்கிய பயிலரங்குகளை நடத்தி வருகிறோம். உலக அரங்கின் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாய் முன் நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியல் கோரிக்கையாகும் நலவாரியத்தைப் பெற்றுத் தந்து தொடர்ந்து அக்கலைஞர்களோடு இணைந்து நிற்கிறோம்.

ஆண்டுதோறும் தமிழின் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர் உள்ளிட்ட கலைஞர்களை கௌரவிக்கிறோம். உலகின் சிறந்த திரைப்படங்களைத் திரையிட்டு மக்களின் திரைப்பட ரசனையை மேம்படுத்துகிறோம். ஜனநாயக மாண்புகளை, மக்கள் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மக்கட்திரள் இயக்கங்களை நடத்தி வருகிறோம். எமது கலை இலக்கிய இரவுகள், கவிதை திருவிழாக்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் நாடக நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள்

எமது அமைப்பின் 11 வது மாநில மாநாடு 2008 டிசம்பர் 18, 19, 20 மற்றும் 21 தேதிகளில் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள பத்மராம் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து கலைஞர்களும் எழுத்தாளர்களும் சென்னையில் சங்கமிக்கிறார்கள். இம்மாநாட்டை நடத்தித்தர எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நடிகரும், இயக்குனருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன், அமீர்கான், சமூகசேவகரும் திரைப்படக் கலைஞருமான சபனா ஹாஷ்மி, சமூகப்போராளியும், எழுத்தாளருமான ஆனந்த் தெல்டும்ப்டே, பண்பாட்டு அறிஞர் கே.என்.பணிக்கர் இவர்களுடன் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாநாடு வெற்றிபெற நீங்கள் துணைநிற்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம் பொருளுதவி, நிதியுதவி என உங்கள் பங்களிப்பைக் கோருகிறோம்.

நன்றி!

அன்புடன்,
பாலு மகேந்திரா, இயக்குனர்,
தலைவர், வரவேற்புக்குழு

மின்னஞ்சல் : [email protected]
தொடர்புக்கு : 94440 85385, 94441 40344, 96001 28199, 044-24339024

காசோலைகள் மற்றும் வரைவோலைகளை "TamilNadu Progressive Writers' Association' என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

புதிய எண்: 421, இரண்டாவது தளம்,
(பாரதி புத்தகாலயம்)
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 18.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com