நிகழ்வு
ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டம் வரும் 25.06.09 மாலை 6 மணி அளவில் சென்னை முகப்பேரில் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்திற்குத் தோழர் வா.செல்வக்குமார் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் பா.குப்புசாமி வரவேற்புரை வழங்குகிறார்.
தோழர் தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் நாத்திகன் கேசவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் கோவி.நடராசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
தோழர் பாரி (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) நன்றியுரை ஆற்றுகிறார். பொதுக்கூட்டத்தில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|