Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

வாசுதேவனின் ‘தொலைவில்’ கவிதை நூலுக்கு விருது


கனடாவில் உள்ள தமிழ்தோட்டம் என்னும் அமைப்பு, 2007ம் ஆண்டின் சிறந்த கவிதை நூல் விருதுக்கு, கவிஞர் வாசுதேவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பான தொலைவில் நூலினை தெரிவு செய்துள்ளது. இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 18ம் நாள் (18-05-2008) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறொன்ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நூலுக்கான விருதுத் தொகையாக ஐநூறு கனடியன் டொலர்களும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 44 கவிதைகள் கொண்ட இத்தொகுப்புக்கு கி.பி.அரவிந்தன் முன்னுரை வழங்கியுள்ளார்.

பாரிசில் மொழிபெயர்ப்பு பணியகத்தை (தமிழ் - பிரெஞ், பிரெஞ் - தமிழ்) நடாத்திவரும் கவிஞர் வாசுதேவன் ஈழத்தில் வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். பிரெஞ்சு மொழிப் புலமைகொண்ட இவர் புகலிடப்புத்தகம் என்னும் இணையத் தளத்தின் நெறியாளராகவும் இருந்தார். தொலைவில் அவரது முதலாவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.