Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

அ.மார்க்சின் பிரச்சனை என்ன?
தாரகா

1

LTTE அ.மார்க்சின் ஈழம் தொடர்பான பார்வைக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்கள் பற்றிப் பார்ப்போம். அ.மாவின் சமீபத்தைய நேர்காணலொன்று ‘புத்தகம் பேசுது’ சஞ்சிகையில் “புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனையை அணுகுவதை சற்றே ஒத்திவைப்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. அதில் ஈழம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருக்கும் மார்க்ஸ் மீண்டும் தனது ஈழம் தொடர்பான அரைகுறை அவதானத்தையும், சிலரால் அவருக்கு போதிக்கப்பட்ட விடயங்களைக் கொண்டும் இன்றைய ஈழத்து நிலைமைகளை மதிப்பிட முயன்றிருக்கின்றார்.

புலிகள் தொடர்பாக நேர்மையான விமர்சனங்களை செய்வதானது ஒரு பிழையான விடயமல்ல ஆனால் அது காலம் குறித்த கரிசனை உள்ள விமர்சனமாக இருக்க வேண்டும். ஆனால் அ.மார்க்சிடம் அப்படியொரு தெளிவையும் நேர்மையையும் அவரது ஈழம் தொடர்பான எழுத்துக்களில் மற்றும் பேச்சுக்களில் கான முடியவில்லை. அ.மார்க்சின் ஈழம் தொடர்பான அனைத்து பதிவுகளிலும் இதனைக் கான முடியும். இந்த நேர்காணலும் அவற்றின் தொடர்ச்சிதான். இதிலுள்ள அபத்தம் என்னவென்றால் ஈழத் தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கும்போதும், கருகிச் செத்துக் கொண்டிருக்கும் போதும் அவர்களது உடலங்களின் மேல் தனது புலமைத்துவ ஆற்றலை நிருபிக்க முயல்வதுதான். தமது உறவுகள் அழிகின்றார்களே என்ற உணர்வில் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தமிழக செயற்பாட்டாளர்களை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளின் முகவர்கள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் என்றால் அ.மார்க்சின் மேதமையை என்னவென்பது.

ஒரு விடுதலைப் போராட்டம் அதன் வளர்ச்சிக் கட்டத்தில் பல்வேறு தடைகளை, சவால்களை சந்தித்தே வளர்வதுண்டு. அப்படியானதொரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதற்குரிய தடைகளை சவால்களை உள்ளக ரீதியாகவும் வெளியக சக்திகளிடமிருந்தும் எதிர் கொண்டிருக்கிறது. இதன்போது தவிர்க்க முடியாமல் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அது சிலருக்கு வேதனையான சந்தர்ப்பங்களாகவும் இருந்திருக்கும். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களைக் கொண்டே எப்போதும் ஒரு போராட்டத்தையோ அல்லது அதன் தலைமையையோ மதிப்பிட முயல்வது சரியானதொரு கணிப்பாக இருக்காது என்றே நான் சொல்வேன்.

விடுதலைப்புலிகள் குறித்து மார்க்ஸ் போன்றவர்கள் வெளிப்படுத்திவரும் மதிப்பீடுகளில் மீண்டும் மீண்டும் பொதிந்திருக்கும் கருத்து, அவர்கள் ஏனைய இயக்கங்களை அழித்தார்கள், தடை செய்தார்கள் என்பது. புலிகள் மற்றைய இயக்கங்களை மட்டுப்படுத்தினார்கள், அமைதிப்படுத்தினார்கள்தான். ஆனால் அன்றைய புறச் சூழல் நிலைமைகளிலிருந்துதான் அதனை மதிப்பிட வேண்டுமே தவிர மன எழுச்சியினாலோ அல்லது யாரோ ஒரு சிலர் தமது சுய அனுபவத்தில் இருந்து சொல்வதைக் கேட்டோ மதிப்பிடக் கூடாது. டெலோ அமைப்பின் தலைவராக செயலாற்றிய சிறிபாரெத்தினத்தை புலிகள் சுட்டார்கள் என்று சொல்பவர்கள், தமிழகத்திலிருந்து சபாரெத்தினம் ஏன் திடிரென இந்திய புலனாய்வுத் துறையால் யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதைச் சொல்வதில்லை; அது பற்றி பேசவே முயல்வதில்லை. விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக ஏனைய அமைப்புக்கள் அனைத்தையும் இந்திய வெளிய புலனாய்வுத் துறையான றோ பயன்படுத்தியது என்ற உண்மையை எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டுதான் புலிகளின் கடந்தகால சில குறிப்பான அணுகுமுறைகளை மதிப்பிட முயல வேண்டும்.

1985 திம்பு பேச்சுவார்த்தையில் புளொட் தவிர்ந்த முக்கிய அமைப்புக்கள் அனைத்தும் ஒரு தேசிய அணியாக இணைந்து நின்றன. அவ்வாறு இணைந்து நின்ற அணிகளுக்கிடையில் எவ்வாறு பிளவுகள் தோன்றின, அதற்கு பின்னால் இருந்த றோவின் சதி முயற்சிகள் என்ன? இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் புலிகள் அழித்தார்கள் சிதைத்தார்கள் என்பது ஓர் அரை குறை பார்வையை பொதுமைப்படுத்தும் முயற்சியாகவே இருக்கும்.

2

அடுத்த விடயம், ஈழத் தமிழ் சமூக அமைப்பினை தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயமாக காட்டுவது. அதில் முக்கியமானதுதான் தமிழக தலித்திய சிந்தனையை ஈழத்திற்கு பொருத்த முயல்வது. அதனைக் கூட சரி ஒரு சிந்தனைப் போக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதிலுள்ள மிகப் பெரிய அபத்தம் என்னவென்றால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனை பற்றி விவாதிக்கும்போது தலித்துக்கள் என்போருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்பது. இது பற்றி அ.மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை. கிழக்கில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். தேசிய இனப் போராட்டத்தின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இந்திய அரசியலின் பிரதிபலிப்பு எல்லாக் காலங்களிலும் ஈழத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இப்போதும் அது நடந்துள்ளது. தலித் இலக்கியம், தலித் இயக்கம் முதலான முயற்சிகள் அங்கே இப்போது வந்துள்ளன. ஐரோப்பாவில் இரண்டு தலித் மாநாடுகள் நடந்துள்ளன. எக்ஸில் என்றொரு இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.ஸ்ராலின் இன்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றிப் பேசுகின்றார். யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் இருக்க முடியாது என்கிறார். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”

மேற்படி வாதமானது அ.மாவிற்கு ஈழ அரசியல் குறித்து எதுவுமே தெரியாதென்பதை நிரூபிக்கின்றது. முதலாவது அ.மா குறிப்பிடும் முஸ்லிம்கள் பற்றிய விடயத்திற்கு வருவோம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான தவறுகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்பாக தமிழர் தரப்பால் விடப்பட்ட தவறுகளை சதா சுட்டிக் காட்டும் அ.மா போன்றவர்கள் முஸ்லிம்கள் தொடர்ந்தும் பேரினவாத சிங்கள அரசுகளின் ஏவலாளிகளாக இருப்பது பற்றியும் தமிழரின் உரிமைகளை சிதைப்பதற்கான உப சக்திகளாக பயன்படுவதையும் ஏனோ பேச முன்வருவதில்லை. பேச்சுவார்த்தையில் சம அந்தஸ்து கோரிய முஸ்லிம் தலைமைகள் இன்று வன்னியில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கும் போதும் பேரினவாத அரசின் பங்காளிகளாக இருக்கின்றார்களே அன்றி அதிலிருந்து விடுபட்டு செயலாற்றத் தயாராக இல்லை. நலன்களில் மட்டுமே சமசந்தர்ப்பம்; போராடுவதில் (சாவதில்) அல்ல.

அடுத்தது, தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியது. அ.மாவும் அவரை ஒரு தத்துவ ஆசிரியராகக் கருதும் சில புலம்பெயர் நண்பர்களும் சில வருடங்களாக ‘ஈழத்தில் தலித்தியம்’ பற்றி உரையாடி வருகின்றனர், ஆனால் இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் இவ்வாறு தலித்தியம் பற்றி பேசும் அவர்களுக்கோ அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அ.மாவிற்கோ ஈழத்தின் சாதிய நிலைமை பற்றி எதுவுமே தெரியாது என்பதுதான்.

3

LTTE ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம். அதன் இலக்கு சிங்கள மேலாதிக்கத்திலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிப்பது. அதாவது தமிழர்களுக்கென்று ஒரு சுயாதீனமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும். முதலில் அது நிகழ்ந்து முடியட்டும் பின்னர் அதில் இடம்பெற வேண்டிய அகநிலை மாற்றங்கள் குறித்து நாம் பேசலாம். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் நம்மில் பலருக்கு தலை எது கால் எது என்று விளங்குவதில்லை. தம்மை புத்திஜீவிகளாக காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரத்தில், இவர்கள் தலையைக் கால் என்பார்கள் காலை, தலை என்பார்கள். இவர்களது தேவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே ஒழிய பிரச்சனைகளை புறச் சூழல் நிலமைகளுக்கு ஏற்ப அலசி ஆராய்வதல்ல. எல்லோருக்கும் தாங்கள் தங்கிக் கொள்வதற்கு வசதியான தரிப்பிடங்கள் தேவைப்படுகின்றன. அ.மார்க்சின் பிரச்சனையும் அதுதான்.

ஈழத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுகின்றனர், தமிழர் தேசியம் தலித்துக்களுக்கு விமோசனத்தைக் கொடுக்கப் போவதில்லை என்ற வாதங்களை சொல்லி வருபவர்களெல்லாம் ஒரு வகையான அடையாள விரும்பிகள்தான். இவர்களது கருத்துக்களில் ஒரு அடிப்படையான நேர்மை இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் தலித்தியம் என்பது வசதியாகக் கருதி ஒளிந்து கொள்வதற்கான ஒரு கூடாரமேயன்றி வேறொன்றுமில்லை. தங்களை எழுத்தாளர்களாகவும், புலிகளை விட நாங்களே முற்போக்காளர்கள் என்று பீற்றிக் கொள்வதற்கும் இவர்களுக்கு தலித்தியம் தேவைப்படுகிறது. இதற்காக தங்களது கடந்த கால அனுபவங்களை சிரமப்பட்டு நினைவுக் குறிப்புக்களாக எழுதி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகளை முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் நினைவு கொள்கின்றனர். உண்மையில் இவர்களது பிரச்சனை தங்களது அனுபவங்களை சொல்லுவதன் மூலம் தங்களை இன்றைய தலைமுறைக்குள்ளும் அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இவர்களிடம் இருப்பது வெறுமனே அடையாள விருப்பு நிலை மட்டுமே.

ஆழமாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளே இவர்கள்தான். ஏனென்றால் இவர்கள் கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்பவர்களின் பெயர் முற்போக்காளர்களோ அல்லது விடுதலை விரும்பிகளோ அல்ல. அவர்கள் பழமையின் ரசிகர்கள். இன்று ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை அன்றுபோல் அப்படியேதான் இருக்கின்றது என்பவர்களும், தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் ஏற்பட்ட உடைவுகளை சுட்டிக்காட்ட தயங்குபவர்களும் சாதி என்னும் அழிந்து போக வேண்டிய பழமையின் ரசிகர்களே அன்றி அதன் மறுப்பாளர்கள் அல்ல என்பதே எனது நிர்திடமான வாதம்.

4

அதற்காக நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது, தலித்தியம் என்று சொல்லப்படுவதையோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான பிரச்சனைகளையோ நான் மறுப்பதாக. ஈழத்தில் சாதியம் வலுவாக இருந்ததையும் இப்பொழுதும் திருமணம், சடங்கு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அது உயிர்பெறுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அது முன்னைய இறுக்கத்துடன் இருக்கிறது என்று வாதிடுவது சுத்த பம்மாத்து என்பதுதான் எனது துனிபு. இப்படியான பம்மாத்துக்களின் தோற்றுவாயைப் பார்ப்போமானால், தமிழக தலித்திய ஆய்வுகளையும், அங்குள்ள சாதிய அரசியல் அனுபவங்களையும் அரிச்சுவடிகளாக கொண்டு ஈழத்து அரசியலுக்கு விளக்கம் சொல்ல முற்படும் பொழுதுதான் இந்த பிரச்சனை எழுகிறது. தமிழக தலித்திய அரசியல் என்பது எந்தவகையிலும் ஈழத்து அனுபவங்களுடன் பொருந்திப் போகக் கூடிய ஒன்றல்ல. அது வேறு இது வேறு.

ஆனால் அதனை வலிந்து பொருத்த சிலர் மேற்கொண்ட தந்திரோபாயம்தான் ஈழத்து எழுத்தாளர் டானியலை தமிழக தலித்தியத்தின் முன்னோடி என்று அழைத்துக் கொண்டமையாகும். டானியல் ஒருபோதும் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று அழைத்துக் கொண்டவர் அல்லர். டானியல் தன்னை இடதுசாரி என்றே அழைத்துக் கொண்டார். ஆனால் டானியலின் பிரதான கருத்து நிலை யாழ்ப்பாண சாதிய மரபிற்கு எதிரானதாக இருந்தது. அன்றைய சூழலில் அது முற்றிலும் சரியானதுதான். இதற்கு டானியல் சார்ந்திருந்த சீனசார்பு இடதுசாரி கட்சியின் தீண்டாமை ஒழிப்பு நிலைப்பாடும், டானியலின் தனிப்பட்ட அனுபவங்களும் காரணங்களாக இருந்தன. அதற்காக அது எல்லா காலத்திற்கும் சரியாகத்தான் இருக்குமென்று வாதிடுவது அறிவுடமையன்று.

அ.மார்க்ஸ் இன்னொரு பெரிய கண்டுபிடிப்பையும் செய்திருக்கிறார். “ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”. இது ஒரு அபத்தமான வாதம். இந்த வாதத்திற்கு ஆதாரம் சேர்க்க அவர் காட்டியிருக்கும் உதாரணமோ எம்.ஆர்.ஸ்டாலின். சமீபத்தில் ‘இனி’ என்னும் இணையத்தில் இந்த ஸ்டாலின் தற்போது பிள்ளையானின் ஆலோசகராக தொழிற்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான ஒருவர் ஏன் கிழக்கு பற்றி பேசுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு அ.மாவிடம் சுயசிந்தனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இப்போது அ.மார்க்ஸ்சின் தேவை தங்குவதற்கு ஒரு கூடாரம். சில புலம்பெயர்வாதிகள், புலி எதிர்ப்பு என்ற பேரில் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகளையே எதிர்ப்பவர்கள் அந்த கூடார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அவர் வசதியாக அந்த கூடாரத்தில் இருந்தவாறு ஈழத் தமிழர் தேசிய எதிர் அரசியலுக்கான மதிஉரைஞர் வேலையை செய்து வருகின்றார். ஏனென்றால் இது வசதியானது. ஆனால் பழ.நெடுமாறன் செய்வதோ அல்லது ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்படும் தமிழக செயற்பாட்டாளர்கள் செய்வதோ கடினமானது. அதற்கு அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் தேவை. அவர்களுடன் இணைந்து கொள்வது அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு முடியாத காரியம். ஆனால் அதனை விமர்சிப்பது இலகுவானது. அதனால்தான் அவர்களது செயற்பாடுகளை எந்த குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளுக்கான முகவர் வேலையென கூறுகின்றார் அ.மார்க்ஸ். இப்படி கூறும் அ.மார்க்ஸ், அவர்சார்ந்த இன்னும் சிலருக்காக முகவர் வேலை செய்து கொண்டிருப்பதை ஏனோ மறந்துவிட்டார் போலும்.

- தாரகா (t.tharaga@yahoo.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
venkat
2009-03-24 10:11:00
venkatss2000@gmail.com

Good review. As the author said we have to take in consideration the prevailing societal at that point of time before critising any conflict situation. We can't keep blaming for what happened in past. In the same way that time they insisted on separate Ealam, but the prevailing conditions at present shows that it is impossible. So lets sideline LTTE and start talking poliitcal solution for the benefit of TAMILS and other minorities in srilanka. LTTE can never find a solution to the conflict. Even though srilankan govt is a group of racist rascals, LTTE is making things more worse.Before critisicing A.MArx, the author should read some basic reading about srilanka rather then talking emotionally.

surya
2009-03-24 10:15:00
surya2007@yahoo.com

dear tharaga,I agreed with marx.once upon a time I have great respect and affection on Pirabakaran,afterwards i realize the truth,that pirabakarans path does not give soluation the tamilians in srilanka.Especialy they murdered Rajeev,I am not a congressman,But i cannot forget the helps that india and indira do for srilanka tamilians.What is the neccessary to them to kill rajeev ,is he a cruel leader?.In tamil nadu some leaders acting that they are supporting L.T.T.E. if they have truly supported ltte ,how they support jeyalalith.And if they love and fight for Tamilians ,they can not do anything in pappapatti,keeripatti,thinniyam,uthappuram.In their view dhalits are not tamilians,I kindly ask Vaiko if he is ready to fight against untouchability in Tamilnadu,espec ialy in south districts,particularly in virudhunagar district,if he do his party peoples can not give water to him.So we have not take decission uppon centiment,.I like to write tomany,but i do not know how to type in tamil.

கண்ணன்
2009-03-25 12:42:00
kannanmaha@ymail.com

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம். அதன் இலக்கு சிங்கள மேலாதிக்கத்திலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிப்பது. அதாவது தமிழர்களுக்கென்று ஒரு சுயாதீனமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும். முதலில் அது நிகழ்ந்து முடியட்டும் பின்னர் அதில் இடம்பெற வேண்டிய அகநிலை மாற்றங்கள் குறித்து நாம் பேசலாம்.

மார்க்ஸ் போன்ற அறிவாளிகளுக்கு சிறந்த பதில் ... வாழ்த்துகள் ...

உறையாடு
2009-03-25 01:31:00
uraiyaadu@gmail.com

அ.மார்க்சின் பேட்டியை நானும் படித்த்தேன். அந்த பேட்டி எடுக்கப்பட்ட விதமும் எழுதப்பட்ட விதமுமே ஈழ விடுதலைக்கும் தமிழ்த் தேசீய சிந்தனைக்கும் எதிரான ஒன்றாகத்தான் சி.பி.எம் மன நிலையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களை தோலுறுக்க சரியான ஆள் யார்? அவர் கட்சிக்காராராகவும் இருக்கக் கூடாது அதே சமயம் சிந்தனையாளராகவும் இருக்க வேண்டும் என்ற முன் முடிவோடு எடுக்கபப்ட்ட நேர்காணல் அது. ஏனென்ற்லாம் பேட்டி கொடுத்தவரை விட பேட்டி எடுத்தவர் .அ.மார்க்சை தனது சிந்தனைகளுக்கு ஏற்ப்ட பயன்படுத்தியிருக்கிறார். கேள்விகளில் பல. திவீர இடதுசாரி மாவீயிஸ்ட் நக்சல்பாரித் தோழர்களை இழிவு செய்வதோடு,,,, ஈழம் என்கிற கருத்துருவையே சிதைக்கிறது. மார்க்ஸ் தனது அறிவின் வன்முறையை அழிந்து கொண்டிருக்கும் மக்கள் மீது காட்டியிருக்கிறார். தமிழர்கள் எங்கு கூடி வாழ்ந்தாலும் அது சைவத்தாலும் வைணவத்தாலும் கறைபட்ட வாழ்வாகவே இருக்கும் இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இலங்கை என்னும் ஒரு தேசத்திற்குள் சிங்கள தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாழும் சூழல் அறுந்து போனது குறித்து மார்க்ஸ் என்ன கருட்து கொண்டிருக்கிறார், என்று தெரியவில்லை. அது போல இலங்கை பேரினவாதத்தின் மூல முதலாளியாக இருக்கும் மேற்குலகையும் இன்றைய இனப்படுகொலைக்கு அடித்தளமாக இந்தியா குறித்தும் மௌனம் சாதிக்கிற மார்க்ஸ். அன்றைக்கு நடந்த சகோதரப் படுகொலைகளின் உண்மையான காரணிகளையும் இந்தியாவின் பங்கு பற்றியும் பேச மறுப்பது ஏன்? பின நவீனத்துவ கதையாடலில் எளிய அறம் என்றொரு சிந்தனை உண்டு. அது நமது சந்தோசங்கள், உணர்வு பூர்வமான உறவு முறைகள், அந்த உறவுகளுக்காக மெனக்கெடுதல், மாய்த்துக் கொள்ளுதல் என்பனவெல்லாம் இந்திய பேர் அறத்திற்கு மாற்றான சிறு அறங்கள்தான். அந்த அந்த எளிய செண்டிமெண்டல் வடிவம்தான் இப்போது ஈழத்துக்காக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதை பின்நவீனத்துவ புலி அ,மார்க்ஸ் ஏன் புரிந்து கொள்ள வில்லை எனத் தெரியவில்லை.

விடுதலை
2009-03-25 03:23:00
karkkivijay@gmail.com

கருத்து சொல்ல வந்த தாரகாக்கு .

தவிர்க்க முடியாமல் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான தவறுகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.
ஈழத்தில் சாதியம் வலுவாக இருந்ததையும் இப்பொழுதும் திருமணம், சடங்கு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அது உயிர்பெறுவதையும் நான் மறுக்கவில்லை.

இந்த மாதிரி வெளிப்படையாக புலிகள் செய்துவருகின்ற துரோகத்தையும் பாசிச நடவடிக்கையும் அவர்களின் முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டையும் சாதி திமிரையும் ஒத்துக்கொண்டதர்க்கு நன்றி .

நான் பலமுறை சொன்னேன் என் நன்பர்களிடம் புலிகள் பயங்கிரவாதிகள். அவர்களுக்கு எல்லாம் தமிழ் பேசும் மக்கள் மீது எந்த அக்கரையும் இல்லை என்று ஆதோடு இங்கு உள்ளவர்கள் தமிழக புலிகள் அங்கே தமிழர்கள் கொள்ளப்படுகிறார்கள் என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லை அவர்களுக்கு புலிகளின் இருப்பு குறைவதுதான் கவலை.

shiva
2009-03-25 03:30:00
shivnamas@gmail.com

Dear Surya,

I disagree with your views. While Rajiv was on tour to Sri Lanka, one Sri Lanka Army man tried to kill him. Miraculously, Rajiv escaped, if he was not, would you suggest the Indian Army should initiate war against Sri Lanka and kill all the Sri Lankans. When Pakistani terrorists attacked Mumbai on 26/11, all Indians were shouting against Pak and urged the Govt. to start war with Pak. Is Tamil people are not Indians? Need of the hour is to save the innocent people. Many infant children died without milk. What those small infant did? If you get a chance, please read (Late) Mr. Lasantha Wikramsinghe's, (former Sri Lankan newspaper editor) editorial before he was killed by Sri Lankan Govt. For your information, he was close friend to Rajapakse. Lasantha clearly told that killing one ethnic community will not bring peace in the country. LTTE is not a robbery organization to put a bomb and wiped them off. They are fighting for their liberation. Rajapakse doing historical error thinking that he can completed wipe off Tamil people. He can kill 10 tigers, but 100 tigers will born.

Paruthi
2009-03-25 03:41:00
toparuthi@hotmail.com

Good article. I want ask one question to Surya. Surya are u still belive the Rajiv is a good person. He killed more 10000 your people and destroy lote of people eelam people. If it is the case LTTE killed(they are not still agreed), that is also correct in their view. I think u didn't understood the situvation. Just realize if any one person affected in your family through Rajvu GUNDAS(called militry). What is the soultion u will give. U want say he is my PM or he is my........think please

NAGASUNDARAM>R
2009-03-25 06:28:00
puduvaignanakumaran@gmail.com

தாரகாவின் கட்டுரை ஈழப் புலிகளின் திருத்த முடியாத வரலாற்றுப் பிழைகளை எல்லாம் மிக எளிதாக நியாயப் படுத்துகிறது.மற்ற போராளிகளை எல்லாம் எந்த மனித நேயமும் இல்லாமல் ஆதிக்க முனைப்புடன் கொன்று ஒழித்த செயலின் காரணத்தை மிகச் சாதாரணமாக மற்றவர்கள் மீது சுமத்துகிறது.ஈழ எழுத்தாளர் டேனியலின் எழுத்தை கொச்சைப் படுத்துகிறது.மார்க்ஸ் நீண்ட நாட்களாக ஈழப் பிரச்சனையை வெறும் பார்வையாளராய் இல்லாமல் வரலாற்று உணர்வோடு பரிசீலித்து வருபாவர்.
அவர் மார்க்சிஸ் டுகளை மகிழ்விப்பதற்காக மட்டுமே எதையாவது கூறுபவர் அல்லர்.அதிலேயே மார்க்சிஸ் துகளின் கருத்துகளுக்கு எதிரானவற்றை யும் பதிவு செய்துள்ளார்

Sarvachitthan
2009-03-25 06:05:00
sarvachitthan@gmail.com

Thaaraka's reply to Mr Marx is resonable and 'eye-opening'. I don't understand, why respected people like Marx become prey to injustifiable arguments about Eelam struggle?
Please keep away yourself if you couldn't help the Tamils who are fighting to liberate their Mother land from chauvanist Sinhala Rulers,please don't discourage them by throwing stones on them when they are wounded.
Eelam Tamils should have a place to be in peace even to listen your advices.
I would like to remind that "Tamil Eelam" idea was brought up by the "Eela Ganthi" Thantai Selva during 1977 General election and already won 2/3 majority of Tamil speaking people in North and Eastern provinces.There is no need to have another voting among the Tamils in Sri Lanka under the military Rule of Sinhala Army which won't bring justice to Tamils.

Dr. V. Pandian
2009-03-25 09:45:00
porkkaiponds@yahoo.co.in

அ.மார்க்ஸ் மா. லெ குழுவைச் சேந்தவர். இவர்களுக்கெல்லாம் ஒரு தனித்தன்மை உண்டு. நிறைய படித்திருப்பார்கள். மற்றவர் எதைச் சொன்னாலும் அதை சீர்தூக்காமல், அதற்கு ஒரு எதிரான நூண் விளக்கத்தைக் (அபத்தமான) கொடுத்து, தாங்கள் அதி மேதாவிகள் என்று நிறுவுவார்கள்.

மா. லெ க்குழு என்பதைவிட 'மாலைக்குழு' என்று இவர்களுக்கு பெயரிடலாம். மாலை நேரங்களில் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு பொழுது போக்காய் அடுத்தவனை திட்டிக்கொண்டு வாழும் சுகப் பிரியர்கள்.

நேர்மையானவர்கள், உணர்வுள்ளவர்கள் ஈழத்தைப் பாரத்து மனவேதனைப் படுகின்றோம். ஆனால், இந்த மா. லெ க் குழுக்களுக்கு அந்த கட்டங்கள் தேவையில்லை. புலிகளின் மீதோ, ஈழ சமுதாயத்தின் மீதோ பழி சுமத்தி விட்டால், இவர்களது பொறுப்பு இயல்பாக கழிந்து விடுகிறது. இது ஒரு வகையான Escapism. பொருப்பிலிருந்து தன்னை விடுவித்து, மன உளைச்சலில்லாமல் வாழ, கருணைகாட்டப்பட வேண்டியவர் மீதே பழி போடுவது என்பது ஒரு கடைந்தெடுத்த அயோக்கயத்தனம். ஈழத்திற்காக சிந்தித்தால், செயல்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம். சீமான், கொளத்தூர் மணி சிறையில்! இந்த மா. லெ.களுக்கு அந்த தொந்தரவெல்லாம் இல்லை. இப்போது புரிகிறதா?

இவரை, மக்கள் தொலைக்காட்சியில் பிரபஞ்சன் அவர்கள் வானலாவ புகழ்கிறார். அவர் ஒரு அசட்டு மனிதர் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?

ஐயா வெங்கட், சூர்யா மற்றும் விடுதலை என்ற பார்ப்பன அன்பர்களே, ஈழம் உங்கள் சம்பந்தப்பட்ட சிக்கல் அல்ல. நாம் சம்பந்தம் இல்லாத சிக்கல்களில் இருந்து விலகி இருப்பது தான் நாகரிகம்.

ஈழமும் பிறக்கும், தனித்தமிழ் நாடும் பிறக்கும்.

தனித் தமிழ் நாடு பிறக்கும் போது நீங்கள் உங்கள் உரிமைகள் பற்றிப் பேசினால் அது பொருத்தமாக இருக்கும். இப்போது உங்களின் வேலைகளை மட்டும் கவனியுங்கள்.

Makizhn
2009-03-26 02:30:00
g.pandi@neurosurg.wisc.edu

Communists are wearing mask and will not follow Lenin who never protest against liberation based on languages, culture and traditions. When Finnish people want to leave from the Soviet Union, Lenin did not express displeasure and acknowledged Finland as an independent nation. These comrades never recognize Eelam struggle and always insists on Ilangai Unity. Even these peoples following hidden Hindudva to translate India to dominant and influential nation as like USA. Same time, they will raise a voice against USA supremacy.

Even though A. Marx is a good writer, as far as Eelam concern, is lopsided man. Though communism is better for life, because of these kinds of peoples, we are loosing faith.

Dr.S.Thiru
2009-03-29 09:08:00
s.thirumugam@gmail.com

நன்றி தாரகா அவர்களே!

சிறப்பான எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள். அந்த நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் ஒரு திட்டமிட்ட அரசியல் பின்புலத்துடன் கூறப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது.

பாண்டியன் அவர்களே,

தகவலுக்கு நன்றி. இந்த அமார்க்சு என்பவர் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை. இவரது இளையராசா பற்றிய அரைகுறை ஆய்வு பற்றி முதன் முதலாக வே.மதிமாறன் இணைய தளத்தின் மூலமாக 'இளையராசா பற்றி அமார்க்சு + தீராநதி அவதூறுகள்' - "http://mathimaran.wordpress.com/2009/03/18/article-177/"அறிந்தபோது சிற்றிதழ்களில் விமர்சனம் எழுதும் எழுத்தாளர் என்றுதான் நினைத்திருந்தேன். இவர் மா லெ இயக்கங்களை சேர்ந்தவர் என்பது இப்போதுதான் அறிந்தேன்.

எந்த ஒரு விடயத்தைப் பற்றி அதிலும் குறிப்பாக சமூக, அரசியல் தளங்களைப் பற்றிய ஆய்வு, விமர்சனம் என்று வருகிற போது, விடயத்தை தீர ஆராய்ந்து, அதைப் பற்றிய பல்வேறு தகவல்களை வாசித்து, அறிவியல் வழி நடு நிலை வழுவாது முடிவுகளுக்கு வரவேண்டும் என்பது ஆராய்ச்சி மாணவர்களின் பால பாடமாகும். ஈழப் போராட்ட வரலாறு பற்றிய துல்லியமான தகவல்கள் இந்தியாவில் இன்றைக்கு புத்தக வடிவில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இணையத்தில் சிறிது முயற்சி எடுத்துத் தேடினால் குறிப்பாக பேராசிரியர் சசி.சிரீ கந்தா அவர்களின் இணைய தளத்தில்- "http://tamilnation.org/forum/sachisrikantha/index.htm" ஈழப் போராட்டம் பற்றிய ஆய்வுகள் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் ஏராளமாய் தொகுக்கப் பட்டுள்ளன. மனசாட்சி உள்ள எந்த ஒரு மனிதனும் ( அவன் இடதாக, வலதாக, பின் நவீனத்துவவியாதியாக, முற்போக்கு வியாதியாக அல்லது வேறு என்ன எழவாகவோ எப்படியாக இருந்தாலும்) ஈழ வரலாற்றை முழுமையாக அறிந்தால் இப்படி கீழ்த்தரமான கருத்துகளை கொள்ள மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவில் ஈழ வரலாறு பற்றிய கருத்தாக்கம் இங்குள்ள அறிவுலக வியாதிகளால் திட்டமிட்டு திரித்துக் கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் ஈழம் என்பது பாரதம், இந்தியம் அல்லது பார்ப்பனிய கருத்தாக்கத்துக்கு எதிர்ப்பான திராவிடம் அல்லது தமிழத்தின் ஈராயிரம் ஆண்டுகாலப் போராட்டத்தின் உச்ச கட்டமாகும்.

பிறிதொரு இணையத் தளத்தில் கூறியுள்ளது போல 'அமார்க்சு'வின் செவ்வி 'அரைலூசுத்தனமானது எனக் கருத இயலாவிட்டாலும், அதே இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ள இன்னொரு கருத்து ஆழ்ந்து நோக்கத்தக்கதாகும்."நன்றாக ஆய்ந்து பார்த்தால் தமிழனை கெடுத்தது பார்ப்பனர்கள் மட்டுமா அல்லது அடுத்தவனும்(அதாவது அடுத்துள்ளவனும் அதவாது பக்கத்தில் இருக்கும் தேசிய இனங்களும் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தெலுங்கர்களும், கன்னடர்களு, மலையாளிகளும்) சேர்ந்து கெடுத்தானா என்று ஆராயவேண்டியுள்ளது. " http://kuzhali.blogspot.com/2009/03/blog-post_21.html" தற்போதைய சூழலில் ஈழம் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவருமே அரசியலில், அறிவுலகில்,சமூகத்தில் சந்தித்துக் கொண்டுள்ள, சந்திக்க வேண்டிய சிக்கல் நிறைந்த, பன்முக சவால்களை மேற்கூறிய வாசகம் குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

மாமனிதன், பேராசான் 'மார்க்சு'வின் பெயரை செவ்வியாளர் தன் பெயராகக் கொண்டுள்ளது ஒரு வேதனையூட்டக் கூடிய விடயம்தான். அவர் பெற்றோர் வைத்த பெயராக இருந்தால் மன்னிக்கலாம். தனக்குத்தானே வைத்துக் கொண்ட புனைப் பெயராக இருந்தால் 'அநாகரிகம்', 'அனர்த்தம்' என்கிற வகையில் தான் இவரது பெயரையும், கருத்துகளையும் கருத வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP