Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழத்தமிழர்களே! இனவுணர்வு வியாபாரி (ஓவியர்) புகழேந்தி வருகிறார்... உஷார்!!
'கீற்று' நந்தன்


கிராமத்தில் அம்மா கோழிகளுக்குத் தீவனமிடுவதைப் பார்த்திருக்கிறேன். கோழிகளை அழைப்பதற்கு என்றே பிரத்தியேகமான சத்தமொன்றை வைத்திருப்பாள். அந்த சத்தத்தைக் கேட்டவுடன் கோழிகள் தத்தமது குஞ்சுகளுடன் ஓடிவரும். அம்மா தரையில் விசிற விட்டிருக்கும் தானியங்களை ஆர்வமாக பொறுக்கித் தின்னும். சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அம்மா உள்ளே சென்று விடுவாள். அந்த நொடிக்காகவே காத்திருந்ததுபோல எங்கிருந்தோ சில காக்கைகள் பறந்து வரும்; கோழிகளுக்கு இடப்பட்டிருந்த தானியங்களை ஓரமாக நின்று கொத்த ஆரம்பிக்கும். கோழிகள் இதைப் பார்க்காதவரை காக்கைகள் திருட்டுத்தனமாக தீவனத்தை தின்றுகொண்டிருக்கும். ஏதாவது ஒரு கோழி இதைப் பார்த்து, லேசாக ஓர் அசைவு மேற்கொண்டாலே போதும், காக்கைகள் பறக்க ஆரம்பித்துவிடும். அத்தகைய காக்கைகளில் ஒருவர்தான் ஓவியர் புகழேந்தி.

Pukalenthi இந்த இனமானப் புலியின் ‘ஈழத்தமிழர்கள் பாசத்தைத்தான்’ இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இனவுணர்வை விற்று காசு பார்க்கும் வேஷத்தை அண்மையில்தான் அறிய முடிந்தது.

ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தகவல்தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தோம். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, ஈழத்தமிழர்களின் மீதான சகோதர உணர்வினால் உந்தப்பட்டு நடந்த போராட்டம் அது. ஈழப்பிரச்சினையின் வரலாறு, சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை இந்தத் தலைமுறை இளைஞர்கள் உணரும் வகையில் நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பழ.நெடுமாறன், இராசேந்திர சோழன், பேரா.கல்யாணி, சுபவீ, தியாகு, விடுதலை இராசேந்திரன், ஜெகத் கஸ்பார், சீமான், அருள்மொழி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சி.மகேந்திரன் (சிபிஐ), உமாபதி (திமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), வைகோ (மதிமுக) ஆகிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

இந்தப் போராட்டத்தின் பிறிதொரு நிகழ்வாக, போராட்ட இடத்தில் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து ‘தொடர் ஓவியம் வரைதல்’ என்ற நிகழ்வையும் நடத்த இளைஞர்கள் விரும்பினார்கள். இதற்கு யாரை அணுகலாம் என்று தோழர் தியாகுவை, போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்த நண்பர்கள் கேட்டார்கள். அவர் வீரசந்தானம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தார். நண்பர்கள் புகழேந்தியைப் போய் பார்த்தனர்.

அவர் தனது வீரப்பிரதாபங்களை மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். பேச்சின் முடிவில், ‘போராட்ட இடத்தில் வரைந்தால், சத்தம் அதிகமாக இருக்கும்; ஓவியம் நன்றாக வராது. நான் இங்கேயே வரைந்து கொண்டு வருகிறேன்; மொத்தம் ரூ.10,000 செலவாகும்’ என்று கூறி அந்தத் தொகையையும் சில நாட்களில் வாங்கியிருக்கிறார். நல்லவேளை, எங்காவது வெளிநாட்டிற்குப் போய் உட்கார்ந்தால்தான் நல்ல பாடல்கள் வரும் என்று சினிமா இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பதைப் போல அரைக்கவில்லை. இவர்களிடம் இதற்கு மேல் கறக்க முடியாது என்ற நினைத்தாரோ என்னவோ பத்தாயிரத்தோடு நிறுத்திவிட்டார். இத்தனைக்கும் அரசுக்கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.

‘புகழேந்தி என்பது காரணப்பெயர்தான். எப்போதும் தனது புகழை தானே ஏந்திக்கொண்டு திரிவதால் அப்படிப் பெயர் இருப்பது முற்றிலும் பொருத்தமே’ என்ற ஒரு பேச்சு அவரை அறிந்தவர்கள் மத்தியில் இருப்பதோ, கடந்த ஆண்டு அவர் வேலை பார்க்கும் அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஒரு வாரம் நடத்திய போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று - ‘புகழேந்தியை இடமாற்றம் செய்யவேண்டும்’ என்பதோ தகவல்நுட்பத் துறை இளைஞர்களுக்குத் தெரியாது. மாநாடுகள், போராட்டங்களில் ஓவிய நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அதனால் புகழேந்தியை முழுக்க நம்பினார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் முதல்நாள் புகழேந்தியின் ஓவியம் வரவில்லை. இரண்டாம் நாள் ஓவியம் வந்தது. கூடவே அவரும். ‘ஓவியம் இன்னும் ஈரம் காயவில்லை’ என்று கூறி, அதை பார்வைக்கு வைத்தார். மாலையில் அவரது மாணவர்களை அனுப்பி அதே ஓவியத்தை திரும்ப எடுத்துக் கொண்டார். ஓவியம் எங்களுக்கு வேண்டும் என்று நண்பர்கள் சிலர் கேட்டபோது, ‘இவ்வளவு பெரிய ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது; இதை நான் கண்காட்சிகளில் வைக்கப் போகிறேன்’ என்று காரணம் கூறினார்.

உள்ளேயிருந்த பூனை வெளியே வந்துவிட்டது. கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு, ‘ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்று. இவர் ஓவியக் கண்காட்சி வைப்பதற்கு, ஊரில் உள்ளவர்களை ஏமாற்றி காசு கறந்திருக்கிறார்.

பிரச்சினைகளைச் சார்ந்து நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஓவிய நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓவியப் பலகை, தூரிகை என தேவையான பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஓவியர்கள் மருது, விஸ்வம், நெடுஞ்செழியன் என பிரபல ஓவியர்கள் யாரேனும் வந்து ஓவியம் வரைவார்கள். பிரச்சினைகளைச் சார்ந்த தங்களது உணர்வினை வெளிப்படுத்துவார்கள். மக்களுக்காக வரையப்பட்ட அந்த ஓவியங்கள் மக்களுக்கானதே என்ற எண்ணத்தோடு, தாங்கள் வரைந்த ஓவியங்களை நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த ஓவியர்கள் யாரும் அதை அளப்பரிய செயலாக பெருமை பேசுவதில்லை; தங்களது சமூகக் கடமைகளில் ஒன்றாகவே அதைக் கருதி அடுத்த வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

ஆனால் தமிழினத்திற்காக வேலை பார்ப்பதையே தனது பிறவி இலட்சியமாகக் கூறிக் கொண்டு திரியும் புகழேந்தி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தனது புகழ் பாடுவதற்கும், அதையே முதலீடாக வைத்து பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்.

I.T. ஆட்கள் என்றால் 5000 ரூபாய் வாடகையை 10000 ரூபாயாக ஏற்றிச் சொல்லும் வீட்டுத் தரகர்களுக்கும், 10 ரூபாய் பொருளை 100 ரூபாய்க்கு விற்கும் கடைக்காரர்களுக்கும் புகழேந்திக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்களையாவது ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம், இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆனால் புகழேந்தி பேசுவது தமிழர் விடுதலை, கொள்ளையடிப்பது தமிழர்களின் பணம்.

புகழேந்தியின் இந்தச் செய்கை குறித்து தெரிந்தபின்பு, பணம் கொடுத்த நண்பர்களிடம் இது குறித்துப் பேசினேன். ‘புகழேந்தி நம்மை ஏமாற்றியிருக்கிறார். ஒன்று நாம் பணத்தை வாங்க வேண்டும் அல்லது ஓவியத்தையாவது அவர் தர வேண்டும்’. ‘எப்படிக் கேட்பது?’ என நண்பர்கள் தயங்கினார்கள். அதன்பின்பு புகழேந்தியை நானே தொடர்பு கொண்டு பேசினேன்.

“ஒரு ஓவியத்திற்கு 10,000 ரூபாய் என்பது அதிகம். போராட்டத்திற்கான செலவு அதிகமாகி விட்டது. மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு உங்களுக்கே ஆகியிருக்கிறது. ஒரு ஓவியத்திற்கு நிச்சயம் இவ்வளவு ஆகாது. எனவே மீதிப் பணத்தைக் கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்”

“மீதியா? மொத்தம் 13,500 ரூபாய் ஆகியிருக்கிறது. என் கையிலிருந்து 3500 ரூபாய் போட்டிருக்கிறேன்.”

“13,500 ஆகியிருக்கிறது என்றால், அதற்கான செலவுக்கணக்கை கொடுங்கள். மீதிப்பணத்தைக் கொடுத்து ஓவியத்தை எடுத்துக் கொள்கிறோம்.”

“நீங்கள் என்னிடம் பணம் கொடுக்கவில்லை, பணம் கொடுத்தவர்கள் வந்து கேட்கட்டும். நான் பேசிக் கொள்கிறேன். ஓவியத்தை திருப்பிக் கொடுப்பது குறித்து யோசித்துச் சொல்கிறேன். அந்த ஓவியத்தை நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்?”

“நாங்கள் அடுத்தடுத்த போராட்டங்களின்போது அந்த ஓவியத்தை பயன்படுத்தவிருக்கிறோம். பின்னர் ஓவியத்தை நல்ல விலைக்கு விற்க முடிந்தால், அதை ஈழ அகதிகள் முகாமிற்கு கொடுக்கவிருக்கிறோம்.”

“இந்த ஓவியத்தை அப்படியெல்லாம் பயன்படுத்த முடியாது. ரொம்பவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு கொண்டு சென்றால் அதன் மெருகு குறைந்துவிடும். இதை உங்களால் பாதுகாக்க முடியாது.”

“அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஓவியத்தை பத்திரமாகப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.”

“யோசித்துச் சொல்கிறேன்.”

Pukalenthi “நாளை அல்லது நாளை மறுநாள் உங்களிடம் பணம் கொடுத்த நண்பர்களோடு வருகிறேன். செலவுக்கணக்கை கொடுங்கள். வரவு செலவுக் கணக்கு பார்க்க எங்களுக்கு அது தேவை.”

அதோடு எங்கள் உரையாடல் முடிந்தது. உடனே தியாகுவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ‘முதலில் இரண்டு பேர் பேசினார்கள். இப்போது யாரோ ஒருத்தர் கணக்கு கேட்கிறார். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று பதறியிருக்கிறார். தோழர் தியாகு என்னைத் தொடர்பு கொண்டு, புகழேந்தி பேசியதைக் கூறினார்.

“இரமேஷ்! இது சம்பந்தமாக நீங்கள் வேறு யாரிடமாவது பேசினீர்களா?”

“ஆமாம். கவிஞர் ஜெயபாஸ்கரனிடம் பேசினேன்.”

“அவர் என்னிடம் பேசினார்; பின்பு வீரசந்தானம் பேசினார். செய்தி இப்படி வெளியே போய்க் கொண்டிருக்கிறது.”

“தெரியட்டும் ஐயா! புகழேந்தியின் உண்மை முகம் எல்லோருக்கும் தெரியட்டும். இனவுணர்வாளர் என்று நம்பி வந்தவர்களை ஏமாற்றி, இவர் காசு பறிப்பது உலகுக்குத் தெரிந்தால் நல்லதுதானே!”

“ஏமாற்றினார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

“போராட்டக் களத்தில் எப்படி ஓவியம் வரைவார்கள் என்பது எங்களது நண்பர்களுக்குத் தெரியாதபோது, அவர்களை வழிநடத்துவதை விட்டுவிட்டு, அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி 10,000 ரூபாய் வாங்கியதை ஏமாற்றுத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது? படித்தவர்களையே இவர் இப்படி ஏமாற்றுகிறார் என்றால், உணர்வாளர் என்று இவரை நம்பி, விஷயம் தெரியாத, படிக்காத அப்பாவிகள் யாராவது வந்தால் இவர் எந்தளவிற்கு ஏமாற்றுவார்?”

“என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. நான்தான் வீரசந்தனம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தேன். அவர்கள் புகழேந்தியைப் பார்த்திருக்கிறார்கள். அவர் என்ன பேசியிருக்கிறார், எவ்வளவு காசு வாங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இதை நாம் உட்கார்ந்து பேசுவோம். அதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசாதீர்கள்”.

புகழேந்தியிடம் செலவுக்கணக்கு கேட்கலாம் அல்லது ஓவியத்தை வாங்கலாம் என்று நண்பர்களை அழைத்தபோது அவர்கள் மிகவும் தயங்கினார்கள். ‘கொடுத்த காசை எப்படி கேட்பது? 10,000 ரூபாய் ஆகும் என்று சொல்லித்தானே வாங்கினார்?’ என்றார்கள்.

‘ஓவியம் வரைய எவ்வளவு ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, அதிகமாக சொல்லி பத்தாயிரம் ரூபாய் வாங்கியதே முதல் தப்பு. அப்படி வாங்கிக் கொண்டு, வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு போனது இரண்டாவது தப்பு. இப்போது எல்லாம் தெரிந்தபின்பு, சால்ஜாப்பு சொல்வது அதை விட பெரிய தப்பு.

இவை எல்லாவற்றையும் விட அவரிடம் பணமோ, ஓவியமோ வாங்க வேண்டியதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. சமூகத்தின் அநீதிகளை கண்டுப் பொறுக்காமல், அதை தட்டிக் கேட்கிற எண்ணத்துடனோ, அல்லது இருக்கிற சமூக அமைப்பை மாற்றியமைக்கிற நோக்கத்துடனோ நாம் வீதிக்குப் போராட வருகிறோம். அப்படி போராட வருகிற நம்மையே ஒருவர் ஏமாற்ற அனுமதிக்கிறோம் என்றால் அது நாம் போராடுவதற்கான நியாயத்தையே காலி செய்துவிடுகிறது’ என்று கூறினேன்.

நண்பர்கள் ரொம்பவும் நல்லவர்களாக இருந்தார்கள். ரொம்பவும் தயங்கினார்கள். என்னுடன் வருவதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பின்பு யாரும் இதுகுறித்து பேசவுமில்லை. புகழேந்தி ஓவியத்தைத் திருப்பித் தரவுமில்லை; செலவுகணக்கை சொல்லவும் இல்லை.

எனது நண்பர்களை ஒருவர் ஏமாற்றியதை அப்படியே விட்டுவிட என்னால் முடியவில்லை. அதன்பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, புகழேந்தி கூடிய விரைவில் ஐரோப்பிய நாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தவிருக்கிறார் என்று.

இப்போது எல்லாம் புரிந்தது. ஓவியக்கண்காட்சிக்கான ஓவியங்களை அவர் தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓவியங்களில் ஒன்றை, உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குக் கொண்டு வந்து வைத்துவிட்டு, திரும்பவும் அதை எடுத்துப் போய்விட்டார். இதற்கு எங்கள் மீது அவர் சுமத்திய பில் தொகை ரூ.10,000. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஊரெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள்; புகழேந்தி அதை வைத்து காசு சம்பாதித்திருக்கிறார். ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்திருக்கிறார்.

புகழேந்தியின் செய்கையைப் பார்க்கும்போது, ஆழிப்பேரலை தமிழகத்தைத் தாக்கியதே - அப்போது கரையோரங்களில் ஒதுங்கிய உடல்களில் இருந்த தங்க நகைகளை ஒரு சிலர் கொள்ளையடித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

அவர் இதை மறுப்பாரேயானால் தயது செய்து கீழ்க்காணும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லட்டும்.

1. போராட்ட இடத்தில் ஓவியம் வரைதல் என்பது எப்படி இருக்கும் என்று புகழேந்திக்குத் தெரியாதா? முதல்முறையாக போராட வீதிக்கு வந்திருப்பவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, நான் ஸ்டுடியோவில் வரைந்து அதை எடுத்து வருகிறேன் என்று கூறியது ஏன்?

2. ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடையில், 10X5 அளவிலான ஓவியத்தை வரையத் தேவையான பொருட்களின் விலையை விசாரித்தபோது 1500 ரூபாய்தான் ஆகும் என்று தெரிந்தது. வேறொரு ஓவியரிடம் விசாரித்தபோது அவரும் அதை உறுதிப்படுத்தினார். அப்படியிருக்க புகழேந்தி 10,000 ரூபாய் வாங்கியது ஏன்? கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் கேட்டால், நீங்களா என்னிடம் காசு கொடுத்தீர்கள் என்று மடக்குவார். நாங்கள் பேசாமல் போகவேண்டும்? சென்னைக்குப் புதிதாக வருபவர்களிடம், ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு 100 ரூபாய் வாங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

3. போராட்டங்களின்போது வரையப்படும் ஓவியங்களை, எந்த ஓவியரும் எடுத்துக் கொண்டு போகமாட்டார் என்பது புகழேந்திக்குத் தெரியாதா? தெரியாது என்றால், பொதுப்பிரச்சினைக்காக இதுவரை எந்தவொரு போராட்டத்திலும் அவர் ஓவியம் வரைந்ததில்லையா? இல்லை மக்களுக்காக வரைகிறேன் என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் பொய்யா?

4. ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது என்று சொல்லும் காரணம் சொத்தையானது. பாதுகாக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட ஓவியத்தை வரைந்தது ஏன்? போராட்ட இடத்தில் வைப்பதற்குத்தான் நம்மை நாடி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்தானே?

5. வரைந்தார், கொண்டுவந்து காண்பித்தார், திரும்பவும் எடுத்துக் கொண்டு போனார் என்றால், அதற்கு எதற்கு 10,000 ரூபாய்? போராட்ட இடத்தில் 8 மணி நேரம் வைத்து இருந்ததற்கு, 10,000 ரூபாய் மொய்ப்பணம் என்கிறாரா?

6. நெடுமாறன், இராசேந்திர சோழன், தியாகு, சுபவீ, சீமான், ஜெகத் கஸ்பார் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்கள் எல்லோரும் கருத்துக்களைத் தந்தார்கள். நீங்கள் ஓவியத்தைத் தந்தீர்கள். அவர்கள் ஒரு பைசா கூட வாங்கவில்லை. நீங்கள் பணம் வாங்கினீர்கள். அவர்கள் இனவுணர்வாளர்கள் என்றால், நீங்கள் இனவுணர்வு வியாபாரியா? நீங்கள் விற்பனை செய்வதற்கு ஈழத்தமிழுணர்வுதானா கிடைத்தது?

7. ஆதரவற்ற குழந்தைகளுக்காக கலைநிகழ்ச்சி நடத்தினால், அதில் கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். நீங்களும் அதேபோன்று, உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை முன்வைத்து உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் முன்பு ஓவியக் கண்காட்சி நடத்துகிறீர்கள். அந்தக் கண்காட்சிகளின் மூலம் கிடைக்கும் பணத்தை எந்த நல்ல காரியத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்? அப்படி ஏதும் செய்யவில்லையென்றால், குலுக்கல் நடனம் ஆடி புலம்பெயர்ந்த தமிழர்களை சுரண்டும் சினிமா நடிகர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

8. தனது ஏமாற்றுவேலை தெரிந்துவிட்டது என்றவுடன், ‘வேண்டுமானால் ஓவியத்தை எடுத்துப் போகச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். யாரும் இதைப் பற்றி பேசியிருக்காவிட்டால் அப்படியே அமுக்கி இருப்பீர்கள்தானே?

9. ‘ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு’ என்று பேசுபவர்கள் எல்லாம் காசுக்காகத்தான் பேசுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இங்கு இருக்கும்போது, தங்களின் செய்கை அதற்கு உரமூட்டுவது போலில்லையா? உண்மையான உணர்வாளர்களுக்கு நீங்கள் இழைக்கும் அநீதி அல்லவா இது?

10. இவை எல்லாவற்றையும் விட, நாள்தோறும் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதை விட, பிச்சை எடுப்பது மேலல்லவா?

பணம் கொடுத்த நண்பர்கள், ‘அவர் செய்தது தப்பு என்று தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்தை எப்படித் திரும்பக் கேட்பது?’ என்று சொல்கிறார்கள். அவர்களின் இந்தப் பெருந்தன்மைக்கு உரியவராக புகழேந்தி நடந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனை. இதை வெளியே சொல்வதற்குக்கூட அந்த நண்பர்கள் தயாராக இல்லை. கண்முன்னே நடக்கும் அநியாயத்தை கண்டும் காணாமல் இருக்க முடியாமல், கீற்று ஆசிரியராகத் தான் இதை நான் பதிவு செய்கிறேன்.

வெறும் 10000 ரூபாயை ஒரு பெரிய பிரச்சினையாக எழுதவேண்டுமா?

இன்னொருவர் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் எழுதித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இவரை ஓர் இனவுணர்வாளர் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுநாடாக அழைத்துக்கொண்டு போய் கண்காட்சி நடத்துகிறார்கள். இவர் என்னடாவென்றால், இனவுணர்வை தனது வியாபாரத்திற்கான முதலீடாகப் பயன்படுத்துகிறார். இதோ, ஈழத்தமிழர்களின் கொடுமைகளை ஓவியங்களாக வரைந்து, ஓரிரு மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கண்காட்சி நடத்தவிருக்கிறார்; அப்பாவித்தமிழர்களை சுரண்டவிருக்கிறார்.

உலகத்தமிழர்களே! உங்களது உணர்வை வைத்துப் பணம் சம்பாதிக்கும் புகழேந்தியிடம் கவனமாக இருங்கள்! இல்லையென்றால் அவரது ஓவியத்தோடு உங்களையும் சேர்த்து விற்றுவிடுவார்...

- 'கீற்று' நந்தன் (editor@keetru.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
தமிழ்நதி
2008-12-30 09:09:00
tamilnathy@gmail.com

ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருக்கிறது இரமேஷ்.

Dr. V. Pandian
2008-12-30 11:11:00
porkkaiponds@yahoo.co.in

இந்தக் கட்டுரைக்கு புகழேந்தி விடை கூறியாக வேண்டும். இந்தக் கட்டுரைக்கு பின்னூட்டலாகவோ அல்லது தனிக்கட்டுரையாகவோ, அவர் கட்டாயம் எழுதவேண்டும்.

இல்லையென்றால் அவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர்.

கருனாநிதியை தி.மு.க காரர்கள் அன்றே கேள்வி கேட்காததால் தான், இன்று அவர் 'அம்முறையில் வளர்ந்து', தமிழின துரோகியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளார்.

பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் நேர்மைக்கு புறம்பாக செயல்படும்போது, முளையிலேயே கிள்ள வேண்டும்.

Hero Worship என்றுமே கூடாத ஒன்று.

.......................................மாட்சியில்
பெரியாரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

என்ற கணியன் பூங்குன்றனாரின் சங்ககால சாகாக் கவிதை வரிகள் என்றென்றும் நமது வழிகாட்டியாக விளங்கவேண்டும்.

s.g.rameshbabu
2008-12-31 02:26:00
sgrbabu@yahoo.com

கீற்று நந்தன் வணக்கம் இன்னும் நிறைய கூத்து இலங்கை பிரச்சிணையில் உள்ளது காத்திருக்கவும்

sundaram
2008-12-31 02:36:00
sundaram231@ymaill.com

இனவிரோதிகளாக வெளிப்படையாகத் தெரியும் தினமலர், இந்து, காங்கிரஸ்காரர்களை விட ஆபத்தானவர்கள் கூட இருந்து குழிபறிப்பவர்கள். தன்னை நம்பி வந்தவர்களின் கழுத்தறுப்பதை விட மோசமான செயல் வேறு இருக்க முடியாது. இத்தகையவர்கள் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

seenivasan
2008-12-31 02:48:00
seenivasan_mu@yahoo.co.in

போராட்டக் களத்திற்கு புதிதாக வரும் – IT மக்களைப் போன்றவர்களை ஏமாற்றுவது முளையிலேயே அவர்களை கிள்ளி விடும் செயலாகும். அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் புகழேந்தி, இதை இலவசமாக செய்து கொடுத்திருக்கலாம். The Federation of Tamil Associations of North America (FeTNA) அமைப்பினர் ஒரு மலர் தயாரிக்கும் பொறுப்பை புகழேந்தியிடம் கொடுத்தபோது, அளவுக்கதிமாக பில் கொடுத்து அவர் பணம் சம்பாதிக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது IT மக்கள். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல

mani
2008-12-31 03:53:00
manikandan_yarl@gmail.com

ஈழத்தமிழர் விவகாரத்தில் கருணாநிதி, சுபவீயைக் கண்டித்து தனது பத்திரிகையில் எழுதும் தியாகு, அடுத்த மாத இதழில் புகழேந்தியின் ஏமாற்றுத்தனம் குறித்தும் எழுதுவாரா? அப்படி எழுதினால், அவரை வரவேற்கலாம். இல்லையென்றால் சுபவீயை விமர்சிப்பதில் அவருக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளவே வாய்ப்பிருக்கிறது.

ranjit, paris
2008-12-31 05:30:00
createsumo_2@yahoo.co.in

நானும் நீண்டநாட்கள் புகழேந்தியை ஒரு புலி என்றுதான் நினைத்திருந்தேன். அவர் ஒரு முறை வாய் திறந்தபோது மியாவ் என்ற சத்தம் வந்தபோதுதான் உணர்ந்தேன், அவர் பூனை என்று. இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று காத்திருந்தேன். நந்தன், கடைசியில நீங்கள் கட்டிவிட்டீர்கள். Well done

Ranjit,
Paris

விடுதலை
2008-12-31 05:44:00
karkkivijay@gmail.com

நாள்தோறும் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதை விட, பிச்சை எடுப்பது மேலல்லவா?
அதைத்தான் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் இனவுஉணர்வை சொல்லி காசு பறிப்பதும் .ஓட்டு பறிப்பதும் கேவலமாக இருக்கிறது.

Magee
2008-12-31 05:47:00
magee1978trin@yahoo.com

Greetibgs to Brave Nanthan,, Pukalenthy has to be reply for it , if he remain silent It means that he accept all...
well done Nanthan, (sorry I don´t have Tamil fonts)
we all will have an attention about him in Europe

யதீந்திரா
2008-12-31 06:17:00
jathindra76@yahoo.com

தகவல் ஆச்சரியத்தைத் தருகிறது. புகழேந்தி பற்றியும் அவரது ஈழ ஆதரவு நிலைப்பாடு பற்றியும் அறிந்திருக்கிறேன். அவரது ஓவிய வெளிப்பாடுகளை அதிகம் பார்க்காதபோதும் அவர் மீது ஒரு தனி மதிப்பே இருந்தது. ஆனால் அந்த மதிப்பை கலைத்து போடுவதாக இருக்கிறது உங்கள் தகவல். நான் இந்த இடத்தில் அச்சப்படுவது இன்னும் எத்தனை ஆச்சரியங்களை நாம் பார்க்க வேண்டி வருமோ என்றுதான். ஆச்சரியங்கள் எமக்கு ஒன்றும் புதியவையுமல்ல. எல்லாவற்றையும் எதிர்கொண்டவாறு பயணிப்போம். தமது நிலைப்பாட்டில் தெளிவுள்ளவர்கள் இது பற்றி அலட்டிக் கொள்ள ஏதுமில்லை. இன்னும் எத்தனையோ ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன. சந்திப்போம் நன்பர்களே.

Albert Fernando
2008-12-31 09:49:00
albertgi@gmail.com

மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி இது. இப்படிப்பட்டவர்களை சமூகத்தின் முன் தோலுரித்துக் காட்டிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் உடனடியாக புகழேந்தியை அழைத்து கண்காட்சி நடத்துவதை நிறுத்தவேண்டும். புகழேந்தியை தமிழ் இன உணர்வாளர்கள் எவரும் எக்காரணம் கொண்டும் அழைத்து கண்காட்சி நடத்துவதை புறக்கணிக்கவேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! இவர் புகழேந்தி இல்லை;இகழேந்தி!
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.

மு.குருமூர்த்தி
2008-12-31 06:04:00
cauverynagarwest@gmail.com

அய்யா, கையில் பணம் இருப்பதால்தான் இப்படியெல்லாம் கூத்தடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
தெருவோரங்களில் சித்திரம் வரைந்து காசுக்காக காத்திருப்பவர்கள் என்றால் உங்களுக்கு மட்டமாகிப்போய்விட்டது.
அவர்களை அழைத்து படம் வரையச்சொல்லியிருந்தால், நாள் முழுவதும் விதம் விதமாக படம் வரைந்து, நீங்கள் கொடுக்கும் தொகையை கும்பிட்டு வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.
தெருவோரக் கலைஞர்களை ஆதரித்தாற்போலவும் இருந்திருக்கும்.
தெருவோரக்கடை புரோட்டாவிற்கும், ஐந்துநட்சத்திர ஓட்டல் புரோட்டாவிற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன?

இளஞ்சேரலாதன்
2008-12-31 11:10:00
elancheralathan@yahoo.com

அன்புக்குரிய நண்பர் கீற்று நந்தன் அவர்களுக்கு,

வணக்கம்.

நீங்கள் ஓவியர் புகழேந்தியைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பலகாலமாக ஓவியத்தின் பெயரால் கலை மோசடி செய்துவரும் ஒரு நபரை தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். ஓவிய உலகில் சந்துரு, புகழேந்தி போன்ற களையப்படவேண்டிய களைகள் சில உண்டு.

அவற்றில் ஒன்றைப் பற்றி இப்போது வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். இலங்கை பிரச்சினை பலருக்கு உணர்வு ரீதியான கொந்தளிப்பை மன அவசத்தை உருவாக்குகிறது. புகழேந்தி போன்ற புல்லுருவிகளுக்கோ வருமானமும் புகழும் தேடும் வழி, வெளிநாட்டு பயணத்துக்கான கலைகடவு சீட்டு. மனம் நோகுகிறது. புகழேந்திகளுக்கு ஒரு வேண்டுகோள். எது வேண்டுமானாலும் செய்து தொலையுங்கள். கலையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் பெயரைப் பயன்படுத்தி ஈனக்காரியங்கள் எதுவும் செய்து தொலைக்காதீர்கள். அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் துன்பங்கள் போதும்.

jayakannan
2009-01-01 02:35:00
meet_jaya@sify.com

ஓவியர் புகழேந்தி புகழுக்காகவும், பணத்துக்காகவும் வெறிபிடித்து அலைபவர் என்று அவரை நன்கு அறிந்த நபர்கள் அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவரை ஏன் இந்த இளைஞர்கள் சந்தித்தார்கள்? உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு ஓவியத்தை வைப்பதற்கு 10000 ரூபாய் செலவாகும் என்று சொன்னால் அது இவர்களுக்கு அது அபத்தமாக தோன்றியிருக்க வேண்டாமா? அந்த ஓவியத்தை எடுத்துப் போக ஏன் அனுமதித்தார்கள்? குருமூர்த்தி கூறியதுபோல், கையில் காசிருப்பதால் கூத்தடித்திருக்கிறார்கள். நாலுபேரிடம் விசாரிக்கலாம் என்பது கூடவா இவர்களுக்குத் தெரியாது? வடிவேலு சொல்வதுபோல 'ரொம்ப நல்லவங்கடா'

Tamil
2009-01-01 03:34:00
t_tamil@yahoo.com

மிகவும் கேவலமான செயல். தயவு செய்து பிணம் தின்னும் கழுகுகளாக இருக்காதிர்கள். இந்தக் கட்டுரைக்கு புகழேந்தி பதில் கூறியாக வேண்டும்.

kannan
2009-01-01 03:42:00
kannan_2k1@hotmail.com

காலமெல்லாம் யாரையாவது நம்பி நம்பி ஏமாந்து ஈழத்தமிழர்களாகிய நாங்கள் நொந்துபோயுள்ளோம். எங்களது பிணங்களின் மீதுதானா உங்களது வியாபாரங்கள் இருக்க வேண்டும்? மனது மிகவும் வலிக்கிறது.

கண்ணன்,
பெர்லின்

KUMAR
2009-01-01 04:39:00
kumar@yahoo.com

சோறு தின்னும் எவறும் இதை என்றுமே செய்யக் கூடாது

புதியமாதவி.
2009-01-01 06:12:00
puthiyamaadhavi@hotmail.com

இந்தக் கட்டுரையை வாசித்தப்பின் அதிர்ச்சியாக இருக்கிறது.
நாம் எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பிம்பங்கள் நம்
கண்முன்னேயே உடையும்போது ஏற்படும் காயம் நம்மை ரொம்பவும்
பாதிக்கும்.

உங்கள் கட்டுரைக்கு புகழேந்தி பதில் சொல்ல வேண்டும்.
பார்க்கலாம் என்ன செய்கிறார் என்பதை!

அன்புடன்,

புதியமாதவி,
மும்பை

Sundarrajan
2009-01-01 09:11:00
maratamizhan@rediffmail.com

First my apologies for not sending in tamil as i dont have the fonts. will install as soon as possible.

I read your article about "Oviyar Pugazhendi". I am stonieshed to see the level of harshness in the language used and that too the entire report is completely biased and inidividual centred. You have every right to comment on any individual's works but not on individuals. I see many flaws in your report and completely i am not able to understand the motive behind publishing such a article.

First, If oviyar is trying to cheat for Rs.10,000/- and if he is that kind of a person then he would have been exposed long time back and you yourself have stated that he has travlled to many countries for support of Eelam issue. If he is that kind of person then he would not have been invited to any other country he would have been exposed by the movement and the people itself.

Secondly, how can you, as a third person suddenly come in between 2 people when they have completed deal and without knowing the entire details. I regularly purchase paintings, i know the cost of the materials and moreover just because you pay fo rthe materials you cant own the art without the consent of the painter. If someone has suggested two names including pugazhendi and other person, why you didnt go to the other person?

Thirdly, did you see the painting? If you have really any sense of acknowleding art, then first of all you woulld not have dreamt of writing such a vicious article.

I dont see any difference between the author of this article and ChoRamasamy and THE Hindu RAM. PLease try to understand completely before publishing any article.

Sundar

விஜயக்குமார்
2009-01-01 11:20:00
kumarnilavu@gmail.com

சுந்தர்ராஜன்! கீற்று இணையதளத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து வருகிறேன். எந்த சமூகப்பிரச்சினைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின், வஞ்சிக்கப்பட்டவர்களின் குரலாக கீற்று ஒலிப்பதை நான் அறிவேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும் பார்க்கிறேன்.

கட்டுரையின் நோக்கம் என்னவென்று அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது, ‘இனி யாரும் ஏமாந்துவிடக்கூடாது’. இதுகூடவா உங்களுக்குப் புரியவில்லை. இவரைப் பற்றி பெரும்பாலான இலக்கியவாதிகளுக்கும், இயக்கவாதிகளுக்கும் தெரியும். பணம், புகழ் இரண்டுக்காகவும் எதுவும் செய்வார். ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழை இவர் வடிவமைத்தபோது ஆசிரியர், ஆசிரியர் குழுவின் பெயர்கள் சிரிதாகவும், ‘வடிவமைப்பு: புகழேந்தி’ என்பது பளிச்சென்று பெரிதாகவும் போட்டிருந்ததை நானே பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியா செய்திகளை எல்லாம் எப்படி சொல்வது என்று பெரும்பாலானோர் நினைத்து வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம்.

இரண்டுபேருக்கு இடையே நடந்த ஒப்பந்தத்தில் இவர் ஏன் குறுக்கே வந்தார் என்று கேட்கிறீர்கள்? விஷயம் தெரிந்த எல்லோரும், நியாயவுணர்வு உள்ளே எல்லோரும் தலையிடத்தான் செய்வார்கள். இவ்வளவு பணம் கேட்கிறார் என்று தெரிந்தும் மூன்றாவது ஓவியரிடம் போகாமல் ஏன் புகழேந்தியிடம் அந்த இளைஞர்கல் மாட்டிக்கொண்டார்கள் என்பது உங்களைப்போலவே எனக்கும் புரியவில்லை. பணத்தயும் கொடுத்து, ஓவியத்தையும் எடுத்துப்போக அனுமதித்த அந்த புத்திசிகாமணிகளின் முகத்தை முதலில் பார்க்கவேண்டும். கீற்று ஆசிரியர் அவர்களின் பெயர்களையும், புகைப்படத்தையும் வெளியிடவேண்டும்.

அடுத்தபடியாக நீங்கள் கூறுவது மிகவும் அபத்தமானது. இடம் வாங்கி, செங்கல், ஜல்லி, சிமெண்ட் எல்லாம் கொடுத்து கொத்தனாரிடம் வீடு கட்டச் சொன்னால், கட்டியபின்பு வீடு கொத்தனாருடையதா இல்லை உங்களுடையதா? கைநீட்டி பணம் வாங்கிவிட்டாலே படைப்பு பணம் கொடுத்தவருடையது. படைத்தவர் அது நான் படைத்த படைப்பு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதற்கு மேல் அவருக்கு எந்த உரிமையுமில்லை.

ஓவியத்திற்கான பொருட்களின் மதிப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாதுதான். எவ்வளவு ஆகும் என்பதை வாசகர்களோ, இல்லை கீற்று ஆசிரியர் குழுவோ ஆதாரமாகக் கூறினால் நன்றாக இருக்கும். இங்கு இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இயக்கப்பாடல் கேசட்டை வெளியிடும் யாரும் அதற்காக பெரிய இசைக்குழுவை வைத்து பிரம்மாண்டமாக வெளியிடுவதில்லை. அதற்கு ஒரு தபேலா, ஆர்மோனியம், புல்லாங்குழல் என்று சிம்பிலாகத்தான் செய்கிறார்கள். ஆனால் 100 வயலின், 100 புல்லாங்குழல், 50 மிருதங்கம், 50 தபேலா, 5 கீபோர்டு வைத்துத்தான் இயக்கப்பாடல் கேசட்டை போடுவேன் என்று ஒருவர் சொன்னால் அது சின்னபுள்ளைத்தனமாக இல்லை. உண்ணாவிரத இடத்தில் வைப்பதற்கு செலவு குறைவான ஓவியத்தை புகழேந்தி தந்திருக்கலாம். சாப்ட்வேர் மக்களுக்கு வெளியுலகம் ஒன்றும் தெரியாது என்பதை அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.

சோ.ராமசாமி, இந்து ராம் போன்றவர்களுக்கு கீற்று தரும் பதிலடியை இணையவுலகில் வேறு யாரும் தருவதில்லை என்பதை அதை தொடர்ச்சியாக படிக்கும் என்போன்றவர்களுக்குத் தெரியும். நீங்கள் கீற்றுவைப் படிப்பவரில்லை என்பதும், புகழேந்திக்கு பரிந்துபேசுவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதும் உங்களது மறுப்பை படிக்கும்போது தெரிகிறது.

நந்தனின் கட்டுரை முக்கியமானது. கீற்றுவின் பனி தொடரட்டும்.

Dr. V. Pandian
2009-01-01 07:18:00
porkkaiponds@yahoo.co.in

சுந்தர்ராஜன் கருத்துக்கு விஜயகுமார் அவர்களின் எதிர்வினையை நானும் வழிமொழிகின்றேன்.

கண்டிக்கப்பட வேண்டியதை, கண்டிக்க வேண்டிய நேரத்தில், கண்டிக்கப்பட வேண்டிய முறையில், பரிவின்றி கண்டிக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால் தான் சமூகம் இப்படிச் சீறழிந்து கிடக்கிறது.

Dr. V. Pandian
2009-01-01 07:33:00
porkkaiponds@yahoo.co.in

மணி அவர்களே, தியாகுமேல் தங்களது ஆதங்கம் வியப்பளிக்கிறது. சுப.வீ பற்றி தியாகு எழுதுவதை சரியில்லை என்று உரிய வாதங்களோடு விமரிசிக்கலாம். அது நியாயமானது. ஆனால், தியகுவிற்கு நீங்கள் கொடுக்கும் நிர்பந்தத்தின் மூலம் உங்களுக்கும் உள் நோக்கம் உள்ளதென்பது தெளிவாகிறது.

பணத்திற்கு சபலம் கொண்ட ஓவியரைவிட, சுப. வீ அவர்களின் கொள்கைச் சறுக்கல் ஆபத்தானது என்பது எனது கருத்து. தி.மு.க வில் அவர் கரைந்ததை விட, பொது வாழ்க்கையிலிருந்து அவர் விலகி இருக்கலாம். இந்த இருவரையும் ஒரு தட்டில் வைப்பது முறையன்று, என்பது எனது கருத்து.

கை.அறிவழகன்
2009-01-02 04:06:00
arivazhagankaivalyam@gmail.com

மதிப்பிற்குரிய கீற்று நந்தன் அவர்களுக்கு,

ஈழத்தமிழ் மக்களை அவர்களது அவலத்தை மையமாக வைத்து ஓவியமாகக் கொள்ளை அடிக்கும் புகழேந்தி போன்ற தமிழின் பெயரால் கொள்ளை அடிக்கும் பலர் இப்போது முளைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடமாகவே இருக்கும், புகழேந்தி இதற்க்கு பதில் சொல்லவில்லை என்றால், அவர் இல்லம் முன்பாகப் முற்றுகைப் போராட்டம் செய்ய வேண்டியது தான்.

இதனைப் படித்து முடித்த போது, பெருஞ்சித்திரனார் என்கிற பெயரில் ஒரு தமிழ் வணிகரை திராவிடர் கழகம் மேடைகளில் அறிமுகம் செய்தது, அவர் கேட்ட வசதிகளும், பணமுடிப்பும்...பிறகு கொல்லைப் புரத்திலே தெலுங்கு மொழியின் மீது அவர் காட்டிய பாசமும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

நல்ல வேலை செய்தீர்கள், இனி ஒரு இன்றியமையாத பணியையும் செய்து விடுங்கள், ஐரோப்பிய நாடுகளில் இவரது கண்காட்சியை நடத்தும் ஒருங்கினைப்பலர்களைத் தொடர்பு கொண்டு இவரது நிகழ்வுகள் இனி எங்கும் நிறைவேறா வண்ணம் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது.

செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

தோழமையுடன்
கை.அறிவழகன்

Dr. V. Pandian
2009-01-02 10:16:00
porkkaiponds@yahoo.co.in

புகழேந்தி அவர்கள் மீது நமக்கு வன்மம் தேவேயில்லை. அவரது செயலை விமர்சித்துள்ளோம். விடையளிப்பது அவரது உளச்சான்றுக்கு உட்பட்ட விடயம். அவரோடு சம்பந்தப் பட்டவர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது அவரவர் உரிமை. ஆக, இதற்குமேல் நாம் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டுவது நாகரிகம் ஆகாது, என்பது எனது கருத்து.

பெருஞ்சித்திரனார் மெய்யான தமிழ்ப்பற்றாளர் மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியவாதி. அவர் தெலுங்கராயிருந்தாலும் அவருடைய துணைவியார் வன்னியர் வகுப்பைச் சார்ந்த தமிழர், நான் அறிந்தவரை. அறிவழகன் அவர்கள் பெருஞ்சித்திரனார் தெலுங்கின் மீது காட்டிய பாசத்தை பற்றிய ஆதாரத்தை கொடுக்க வேண்டுகிறேன்.

பெரியார் கூட கன்னடத் தெலுங்கர் தான். அப்படி இருந்தும் தமிழ்த்தேசியத்திற்காக வலிந்து போராடியவர் அவர்தானே. தமிழனே கூட திராவிட தேசம் தானே கேட்டான்! அந்த தமிழ்த்தேசியச் சுடரை அணையாமல் காத்தவர் தான் பெருஞ்சித்திரனார்.

அதற்காக நீண்ட சிறைவாசம் பெற்றவரும் அவர்தான். அவரது மகன் பொழிலனும் ஈழம் சம்பந்தப்பட்ட வழக்கில் தற்போது வாழ்நாள் சிறையில்!

தேர்தல் கட்சிகளிலே ஈழத்திற்காக, மற்ற தேர்தல் கட்சிகளைக் காட்டிலும் அதிரடியாக பாடுபட்டவர் வைகோ என்ற தெலுங்கர் தானே!

ஒருவர் எந்த மொழிக்காரராக இருந்தாலும், இந்த மன்னின் மீதும் இந்த மொழியின் மீதும் உண்மையான, பாசாங்கில்லாத காதலோடு இருப்பவர் தமிழரே!

தென்னிந்தியர்கள் எல்லோருமே அடிப்படையில் தமிழினத்தைச் சேர்ந்தவர்களே! பல்லாயாரக்கணக்கான ஆண்டுகள் பழைமையுடைய தமிழை ஒரு காலத்தில் பேசியவர்கள் தான் இவர்கள். சுமார் 1,400 வருடங்களுக்கு முன் சமஸ்கிருத தாக்கத்தால் உருமாறிய தமிழின் வட்டார வழக்குகள் தானே கன்னடமும், தெலுங்கும். இவற்றின் இலக்கண நூல்கள் கூட வடமொழியில் தானே முதன் முதலில் எழுதப்பட்டது! பார்ப்பனர்களால் திட்டமிட்டு உருமாற்றப்பட்ட மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு மற்றும் மளையாளம். தமிழையும் மாற்ற முனைந்தனர், நல்ல வேளை, உரிய நேரத்தில் விழித்துக் கொண்டோம்.

ஆக, சில நூறு வருடங்களாக தமிழகத்திலே வாழும் மாற்று மொழியினர், தமது பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி மொழியான தமிழை நேசிப்பது தான் முறையானது.

ட்ராபிக் ராமசாமி, ஈ. வி. கெ. எஸ். இளங்கோவன் போன்ற கழிசடைகளை ஒடுக்குவோம்.

venkattan
2009-01-02 03:35:00
venkattan@gmail.com

இதில் ஒரு விடயத்தை நான் குறிப்படவேண்டும். ஈழத்தமிழர்களே ஒற்றுமையின்றி சீரழிந்து கொண்டிருக்கும் போது எமது ஆதரவாயிருக்கும் ஒரிருவர் இப்படியிருப்து மிகவும கொடியது. ஆனால் இதைவிட முக்கியம் எமது ஒற்றுமை. பு்கழெந்தியைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் எமது ஒற்றுமை முக்கியம். நாமே எம்மை குதறினால் சிங்களவனும் அவனை நக்கும் பார்ப்பன காங்கிரஸ் அடிவருடிகளுக்கும் கொண்டாட்டம் தான். ஒற்றுமை முக்கியம்.

Gunasekar
2009-01-02 08:46:00
gsekar1977@rediffmail.com

புகழுக்கு அலையும் புகழேந்தியின் ஆசை கொஞ்சநஞ்சமல்ல. உருப்படியாக ஒரு ஓவியம் கூட வரைந்ததில்லை. ஆனால் தன்னைப்பற்றி தானே ஒரு மலர் தயாரித்து வெளியிட்டுள்ளார். அதில் பெரிய பெரிய ஆட்களை எல்லாம் விடாமல் நச்சரித்து, அவரைப் பற்றி எழுத வைத்துள்ளார். அவர்களும் புகழேந்தியின் தொந்தரவு தாங்கமுடியாமல் கட்டுரைகள் தந்துள்ளனர். அதையெல்லாம் தொகுத்து அவரே மலர் வெளியிட்டு, எல்லோரிடமும் கொடுத்திருக்கிறார். இந்தக் கேவலம் எங்காவது நடந்ததுண்டா? இதைவிடக் கொடுமை, இவரைப் பற்றி இவரே ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்து வருகிறார். கூடிய சீக்கிரம் அதுவும் வெளிவரும்போலிருக்கிறது. புகழேந்தி வீதிக்கு வீதி சிலையாக நிற்கவில்லை. விரைவில் அதையும் செய்தாலும் செய்வார்.

Adhikaalai 'Nawin'
2009-01-02 08:53:00
editor@adhikaalai.com

இதனைப் பதிவு செய்யும்போதுகூட என் விரல்கள் கணினியில் எழுத்துக்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நடுக்கம் ஏற்படுகிறது நண்பர் நந்தன் அவர்களே! இந்த .......ஏந்திக்கும், குண்டடிபட்டு இறந்து கிடக்கின்ற எம் தமிழீழச் சகோரரிகளை அடையாளம் கண்டு புணர்ந்த சிங்களக் கயவாளிகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இந்தா...ச்சீ....பிழைத்துப்போ...என உமிழத்தோன்றுகிறது!! கொதிக்கும் குருதியுடன் -
'அதிகாலை' நவின் - அமெரிக்கா

கை.அறிவழகன்
2009-01-02 10:48:00
arivazhagankaivalyam@gmail.com

ஐயா பொற்கை அவர்களுக்கு,

பெருஞ்சித்திரனார் என்கிற அந்தப் பெரிய மனிதரின் தமிழ் உணர்வு என்னவென்று, அவருடன் காரைக்குடியில் நடைபெற்ற "பாரதிதாசன் இலக்கியப் பேரவையின்" கருத்தரங்கில் மூன்று நாட்கள் கூடவே இருந்து பார்த்ததன் விளைவாகத் தான் அப்படிச் சொன்னேன்.

தமிழ் உணர்வு என்பது வேறு, தமிழ் உணர்வை வணிகம் செய்தல் வேறு, முன்னாள் தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் மதிப்பிற்குரிய ஐயா தமிழ்க்குடிமகனாரும் அந்த விழாவுக்கு வந்திருந்தார், மிக எளிமையாக மகிழுந்தைக் கூட விரும்பாமல் பேருந்தில் சென்ற அவரது தமிழுணர்வின் முன்னாள், பெருஞ்சித்திரனார் குளுமை வசதி செய்யப்பெற்ற வகுப்பில் தான் செல்வேன் என்று முரண்டு பிடித்த தமிழுணர்வு கொஞ்சம் எனது பார்வையில் சிறுத்துப் போனது.

மற்றபடி அவரது தமிழுக்கான பணிகளை முழுமையாக் நான் அறியவில்லை. எத்தனையோ மாற்று மொழிக்காரர்கள் தமிழுக்காக உழைத்திருக்கிறார்கள், மறுக்கவில்லை, இருப்பினும் தமிழை முழுமையாக அவர்கள் நேசிக்கிறார்களா? இல்லையா? என்பது அவர்கள் அருகாமையில் செல்லும் பொது தெரியும் அல்லவா, அப்படித்தான் அவருடன் இருந்து அதனை நான் அறிந்து கொண்டேன். மறைந்த ஒருவரைப் பற்றிய விமர்சனம் தேவையற்றது என்றாலும், தமிழை, நம் உயிரை வணிகம் செய்யும் சிலரை சரியாக அடையாளம் காட்ட வேண்டியது கடமையாகிறது.

இருப்பினும் அவரது தமிழ்ப் பணிகளைப் பற்றிய எந்தக் கேள்வியும் நான் எழுப்பவில்லை, பொழிலனையும் பல நேரங்களில் பல்வேறு மேடைகளில் நான் சந்தித்திருக்கிறேன், நல்ல பேச்சாளர், ஆனால், கொஞ்சம் நாகரீகமான பேச்சு நடைகளைக் கையாண்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பார்.

எனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னேன், தவறுகள் இருப்பின் பொறுக்கவும்.

தோழமையுடன்
கை.அறிவழகன்

Sundarrajan
2009-01-03 01:19:00
maratamizhan@rediffmail.com

Dear Vijaykumar

I am surprised by your reply to my posting in keetru. YOu have not understood my point clearly. If "Ooviyar" is that kind of a person, then would have been exposed by the Tamizh Fraternity long time back. Moreover if the same article had been published by people who had approached him, that would be more appropriate and it would be correct. Because those two (Oviayar and other teams) only know the facts behind this. Infact i saw an article published by the team that went and discussed with Ooviyar, it had completely disagreed with your article.

YOu have compared a construction of a building with "ART". I dont have to explain on this front as it shows how poorly you have been seeing a Padaipali and others.

I dont have to get "Vakkalathu" for Ooviyar as you said, as i dont have any thing. I have read his books and has seen his paintings. Infact Unarchi Kavingar Kasi Anandan has described about his painitings once, as "Uyir Moochai, ooviyamai vadikirar pugzhal" endru.

My only intention to write against your article is that, the entire tamil fraternity is already divided in this issue and we supporters need not create any further dent in that. Let us give our enemies a chance to do it.

Sundar

M.Kaliappan
2009-01-03 04:09:00
nellaisudhan@Yahoo.com

நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்து விட்டால்…

உள்ளத்தின் சூடு ஆவியாவதற்கு முன் பொரிந்து தள்ளியது சற்று ஆறுதல்…

அநியாயங்கள் அடையாளம் காணப்பட வேண்டியது அவசியம். தங்கள் பணிக்கு நன்றி !


-நெல்லை சுதன்

Kanna
2009-01-03 04:41:00
kanan_hi@yahoo.com

Pugalendhi has been doing this throught out his career. If u happen to ask any one who has so far held his exhibations you may know this. This is a known matter to manywho know him but this is the first time it has been written. Not only Pugalendhi but many who are working for movements are having this same style. From Sun TV Veerapandian to Seeman if u happen to be an organiser of literary meets you may know how they demand travel, car, three star loding and cover with huge money. We have to make a big list of such people like Gnani made of the book sellers, we have to avoid calling such personalities in our future endavours

Raja
2009-01-03 04:50:00
nakkheeran_raja@rediffmail.com

Eeza vivagarathil naan keata peariya athirchi ethu Thozarey.

namathu aracial vathigalai vida keavalamaga nadanthukondirukirar.

evarai pola nabargalaal thaan. thamilan thalai gunigaran.

Dr. V. Pandian
2009-01-03 06:16:00
porkkaiponds@yahoo.co.in

அறிவழகன் அவர்களே,
நீங்கள் சொல்லும் செய்தி நெருடச் செய்கிறது தான். ஆனால், அவர் நாவில் தமிழ் விளையாடியது, இதை புலவர்கள் பலர் சொல்லி நான் கேட்டது. அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட போது, ரஜீவ் காந்தியை கடுமையாக சபித்தவர் அவர். அவர் சாபம் பலித்ததென்று சொல்வார்கள். தனித் தமிழ்நாட்டிற்காகவே தன்னை அற்பனித்துக் கொண்டவர் அவர். பெரியாரும், பெருஞ்சித்திரனாரும் தெலுங்கர்களாயிருத்தும் தனித் தமிழ் நாட்டிற்காக பாடு பட்டது வியப்பானதும், வரலாற்றில் பதியப் படவேண்டியதும் ஆகும்.

பெஸ்கி என்ற வீரமாமுனிவர், ஜி. யு. போப், எல்லீஸ் போன்ற எண்ணற்ற அக்கால ஐரோப்பியர்களும் தமிழர்களே! இன்றும் தமிழரல்லாத பலர் தமிழர்களாக உணர்வுடன் வாழ்கின்றனர். உலகெஙுகும், தமிழைப் பற்றி தெரிகின்ற, உணர்கின்றவர்கள் எல்லோருமே தமிழராய் மாறுவது தமிழின் மாட்சிக்கு சான்று. சமீபத்தில் ஒரு ஜப்பானிய இளைஞர் தமிழ் கற்று தமிழ் நாட்டில் குடியுரிமை கேட்டுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

உங்களது பதிலுக்கு நன்றிகள்.

தோழமையுடன்,
பாண்டியன்.

Bala
2009-01-03 07:51:00
maltanjay@yahoo.com

Dear Nandan, It is sad that people conveniently forget the past. I know very well about Pugalenthi's past. He might have forgotten me. Your sharp questions shows his real true face, well done Mr. Nandan. We have to be aware of this kind of cheap minded fellows and boycott his shows. It is a real shame that he has turned our Tamil Unarvu upside down. He has proved that he is money minded.

கி. வெங்கட்ராமன்
2009-01-03 08:42:00
kevaetamil@gmail.com

நண்பர்களுக்கு வணக்கம்
ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டிய இணைய தளத்தை ஏன் சாராயக் கடை சண்டையின் தரத்திற்கு தாழ்த்தினீர்கள் என்பது புரியவில்லை. இச்சிக்கலில் தொடர்பில்லாத தமிழர் கண்ணோட்டம் குறித்தும் •ந்தரராஜன் என்ற வாசகர் எழுதியிருந்தார். இதழை வடிவமைத்த ஓவியர் புகழேந்தி ஏதோ தன் விருப்பப்படி மிகப் பெரியதாக தன் பெயரைப் போட்டு கொண்டுவிட்டது போல வருத்தப்படுகிறார். தமிழர் கண்ணோட்டத்தில் வந்த, அதைத் தொடர்ந்து புதிய தமிழர் கண்ணோட்டத்தில் வருகிற எல்லா எழுத்துகளும் ‡ அதன் வடிவமைப்பு உட்பட அனைத்துமே ஆசிரியர் குழு ஒப்புதலோடு தான் வருகின்றன எனவே தன் விருப்பம்போல தனது பெயரை எங்கள் இதழில் ஓவியர் புகழேந்தி பெரிதாக போட்டு கொண்டுவிட்டார் என்பதோ, அதை அவரிடம் சொல்ல முடியாமல் நாங்கள் சங்கடப் பட்டதாக கருதவதோ உண்மையில்லை.
அன்புடன் ,
கி. வெங்கட்ராமன்
இணை ஆசிரியர்
புதிய தமிழர் கண்ணோட்டம்

kavearul
2009-01-04 03:22:00
kavearul@gmail.com

மணி மீதான பாண்டியன் பார்வை சரியானதே. புகழேந்தியிடம் கானப்படுவது தனி நபர் பலவீனம். அதன் பாதிப்பு மிகக் குறைந்தளவானதே. சுபவியுடையது மிகப்பெரும் அரசியல் பிழை. அதுவும் தெரிந்தே செய்யும் அரசியல் பிழை.ஒட்டு மொத்தத் தமிழினதுக்குத் தீங்கு விளைவிப்பது. முன்னது குற்றம் குறையெனில் பின்னது துரோகம்.
கீற்று நந்தனின் புகழேந்தியின் மீதான குற்றச்சாட்டிற்கு, தொடர்பானவர்களிடமிருந்தோ புகழேந்தியிடமிருந்தோ எந்த விளக்கமும் கிடைக்காத நிலையில் கருத்தறிவிப்பதும் தூற்றுவதும் நடுவுநிலைமை ஆகாது, அறிவுடைமையும் அன்று.

Dr. V.Pandian
2009-01-04 06:57:00
porkkaiponds@yahoo.co.in

காவியருள் அவர்களுக்கு, (உச்சரிபபில் பிழையருந்தால் பொருத்தருள்க)

புகழேந்தி பதிலலிளக்கவில்லை என்பதற்காக கருத்து சொல்லக்கூடாதென்பது எந்த விதத்தில் ஞாயம்? அவர் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கலாமே!

புகழேந்தி அவர்களிடம் கீற்று விளக்கம் கேட்ட பிறகு தானே, அதில் நிறைவடையாததால், இந்தக் கட்டுரை வெளியடப்பட்டுள்ளது. இப்போது அரசியல் மொத்தமும் நாகரிகமற்று, கீழ்மைப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கும் நாம், இது போன்ற கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதின் தேவையை உணரவேண்டும்.

பொது வாழ்க்கையில் இருப்பவரிடம் நாம் எதிர்பார்ப்பது சமூக அற்பனிப்பு. அந்த அற்பனிப்பு தூய்மையானதாகவும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் இருக்கவேண்டும்.

இனத்தின், தேசத்தின் மீட்சிக்கு இவை மிக, மிக இன்றியமையாதவை.

சுடர்
2009-01-04 06:57:00
chudar_p@rediffmail.com

பகை சூழ்ந்து தமிழின அழிப்பில் மும்மரமாக இருக்கும்போது இது போன்ற சர்ச்சைகளைத் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. ஒற்றுமையும் குலையாத தன்னம்பிக்கையுமே நமக்குத் தேவை தோழமைகளே!

jothi narasimman
2009-01-05 12:42:00
thamizhinijothi@gmail.com

இப்படி ஒவியர் செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ள சகிக்க முடியாதஒன்று

vijayakumar
2009-01-05 02:57:00
kumarnilavu@gmail.com

சுடர், ஒற்றுமை முக்கியம்தான். யாருடன் என்பதுதான் கேள்வி. புகழேந்தி போன்று நம்மை சுரண்டிக் கொழுக்கும் கரையான்களிடம் ஒற்றுமை காப்பதால் இழப்பதுதான் அதிகம்

karuppan
2009-01-06 03:37:00
karuppan@gmail.com

'ஆழிப்பேரலை தமிழகத்தைத் தாக்கியதே - அப்போது கரையோரங்களில் ஒதுங்கிய உடல்களில் இருந்த தங்க நகைகளை ஒரு சிலர் கொள்ளையடித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது'.

இதைவிட இவரைப் பற்றி சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?

ka.ve.arul
2009-01-06 07:00:00
kavearul@gmail.com

பாண்டியனார் அவர்களே என்னை (காவியருள்) என அழைப்பதால் நான் 'காவி' யாகி விட மாட்டேன் . நான் கா.வே.அருள் . அது கிடக்கட்டும் . பூகழேந்தியோ அல்லது தொழில்நுட்பத்துறை இளைஞர்களோ
எந்த விளக்கமும் அளிக்கவில்லை என உறிதியாக தெரியுமா ? உணர்ச்சி வயப்படாமல் முழு உண்மையும் அறிந்து தீர்ப்பளியுங்கள்.கேள்விகேட்க்க வேண்டும் என்பதற்காகவே .சேற்றை வாரி இறைக்காதீர்கள் நீங்கள் எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமலே கருத்தறிவிக்கிரறிர்கள் என்பதற்கு பெருஞ்சித்திரனார் பற்றி அறிவழகன் எழுதியதை அப்படியே வழிமொழிந்துள்ளதே தக்கசான்று.பெருஞ்சித்திரனார் தெலுங்கர் என்று யார் சொன்னது . அவர் துணைவியார் வன்னியரா ? அவர் தி.க மேடையில் அறிமுகமானவரா ? எவ்வளவு கேடுகெட்ட பொய்ப்பரப்புரைகள் ! அவதூருகள் இதுவா அறிவார்ந்த விவாதம் ? கி.வெ. சரியாகத்தான் சொல்லி உள்ளார் - "சாராயக்கடை சண்டை இங்கு ".

sathesh pandian
2009-01-06 07:10:00
sathesh.pandian@mail.com

இதனை படிக்கும் அனைவருக்கும் வணக்கம்...
நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவன் என்பதால் உங்களில் சிலரின் கேள்விகளுக்கும் கிண்டலுக்கும் பதில் சொல்ல வேண்டி உள்ளது..

1.புகழேந்தியை பற்றி எங்களுக்கு யாருக்கும் தெரியாது.. அவர் ஈழ போராட்டங்களில் கலந்து கொள்பவர் என்பதற்காக மட்டுமே அவரை அழைத்தோம்.
மற்றபடி ஒன்றும் இல்லை..இதில் ஒருவர் சொல்வது போல் எங்களிடம் பணம் ஒன்றும் கொட்டி கிடைக்கவில்லை..இதுவரை நடந்த போராட்டங்களுக்கு நண்பர் செந்தில் செய்த செலவுகள் அதிகம்... அவர் யாரிடமும் கையேந்தவும் இல்லை... அவரின் சொந்த பணத்தில் மட்டுமே முதலில் செலவு செய்தார்.. பின்னர் மட்டுமே அதை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்..

நாங்கள் ஈழ தமிழர்களுக்காக நடத்தும் போராட்டம் என்பதால் இதனை பற்றி சிறிதும் யோசிக்கவில்லை...

2.ஒரு ஓவியத்தை காட்டி விட்டு கொண்டு செல்வதற்கு 10000 கொடுத்தது தவறா சரியா என்று சொல்வதற்கு எங்களுக்கு ஓவியத்தை பற்றி ஒன்றும் தெரியாது...

3.மென்பொருள் துறையினர் தானே என்று நீங்கள் இலக்காராமாக பேசுவது உங்களின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது...



vishnupuramsaravanan
2009-01-06 07:42:00
vishnupuramsaravanan@gmail.com

மிகுந்த ஏமாற்றமும் வேதனையையும் தருகிறது..

முதன்முதலில் போராட வருபவர்களின் மனநிலையை இச்செயல் வெகுவாக பாதிக்கும்..

இது குறித்த ஓவியர்.புகழேந்தியின் பதில் அவசியமானது..

விஷ்ணுபுரம் சரவணன்

விஜய்கோபால்சாமி
2009-01-11 10:04:00
vijaygopal1982@gmail.com

உங்களுக்கு ஆதரவான பின்னூட்டங்களை மட்டும் வெளியிடும் உங்களின் இந்த செயல் புகழேந்தி செய்ததாக நீங்கள் சொல்கிற ஈனத்திலும் ஈனத்தனமானது.

Dr. V. Pandian
2009-01-13 10:09:00
porkkaiponds@yahoo.co.in

கா. வெ. அருள் அவர்களே!

ஆங்கிலத்தில் உங்கள் பெயரை எழுதும்போது சற்று கவனத்தோடு எழுதவேண்டும். அது ஒரு அற்பமான, குறைமொழி. தவறை உங்களிடம் வைத்துக் கொண்டு, மிகவும் எச்சரிக்கையாக, அந்த உச்சரிப்பை பொருத்தருளும் படியாகத்தான் எனது மறுவினையை தொடங்கினேன். உங்களைக் காவி என்று அழைப்பதில் எனக்கென்ன சுகம்? உங்களது மடல்களையும், எனது மடல்களையும் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு நீங்கள் எழுதியிருக்கலாம். அவசரம் தேவையில்லை ஐயா!

பெருஞ்சித்திரனார் பற்றி, அவர் ஒரு தீவிர தமிழ்ப்பற்றாளர் என்பது தவிர, எனக்கும் தெரியாது, ஆனால், எனது மடலை எழுதும் முன்பு எனது நன்பர்களோடு கலந்துவிட்டு, அதிலும் எச்சரிக்கையோடு 'நான் அறிந்தவரை' என்ற பாதுகாப்பு வாசகத்தோடு தான் எழுதினேன். அதிலுமா குறைகாண்கிறீர்? அறிழகன் சொல்வதை வழிமொழிந்தேனா? அதிலும் 'அப்படியே' வழிமொழிந்தேனா? மீண்டும் நம்மிருவர் மடல்களையாவது படியுங்கள். ஆத்திரம் வரும்போது அறிவு மங்கும் ஐயா. என்மீது அப்படி என்ன உங்களுக்கு ஆத்திரம்?

புகழேந்திக்கு தாங்கலாக, நடுநிலையோடு நான் எழுதும்போது நான் உங்களுக்கு இனிக்கிறேன். அதே நடுநிலையோடு அவரை குறைசொல்லும் போது, உங்களுக்கு நான் 'அறைவேக்காடாகி விடுகிறேன்'. நீங்கள் அவரது உறவோ என்று இது என்னை ஐயுறவைக்கிறது. இப்போது எனக்கு தோன்றுவது என்னவென்றால், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று நீங்களே உங்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டது போலவே, நீங்கள் ஒரு 'காவி' யாக இருக்கலாமோ? காவிகளுக்கு நான் 'பரம' எதிரிதான்!

பெருஞ்சித்திரனாரைப் பற்றி 'தெரிந்த' நீங்களாவது அவரைப் பற்றி சில வரிகள் எழுதியிருக்கலாம்! ஏனிந்தக் குறை?

நான் நேர்மையானவன். எனது மடல்களைப் படிப்பவர்கள் இந்த எண்ணத்தைத் தவிர வேரெதற்கும் வர முடியாதென்பது எனது ஆழமான கருத்து. எனது நேர்மையில் எனக்குள்ள நம்பிக்கை அது.

புகழேந்தி மறுவினை எழுதவில்லை என்பது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டுள்ளீர். என்னைப் பொருத்தவரை கீற்றில் எதிர்வினை வந்ததா இல்லையா என்பது தான் எனக்குத் தெரிந்த செய்தி. புகழேந்தி மறுவினையாற்றினார் என்று உங்களால் நிரூபிக்க சான்றிருந்தால் நிரூபியுங்கள். அது மிக, மிக அவசியம் ஐயா! கீற்று போன்ற இணையதளத்தின் நேர்மையில் பிழை இருந்தால் அது பறைசாற்றப் படவேண்டிய ஒன்று. எனக்கு கீற்றின் மீது நம்பிக்கை உள்ளது. இதில் வரும் பல எதிர்வினைகளே அதற்கு சான்று. அப்படி, கீற்றின் மீது நான் நம்பிக்கை இழந்தால் அதில் எழுத எத்தனிக்க மாட்டேன்.

சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் என்து அஞ்சல் முகவரிக்கு அப்போதே விளக்கம் எழுதியிருந்தனர். அதோடு, இனமேல் இது பற்றி கீற்றில் விவாதிக்காதீர் என்று விண்ணப்பித்திருந்தார்கள். அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால், அவர்களுக்கே சில எதிர் கேள்விகளைக்கேட்டு எழுதியிருந்தேன். அதற்கு இன்றுவரை பதிலில்லை! ஆக, புழேந்தியிடம் குறையுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. வீண் சப்பைக்கட்டுகள் வேண்டாமையா!

கீற்றில், புழேந்தி தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தால் அவரது மதிப்பு உயர்ந்திருக்கும், நிச்சயமாக. குறை சொல்வோர் சிறியோராக இருந்தாலும் உரிய முறையில் பதிலிளிப்பது தான் நேர்மையான பகுத்தறிவாளனுக்கு அழகு. என்னைப் புகழேந்திக்கு யாரென்றே தெரியாது. ஆக, அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட சிக்கல்களும் கிடையாது. ஆக, எனக்கு உள்நோக்கம் எதுவும் கிடையாது.

......................................மாட்சியில்
பெரியாரை வியத்தலும் இலமே
சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே!

இதில் உறுதியாக இருப்போம். புதிய சமுதாயம் படைப்போம்.

DASS
2009-01-21 04:03:00
dassdft@yahoo.com

melum melum innum virivaga ezhutha ventukiren..... DASS...

nilavan kuwait
2009-01-24 06:21:00
kathirselvam@hotmail.com

இவை எல்லாவற்றையும் விட, நாள்தோறும் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதை விட, பிச்சை எடுப்பது மேலல்லவா

வெறும் 10000 ரூபாயை ஒரு பெரிய பிரச்சினையாக எழுதவேண்டுமா?

இன்னொருவர் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் எழுதித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இவரை ஓர் இனவுணர்வாளர் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுநாடாக அழைத்துக்கொண்டு போய் கண்காட்சி நடத்துகிறார்கள். இவர் என்னடாவென்றால், இனவுணர்வை தனது வியாபாரத்திற்கான முதலீடாகப் பயன்படுத்துகிறார். இதோ, ஈழத்தமிழர்களின் கொடுமைகளை ஓவியங்களாக வரைந்து, ஓரிரு மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கண்காட்சி நடத்தவிருக்கிறார்; அப்பாவித்தமிழர்களை சுரண்டவிருக்கிறார்.

உலகத்தமிழர்களே! உங்களது உணர்வை வைத்துப் பணம் சம்பாதிக்கும் புகழேந்தியிடம் கவனமாக இருங்கள்! இல்லையென்றால் அவரது ஓவியத்தோடு உங்களையும் சேர்த்து விற்றுவிடுவார்

UZHAGA THAMIZ SONTHANGALE "PANAONTHIUDAN" KAVANAMAI IRUNGAL

nilavan

Nilavan Kuwait
2009-01-24 06:25:00
kathirselvam@hotmail.com

ORU MATHAM AAKIVITTADHU IK KATTURAI VELIYAKI NANUM KATHIRUNTHEN
MARUPPO ALLATHU VILAKKAMO KASIPUDUNKI OVIYARIDAM IRUNTHU PATHIL VARUM ENDRU
ITHUVARAI ILLAI ENDRAL THIRU NANTHAN SONNATHU MULKKA MULUKKA UNMAI

URAVUKALAI IVANAI VAITHU OVIYA KANKATCHI NADATHATHEER

VEENDUKOLUDAN

NILAVAN KUWAIT

கவிபாஸ்கர்
2009-02-10 09:17:00
thotilkanavu@gmail.com

மலிவான உத்திகள கையெடுத்து ஒரு சமூக படைப்பாளியை அவதூருக்குள் திணித்து ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார்கள் கீற்று இணையதளத்தில். இந்த அக்கப்போர் அணிவகுப்பில் யார் யார் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்பது கண்ணுள்ளவர்களுக்கே வெளிச்சம்.



தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஓவியர் புகழேந்தியிடம் ஈழம் குறித்த ஓவியம் ஒன்றை வரைந்து கேட்டிருக்கிறார்கள். போராட்ட களத்திலேயே வரையச் சொல்லியிருக்கிறார்கள். அவர் மறுத்து அவர் வீட்டிலேயே வரைந்து எடுத்து வந்திருக்கிறார். ஓவியத்திற்கானத் தொகை ரூ.10,000 கொடுத்திருக்கிறார்கள்.



இது தான் இணையத்தில் வெளியிட்ட செய்திக்கான கரு.



1. அந்த ஓவியத்திற்கு 10,000 செலவாயிருக்காது அவர் ஏமாற்றிவிட்டார் என்று கூச்சலடிப்பது தவறானதாகும். வரையப்பட்ட ஓவியத்திற்கு எவ்வளவு செலவாகும் செலவாயிருக்கும் என்பதை ஓவியர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆயில் பெயிண்டிங் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது ஓவியம் குறித்து புரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர் வரைந்த ஓவியத்தின் தரம் என்பது அவர் வரைந்ததற்கான கூலி இல்லை. இருந்தும் அவர் தன் சொந்தப் பணத்தை கூடுதலாக செலவு செய்திருக்கிறார்.



2. அவர் வரைந்த ஓவியத்தை உண்ணாப்போராட்டம் முடிந்ததும் எடுத்துக் கொண்டு போய்விட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஓவியத்தை கொடுத்துவிடக் கூடாது என்று ஓவியருக்கு எண்ணம் இல்லை. அவர்கள் ஓவியத்தை போராட்டக்களத்தில் கையாண்ட முறை சரியில்லை. வரைந்த ஓவியம் முழுமையாக காயவும் இல்லை. ஆதலால அதனை காயவைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறேன ஒரு வாரம் கழித்து யாரையாவது அனுப்புங்கள் தந்துவிடுகிறேன் என்று ஓவியர் புகழேந்தி சொல்லியிருக்கிறார்.



இந்த செய்திகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தாய்க்கு தான் குழந்தையின் அருமை புரியும். ஆயில் பெயிண்டிங் என்பது வரைந்த உடனே காயக்கூடியது அல்ல. அதில் மாசுபட்டாலோ வெயில் பட்டாலோ அதன் அழகும் தரமும் கெட்டு விடும். ஒரு தரமான ஆயில் பெயிண்டிங் காய்வதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாத காலம் கூட ஆகும். அடிப்படையில் நானும் ஒரு ஓவியர் என்பதால் எனக்கு இது குறித்து தெரிந்திருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பில்லை. கொடுத்த காரை ஏமாற்றுவதாக நினைத்திருந்தால் ஒரு சாதாரண ஓவியத்தை அதாவது வாட்டர் கலர் பெயிண்ட்டால் வரைந்து கொடுத்திருக்கலாம். பளீரென்று தெரிந்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர்கள் கொடுத்த பணத்தை விட கூடுதலாக செலவு செய்து வரைந்திருக்கிறார். முறைப்படி தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.



ஆனால் அவசரப்பட்டு மழுங்கிய சொற்களால் ஆர்ப்பரித்துக் குதித்து ஒரு நல்ல படைப்பாளியை கீழ்த்தரமான புத்திக் கூர்மையைக் கொண்டு கீற்று இணையதளத்தில் எழுதப்பட்டதாகவே கருதுகிறேன். ஓவியர் புகழேந்திக்கு வக்காலத்து வாங்குவதற்காக இதனை எழுதவில்லை. எந்த ஒரு படைப்பாளியையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். ஓவியர் புகழேந்தி என்பவர் பால் பாயிண்ட பேனாவில் பொம்மைகளை வரைந்து விட்டு சிலரை போல் உச்சாணிக் கொம்புக்கு ஏறியவர் இல்லை. தஞ்சை மாவட்டத்தில் தும்பத்திக் கோட்டை என்னும் குக்கிராமத்தில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் முளைத்து உழைத்து உழைத்து முன்னேறியவர். ஓவியத்துறையில் முறையாக பயின்று தேர்ச்சி பெற்றவர். தற்பொழுது சென்னை கவின் கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருபவர். ஈழத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பதை புரிந்து கொள்ளக்கூடிய புத்திக்கூர்மை பல எழுத்தரம்பர்களுக்கு புரியாது. புரியவும் தேவையில்லை. தமிழகத்தில் பல ஓவியர்களின் ஓவியங்களை விட புகழேந்தியின் ஒவியம் மட்டும் தனித்தன்மையுடையது தான். காரணம் அவரது படைப்பு சமூகத்தை பிரதிபலிக்கிறது. பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் ஆடையில்லாத அழகிகளையும் சினிமா பேனர்களையும் சைன் போர்டுகளையும் அல்ல தனியார் ஓவியர் பயிற்சிக் கூடங்களை வைத்து பணம் சம்பாதித்திருக்கலாம். சமூக அவலங்களை படம் பிடிக்க தேவையில்லஅது அவருக்கு இயல்பாக இருக்கும் மொழிப்பற்றும் இனப்பற்றும் தானே தவிர பணப்பற்றோ புகழ்ப்பற்றோ அல்ல.



தமிழ்நாட்டில் எந்த ஓவியர்களும் ஓவியங்களைக் குறித்த நூல்கள் எழுதியதில்லை. இவரது படைப்புகளை வாங்கி வெளியிட்டதும் இல்லை. தனது சொந்தப் பணத்தை செலவு செய்து பலப் புத்தகங்கள் ஓவியங்கள் குறித்தும், சமூகம் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். வரலாற்றுக் கண்ணாடியில் மட்டுமே அவர் முகம் தெரியும். புகழேந்தி புத்தகம் போட்டு எவ்வளவு சம்பாதி்க்க முடியும் என்பது பல "அறிவுஜீவி"களுக்கு புத்தகம் போட்டால் தான் புரியும். கோட்டோவியங்களை பல குக்கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற பெருமை இவரை தான் சாரும். சொந்தப் பணத்தில் ஓவியங்களை தயார் செய்து ஊர் ஊராக சென்று இலவசக் கண்காட்சி நடத்தினார். எவ்வளவு பணம் சம்பாதித்திருப்பார் குதியாய் குதிக்கும் தோள் மாட்டி அறிவிலிகளுக்கு புரியுமா இது?



தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் சென்று ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார். இவையெல்லாம் இவரது ஓவியம் சமூகத்தைப் பற்றி பேசியதால் தான் நாடு கடந்து சென்றது. கீற்று இணையதளத்தில் சொன்னது போல மக்களுக்காக வரையப்பட்ட ஓவியம் மக்களுக்கே பயன்படுகிறது என்று ஒவியர் மருது, ஆதிமூலம், விஸ்வம், நெடுஞ்செழியன் போன்ற பிரபல ஓவியர்களின் ஓவியம் அவர்களின் உரிமையின்றி யாரும் பயன்படுத்த முடியாது. புத்தகங்களிலோ கண்காட்சியாகவோ அனுமதியின்றி பயன்படுத்த முடியாது. ஆனால் புகழேந்தியின் ஓவியத்தை பயன்படுத்தாத ஆளே இல்லை. ஓவியங்களையும் பொதுவுடைமையாக்கியிருக்கிறார். ஏனென்றால் அவரது படைப்பு சமூகக் குறியீடுகளை அடையாளப்படுமத்தும் படைப்பு. சமூகப் பயன்பாட்டுக்காகத்தான் படைக்கிறார். பணத்திற்காக அல்ல.



அய்யா பெரியார் முகத்தை திசையெல்லாம் புகுத்திய பெருமை இவரை தான் சாரும். எந்த ஓவியக் கீர்த்திகள் செய்தார் இதை? தந்தைப் பெரியாரா இதற்கு பணம் கொடுத்தார்? ஈழத்தின் அவலத்தை உலகெங்கும் காட்சியாய் கொண்டு சென்றதும் நேரடியாக தமிழீழம் சென்று தெரிவிக்க முடியாத தகவல்களை பதிவு செய்தது புகழேந்தி தான். இவர் பிரபலமானவர்களைப் போல பிரபலமானவர் இல்லை. பிரபலமானவர்களுக்கெல்லாம் பிரியமானவர். புரிந்து கொள்ள வேண்டும். புகழுக்கு ஏங்குகிறார் புகழேந்தி என்று பிதற்றித் திரிவதெல்லாம் பொறாமையின் அரிப்பே தவிர வேறொன்றும் இல்லை.



சின்ன விசயத்தை பயன்படுத்தி நல்ல படைப்பாளிகளை வம்புக்கு இழுக்காதீர்கள். புகழேந்தி வெற்று ஆளாக புகழ் தேடவில்லை. தகுதியுடன் தான் தேடுகிறார். அப்படியே தேடினாலும் முக்கிய பிரமுகர்கள் அங்கீகரிக்கிறார்கள். புகழேந்தி பணத்தை விரும்புகிறவர் என்றால் அவர் என்றோ விழுந்திருப்பார். விரும்பாதவர் என்பதால் தான் நிமிர்ந்து நிற்கிறார். யாரோ சொல்லி விட்டார்கள் என்பதற்காக புரிந்தவர்களும் புகழேந்தியை சந்தேகிக்கக் கூடாது. ஆய்வு செய்ய வேண்டும். உண்மை எப்பொழுதுமே ஊமையாகாது. பல நாள் காத்திருந்து பழி தீர்க்கும் எதிரியை போல புகழேந்தியின் புகழ் பிடிக்காத நயவஞ்சகம் தான் கீற்று இணையதளத்தில் கும்மியடித்திருக்கிறது. பின்புலம் யாரென்பது பாலம் கண்டுபிடிக்கும். சிறந்த படைப்பாளியை வரலாறு படம் பிடிக்கும்.



புகழேந்தி சமூகத்திற்கு எவ்வாறு பயன்பட்டிருக்கிறார். அவர் எவ்வாறு பயன்தர போகிறார் என்பதை அலசி ஆராயுங்கள். மொட்டையாய் குட்டையில் விழுவாதீர்கள். பிறரின் தூண்டுதலுக்குத் துணை போகும் விதமாய் கீற்று இணையதளத்தில் வெளியிட்ட செய்தி இருந்ததை ஒழிய அது நாகரீகமான குற்றச்சாட்டல்ல. சம்பந்தப்பட்டவர்களின் கருத்தை வெளியிடுங்கள். பிறகு ஆய்வு செய்யுங்கள். புகழேந்தி தமிழ்ச் சமூகத்திற்கு பெரிதும் பயன்படக்கூடிய படைப்பாளி. அவதூறுக்குள் அவரை அமுக்காதீர்கள். சினிமா நடிகையின் கிசுகிசுப்பைப் போல எல்லாம் படைப்பாளிகளை பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் எழுத்தறிவிலிகளே இது போன்ற வெட்டி வேலைகளை விட்டுவிட்டு சமூக பயன்பாட்டிற்கு எழுந்து எழுத வாருங்கள்.

நல்ல படைப்பாளிகளை அவதூறுக்குள் அமுக்காதீர்கள்

தோழமையுடன்,
கவிபாஸ்கர்

'கீற்று' நந்தன்
2009-02-11 07:00:00
editor@keetru.com

எனக்கு ‘அறிவிலி’ பட்டம் கொடுத்திருக்கும் ‘அறிவாளி’ நண்பர் கவிபாஸ்கருக்கும், வாசகர்களுக்கும்,

வணக்கம்.

கிராமத்தில், காலாவதியாகிப்போன ‘காலி பெருங்காய டப்பா’க்களுக்கு கூடவே சில கைத்தடிகள் இருப்பார்கள். பெருங்காய டப்பாவின் புகழ் பாடுவது அவர்களது வேலையாக இருக்கும். ‘அண்ணனைப் பத்தி தெரியும்லே... அந்தக் காலத்துலே அவர் நடந்து வந்தாலே...’ என்று ஆரம்பிப்பார்கள். யார் எது கேட்டாலும், அண்ணன் பேசமாட்டார். எல்லாம் கைத்தடிகள் பார்த்துக்கொள்வார்கள். அத்தகைய கைத்தடிகளில் ஒருவராக நண்பர் கவிபாஸ்கர் இருப்பது நமக்கு வருத்தமே. இருப்பினும் அவரையும் மதித்து பதில் சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஓவியத்திற்கு எவ்வளவு செலவானது என்பதை ஓவியர் மட்டும்தான் சொல்ல வேண்டுமாம்.. ஏதோ ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை எல்லாம், புகழேந்தி தானே அவித்து, புடைத்து, காய்ச்சி வடித்து தயாரிப்பது போல் கூறுகிறார். உண்மை என்னவென்றால் ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை யார் வேண்டுமானாலும் கடையில் வாங்கிக்கொள்ளலாம். அப்படிப்பட்ட கடை ஒன்றில், 10 x 5 அளவிலான ஓவியத்திற்கான (Oil painting) பொருட்களின் விலையை விசாரித்தேன். அதன் விவரம்:

Oil color set (12 color set): ரூ.590 (Extra tube will cost Rs.48)
Canvas : Rs.180
Emulsion 1 Ltr: Rs.180
Brush set (6 size): Rs.240
Frame 40 feet (1 feet - Rs.5): Rs.200
Carpenter Charge: Rs.200

மொத்தம் ரூ.1590 ரூபாய் ஆகிறது. சந்தேகம் இருந்தால், சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் எதிரே உள்ள கிரி ஸ்டேஷனரி எம்போரியம், ஸ்ரீராமுலு செட்டி & சன்ஸ் கடைகளில் விசாரித்துக் கொள்ளலாம். அதுவும் அடிக்கடி வாங்கும் ஓவியர்களுக்கு 10லிருந்து 20 சதவீத தள்ளுபடியும் உண்டு என்று அவரது கல்லூரி மாணவர்களே கூறுகிறார்கள். மேலும் புதிதாக ஓவியம் வரைபவர்கள்தான் இவை அனைத்தையும் வாங்குவார்கள். அனுபவம் வாய்ந்த ஓவியர்களிடம் பிரஷ், பெயிண்ட் உள்ளிட்டவை இருக்கத்தான் செய்யும். 12 கலர் வாங்கினாலும் அவை அனைத்தையும் ஒரு ஓவியத்தில் பயன்படுத்த முடியாது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் புகழேந்தி வரைந்த ஓவியத்திற்கு 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாய்க்கு மேல் ஆகியிருக்காது.

‘அதெல்லாம் இல்லை. புகழேந்தி அமெரிக்காவிலிருந்து ஓவியப் பொருட்களை இறக்குமதி செய்தார், ஒவியம் வரைய mood வேண்டும் என்பதற்காக கொடைக்கானல் போனார், மரத்தாலான frameக்குப் பதிலாக தங்கத்தாலான frame பயன்படுத்தினார்’ என்றெல்லாம் இனி சொல்வீர்களேயானால், மன்னிக்கவும் நண்பரே, என்னுடைய நேரத்தையும் வாசகர்களின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

அடுத்து, ஓவியத்தை அவரே வைத்துக்கொண்டது பற்றியது. ஞாயிற்றுக்கிழமை காலை புகழேந்தி ஓவியத்தைக் கொண்டு வந்தார். மாலையில் எடுத்துச் சென்றுவிட்டார். அப்போது I.T. இளைஞர்கள் சிலர் ‘அதை எடுக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கின்றனர். மறுநாள் திங்கட்கிழமை நான் புகழேந்தியிடம் பேசியபோது, ‘ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது. நான் கண்காட்சிகளில் வைக்கப்போகிறேன்’ என்று சொன்னார். அடுத்து, ‘ஓவியம் எனக்கு, ஓவியத்தோட புகைப்படங்கள் அடங்கிய CD உங்களுக்கு’ என்ற டீல் நடந்ததாக ஒரு புதுக்கதை வந்தது. இப்போது ‘ஒரு வாரம் கழித்து தருவதாக இருந்தார்’ என்று வேறு கதை சொல்கிறீர்கள் (மாட்டிக்கொண்ட திருடன் ‘ஒரு வாரம் வீட்டிலே வச்சிருந்திட்டு தரலாம்னு இருந்தேன்’ என்று சொல்வது போலிருக்கிறது). சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாமல், நீங்களாகவே இதை சொல்லியிருக்க முடியாது. இன்னும் எத்தனை கதைகள் வருகிறது என்று பார்ப்போம்.

சரக்கில்லாத இயக்குனர்கள் பரபரப்பான சமூகப்பிரச்சினை ஒன்றை வைத்து படமெடுப்பதாகச் சொல்லி அதை விற்க முயற்சிப்பார்கள். அதனுடன் ஒப்பிடத்தக்கதே புகழேந்தியின் சமூக அக்கறை. இல்லையென்றால், 1000 ரூபாய் பொருளை 10000 ரூபாய் என்று சொல்லியிருக்க மாட்டார்.

ஓவியங்களை பொதுவுடைமையாக்கினார் என்று சொல்கிறீர்கள்.(பின்பு ஏன் இந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு போனார்?) இவர் மட்டுமல்ல, போராட்டங்களுக்கு ஓவியம் வரைகின்ற எந்த ஓவியரும் அவற்றிற்கு உரிமை கொண்டாடுவதில்லை. உங்களுக்கு சந்தேகம் இருப்பின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தோழர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம்.

‘தன்னைப் பற்றிய ஆவணப்படத்தை எடுப்பதற்கு கேமராமேனுடன் பிரபலங்களைத் தேடிப் போவது, தன்னைப் பற்றி தானே மலர் தயாரித்து வெளியிடுவது, எங்கேயாவது வெளிநாடு போய்விட்டு வந்தால், அதைப் பேட்டி எடுத்துப் போடும்படி பத்திரிக்கையாள நண்பர்களை நச்சரிப்பது, எந்த பொதுக்கூட்டத்திலும் யாரும் கூப்பிடாமலே மேடையில் ஏறி உட்கார்ந்து கொள்வது’ - இவையெல்லாம் புகழுக்காக அலையும் விஷயங்கள் அல்ல என்று நண்பர் கருதினாரேயானால் அவருக்காக நாமும் அதை நம்புவோம்...!

புகழேந்தி வெளியிட்ட புத்தகங்களில் பெரும்பாலும் இருப்பது சுயபுராணமும், சுயவிளம்பரமும் தானே அன்றி வேறென்ன? இவர் புத்தகங்கள் வெளியிட்டபோது, மறைந்த ஓவியர் ஆதிமூலம் சொன்னது ‘ஓவியனை, ஓவியங்களைப் பற்றி மற்றவர்கள்தான் எழுதவேண்டும். அவனே எழுதிக் கொள்ளக்கூடாது. எழுத்து அவன் வேலை அல்ல’. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே!

சிலர் தனக்கு கூஜா தூக்குவதற்கென்று கூடவே ஆட்களை வைத்திருப்பார்கள். ஆனால் ஓவியர் புகழேந்தி தனக்குத் தானே கூஜா தூக்கிக்கொள்பவர். கவிபாஸ்கர் கூஜாவிற்கு கூஜா தூக்குகிறார். அதுமட்டுமல்லாது, யாரோ தூண்டியதின் பேரில் இதை எழுதியதாகவும் கூறுகிறார். அதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. எனது கட்டுரை கீற்று இணையத்தில் வந்தபின்புதான், ஓவியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அனுப்பப்பட்டது. அதுவரை இப்படி ஒரு கட்டுரை வந்தது என்பது அவர்களில் பலருக்கும் தெரியாது. நேர்மையான ஊடகவியலாளனாக, என் கண்முன் நடக்கும் தவறை வெளியுலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அக்கட்டுரை எழுதப்பட்டது. எந்த சார்பும் இல்லாமல், உண்மையின் பக்கம் நின்று கீற்று இணையத்தை நாங்கள் நடத்தி வருவது வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.

நான் எழுதியது சரிதான் என்பதை அதற்குப்பின் வந்த தொலைபேசி அழைப்புகள் உணர்த்தின. அவரைப் பாராட்டி எழுதிய பிரபலங்களில் சிலர் கூட, ‘என்ன பண்றது? கூடவே சுற்றுபவர் கேட்கும்போது, ஏதாவது பாராட்டித்தானே தீர வேண்டியிருக்கிறது. நீங்க சொன்னது சரிதான்’ என்று கூறினார்கள்.

அவர் பக்கம் உண்மையிருந்தால், எனது கட்டுரையில் நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு உடனே பதில் கூறியிப்பார். அவ்வாறு கூற முடியாததால்தான் கைத்தடிகளைப் பேசவைத்தும், சக ஓவியர்கள் மீதும் பழிபோட்டும் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்.

போராட்டம் நடத்திய IT நண்பர்களில் ஒருவரான சதீஷ் பாண்டியன் எனது கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தில் கூறியதுபோல், ‘எங்களுக்கு ஓவியத்தை பற்றி ஒன்றும் தெரியாது’ என்பதுதான் உண்மை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, பணம் சம்பாதிக்க முயன்றார் புகழேந்தி. மாட்டிக் கொண்டதும், கைத்தடிகள் மூலம் புதுப்புது கதைகள் சொல்கிறார். அவரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

NAATHAN
2009-07-26 08:40:00
wmcvannai@gmail.com

இந்த கீற்று இணையம் இலங்கை அரசின் கைப்பொம்மை, இந்த இணையம் ஈழத் தமிழர்களின் விரோதி என நாம் வெளிநாடுகளில் ஏற்கனவே பரப்புரைகளை மேற்கொண்டுள்ளோம். ஆகவே ஈழத் தமிழர்களே இந்த கீற்று இணையத்தை புறக்கணியுங்கள். இதில் வரும் செய்திகள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. இலங்கை அரசிடம் பல லட்சம் பணத்தைப் பெற்றும், இலங்கையின் சென்னைத் தூதுவர் அம்சாவுடன் நெருங்கிய தொடர்பை பேணிவரும் கீற்று ஆசிரியர் நந்தன் அவர்கள், பற்றி நாம் அறிவோம். இவர் சமீபத்தில் இலங்கைத் தூதுவர் அம்சா உடன் சேர்ந்து நின்று எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதை யாவரும் அறிவீர்கள்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP