Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle

பிரபாகரன் - ஒரு கட்சி சர்வாதிகாரமும் தி.மு.க. செயற்குழு தீர்மானமும்
பெ.மணியரசன்

தி.மு.க. தலைமைச் செயற்குழு தீர்மானம், அதை ஒட்டி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியவை அனைத்தும் அக்கட்சி, முக்காட்டை நீக்கி முழுமையாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக வீதிக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றும் மற்ற தலைவர்களை அழித்துவிட்டார் என்றும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது என்றும் இந்திய அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டவே இந்த செயற்குழு கூட்டப்பட்டது என்று தெரிகிறது. ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகச் சிங்களப்படை கொன்று குவிக்கும் இக்காலத்தில், அந்த இனப்படுகொலையைத் தடுக்க விடுதலைப்புலிகள் வீரப்போர் நடத்திக்கொண்டிருக்கும் மிக நெருக்கடியான நேரத்தில் கருணாநிதி விடுதலைப் புலிகளை இழிவுப்படுத்துகிறார்.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற ஓர் அமைப்பை உருவாக்கப் போகிறார்களாம். அதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை வேண்டுமானால் சேரலாம். அதிலும் செயலலிதா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதி தலைமையில் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. மிச்சம் காங்கிரஸ்தான். ஈழச்சிக்கலில் காங்கிரசோடு கொள்கை உடன்பாடு கொண்டுள்ளார் கருணாநிதி என்பது உறுதியாகிவிட்டது. தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், சிங்கள அரசைச் சாடியதை விட பிரபாகரனைச் சாடியதே அதிகம்.

பிரபாகரன் எப்பொழுதோ இந்து ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் தமிழ் ஈழம் கிடைத்தால் சர்வாதிகார ஆட்சி நடத்துவோம் என்று கூறியதாகக் கருணாநிதி சொல்கிறார். அது உண்மையல்ல. யுகாஸ்லாவியாவில் இருப்பது போன்ற ஒரு கட்சி ஆட்சிமுறை இருக்கும் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். யுகாஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அப்போது நடந்தது. அன்று, சோவியத் ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது. இன்று சீனா, வியட்நாம், கியுபா, வடகொரியா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒரு கட்சி ஆட்சிமுறை தான் நடக்கிறது. அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி முறையை ஒருவர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி அரசு உலகில் ஏற்கப்பட்டு, அந்நாடுகள் பல கட்சி நாடுகளுடன் நல்லுறவு கொண்டுள்ளன. அரசு அமைப்பு முறைகளில் ஒரு கட்சி ஆட்சி முறையும் ஒன்று.

யுகாஸ்லாவியத் தலைவர் டிட்டோ ஒரு கம்யுனிஸ்டாக இருந்தாலும் சோவியத் முகாமில் சேராமல் அணிசேரா நாடாக யுகாஸ்லாவியாவை வழி நடத்தினார். அது போல் தான் நிறுவ வரும்பும் தமிழீழம் சோசலிசப் பாதையைப் பின்பற்றினாலும் அது தமது மண்ணிற்கு ஏற்ற வடிவம் பெறும் என்றும், அணி சேரா நாடாக தமிழீழம் திகழும் என்றும் அப்பேட்டியில் பிரபாகரன் கூறியிருக்கிறார். இதனைக் கருணாநிதி கொச்சைப்படுத்தி, பிரபாகரன் அதிகார வெறியர் என்று காட்டவும், சர்வாதிகாரி என்று காட்டவும் திரிபு வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்சி ஆட்சி என்பதற்கு மாறாக ஒரு குடும்ப ஆட்சி நடக்கும் என்று பிரபாகரன் கூறியிருந்தால் கருணாநிதி மனநிறைவடைந்திருப்பாரோ என்னவோ?

யுகாஸ்லாவியா மாதிரி ஒரு கட்சி ஆட்சி என்று பிரபாகரன் சொல்லி 24 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பில், பல கருத்தியல் மாற்றங்கள், வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மாற்றங்கள் காரணமாக, ஏற்கெனவே, அணியம் செய்யப்பட்டிருந்த அவர்கள் கட்சிக் கொள்கைத் திட்டத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். நிகரமை (சோசலிச)க் கண்ணோட்டத்துடன் செயல்படுகிற அமைப்புதான் விடுதலைப்புலிகள் அமைப்பு. இப்பொழுது விடுதலைப்புலிகளை டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF- அமிர்தலிங்கம்) உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்த்தேசியக் கூட்டணியில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மேற்கண்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தாம். தமிழ் ஈழத்தில் 98 விழுக்காட்டுத் தமிழர்களாலும் தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டுத் தமிழர்களாலும் தமிழீழத் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் பிரபாகரன். பல்வேறு கருத்துக் கணிப்புகளில் இது நிறுவப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பிரபாகரனோடு கருங்காலி கருணாவை சமப்படுத்திக் கருத்துக் கூறியிருக்கும் ஒன்றே, கருணாநிதியின் பகைமை உணர்ச்சியை அம்பலப்படுத்துகிறது.

மதுரையில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணனை, அதே தி.மு.க.வைச் சேர்ந்த இன்னொரு அதிகாரக் குழுவினர் கொலை செய்தபோது, கருணாநிதி சட்டப்பேரவையில் கூறியதை இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும். "அண்ணா காலத்திலேயே தி.மு.க.வுக்குள் கோஷ்டி சண்டையும் கொலையும் நடந்ததுண்டு. தூத்துக்குடியில் தி.மு.க.பிரமுகர் கே.வி.கே. சாமியை- தி.மு.க.வில் உள்ள இன்னொரு கோஷ்டிதான் கொலை செய்தது" என்றார். தா.கிருட்டிணன் கொலையை இவ்வாறு ஏன் இயல்பான ஒன்றாகக் காட்டினார்? அக்கொலையில் அவருடைய மகன் மு.க.அழகிரி குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

அதே மதுரையில் தினகரன் ஏட்டில் வந்த ஒரு கருத்துக் கணிப்பில் ஆத்திரமடைந்த அழகிரி கோஷ்டியினர் அந்த இதழின் அலுவலகத்தைச் சூறையாடினர். அவர்கள் மூட்டிய நெருப்பில் மூன்று ஊழியர்கள் மாண்டனர். இப்படிப்பட்ட குடும்பத் தலைவரான கருணாநிதி, ஈழ விடுதலைப்போரில் நடைபெற்ற "சகோதர யுத்தத்தை"ப் பற்றி திரும்பத் திரும்ப பேசுகிறார். இவர் எப்படி வலுவாக - இந்திய அரசிடம் போர் நிறுத்தம் கோருவார்? இவர் எப்படி ஈழத் தமிழர்களின் துயர்துடைப்பார்?

இவருடைய ஒப்புதலோடுதான் இந்திய அரசு சிங்களப்படைக்கு ஆயுதம் கொடுக்கிறது; படையாட்களை அனுப்புகிறது என்பது இதன்வழி தெரியவருகிறது. "உள்ளுர்த் துப்பு இல்லாமல் மாடு திருட்டுப் போகாது" என்பது பழமொழி. கருணாநிதி, செயலலிதா ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு ஈழப்போரை நடத்தவில்லை என்பது உறுதியாகிறது.

- பெ.மணியரசன் (tamizhdesiyam@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-02-05 08:13:00
porkkaiponds@yahoo.co.in

அனைவரின் உள் குமுறலை வெளிக்கொண்டு வந்துள்ளது இக்கட்டுரை. சிறப்பான, காலத்திற்கேற்ற கட்டுரை.

கருணாநிதியின் 'சுய ரூபம்' அடக்கமுடியாமல் வெளிவந்துள்ளது. ஒரு இக்கட்டான சூழல் வரும்போது தான் ஒருவனுடைய உண்மையான தன்மை வெளிப்படும். அத்தகைய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது, அம்பலமாகிவிட்டார்!

உள்ளூர் துப்பு இல்லாமல் மாடு திருடு போகாது என்ற பழமொழி அருமை! மாற்றாளையும், மாற்றானையும் ஆட்சியில் வைத்தோம்! நாசமாய்ப்போனோம்!

நம்மை ஆள்பவர்கள் 'தலைவர்கள்' இல்லை! இவர்கள் அதிகாரம் மிக்க 'ஒற்றர்கள்'. ஆம், டெல்லிக்கு ஒற்றர்கள்!

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

இந்த செய்யுளின் பொருளை டெல்லி காங்கிரஸும் அறியவில்லை! நமது 'வாழும் வள்ளுவரும்' அறியவில்லை!

இருவருமே செம்மையாய் அம்பலப் பட்டுள்ளனர்!

sankare.r
2009-02-06 03:39:00
sankareramani@yahoo.com

ayya maniyarasanin katturai midhavaadha pokkil yezhudhappattulladhu , karunaanidhiyin karungalidhanadhdhai maaveeran muthukumar tholuriththu kattiyullaar.karunaanidhi yennum theeya sakthi,dhuroga sakthi tamizhnaattai vittu tholaindhaaldhaan tamizhargal uruppadamudiyum.

ADVOCATE RAJENDIRAN
2009-02-06 05:29:00
advocateraajendiran@gmail.com

TRUE FACTS .KARUNAAANITHI EXPOSED.

அக்னிப்புத்திரன்
2009-02-06 05:59:00
agniputhiran@yahoo.com

இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதும் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் போல ஒரு மாயபிம்பத்தை உருவாக்கவும் இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு ஆளாளுக்குக் கட்டுரை எழுதி வருகிறார்கள். (இவர்கள் எப்போதும் கலைஞரை குறை கூறும் நபர்கள்தாம்) தற்போதைய சுழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தந்திரமாக முயலுகிறார்கள்.

திமுகவிடமும் கலைஞரிடமும் இப்பிரச்சினையில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இவர்கள் தெளிவாக கூற வேண்டும்.

சரி இவர்களிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கும்?

1. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திமுக வாபஸ் வாங்கி மத்திய அரசை கவிழ்த்து விடுவோம் என்று மிரட்ட வேண்டும். அல்லது

2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திமுக ஆட்சியை விட்டு இறங்கிப் போராட வேண்டும்.

இப்படி நடந்தால் என்ன நடக்கும்?

மத்திய அரசு பதவிக்காலம் முடியும் இத்தருணத்தில் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வர உள்ள இந்த நிலையில் காங்கிரஸ் பகைத்துக்கொள்ள நேரிடும். திமுக இடத்தை தட்டிப்பறிக்க அதிமுகவின் ஜெயலலிதா தவமாய்த் தவம் கிடக்கிறார். கூட்டணி மாற்றத்துக்குத்தான் இது வாய்ப்பளிக்கும்.

சரி ஆட்சியை திமுக கைவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினை தீர்த்துவிடுமா? அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்!

இலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள்.





pradeepan
2009-02-06 12:12:00
pmalarviliy@gmail.com

good moorning

sudarviliyan
2009-02-06 12:27:00
sudarviliyan@yahoo.com

anaivarukkum ethe pool unmayayai udanukkudan velicham pootu kaattinaal makkal sariyana oru thalaivarai therivu saiya edu vilippunarvaaga erukkiradu tamil tamil endru vaaippeechil mattume erundaal poodaadu sayalil kaatta veendum katturai eluthiyavarukku enadu manamaarnda nandrigal tamilarin thaagam tamil eela thaayagam

Dr. V. Pandian
2009-02-06 08:32:00
porkkaiponds@yahoo.co.in

அக்னிபுத்திரனின் மடல் அயோக்கியத்தனமானது.

ஒரு அரசியல் இயக்கம் என்பது எல்லாக் காலகட்டத்திலும் இழப்புகளுக்கு அணியமாக இருக்கவேண்டிய ஒன்றுதான். இருண்டு கிடக்கும் மக்களின் வாழ்விற்கு ஒளி கொடுக்க வேண்டின் அந்த பாதையில் முட்கள் இருக்கலாம், கொடிய பாம்புகளும் இருக்கலாம். தமிழ் நாடு கொடிய பாம்புகள் நிறைந்த மண் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். அந்தப் பாம்புகளால் தான் அவருக்கு தீங்கு ஏற்பட்டது. அனால், தற்போது அந்தப் பாம்புகளோடு சமரசம் செய்துகொண்டு, அவற்றின் நஞ்சை மக்களின் மீது திருப்பியுள்ளார்.

நான் அன்று அதைச்செய்தேன், இன்னொன்றைச் செய்தேன் என்று சொல்வதிலிருந்து, இன்று நீங்கள் எதையும் செய்யவில்லை என்பது உறுதியாகிறது. அப்படிப் பட்ட இயக்கம் தற்போதைக்கு தேவையற்ற இயக்கம். இந்த எத்தர்கள் பதவியில் தொடர்வது தமிழருக்கு இனி ஆபத்தானது.

கருணநிதியின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் தான் இன்றய தமிழ் நாட்டுக் குடிகள். இதை அக்கினப்புத்திரன் ஏன் விமர்சிக்கவில்லை?

நமது தலைவர்களின் அபத்தங்களுக்கு ஞாயம் கற்பிக்க வேண்டாம். ஒரு தலைவனுக்கு வேண்டிய ஒழுங்கு இல்லாவிட்டால் அவன் தலைவனில்லை!

நாம் கராராக இருக்கவேண்டிய காலம் அணியமாகிவிட்டது!

இந்தப் பழம்பெருச்சாளிகளை ஒதுக்கி பதிய தலைமைக்கான களம் அமைப்போம்!

தனது மக்களுக்காக 30 ஆண்டு காலமாக தொடர்ந்து காட்டில் வாழ்கிறானே, களமாடுகிறானே அவன் தலைவனா? ஒரு முறை வரவேண்டிய பதவியை இழந்ததையே தியாகமாக ஒப்பாரி வைக்கும் இந்த எத்தர்கள் தலைவர்களா?

இனியும் மயக்கம் வேண்டாம் தமிழர்களே!

PUPESHMOHAN
2009-02-07 01:56:00
pupeshmohan@gmail.com

thanthu katchikku manthiri sabaiyl kolutha idamaha meratti kettu vanga theintha thamilarighar? avarkalukku ithu ondrum mudiyathathu alla yar ekkedu kettu ponalum thankku pathvi vendum ithuthan thrpothaia nilai paadu. itharkana balani varukira nadumantra therthal mudivukalil purinthukolvar

thirunavukkarasu
2009-02-07 02:15:00
thiru.mugil@yahoo.co.in

agniputhiranin madal kurithatha Dr.Pandian avarkalin karutthu migasariyanathu

G.Ravichandran
2009-02-07 02:19:00
ggravichandran@yahoo.com

Maniyarasan's article is superb and full of facts. But Agniputhran's counter shows his affiliation only.He does not have the open mind to confess the truths

gopal
2009-02-07 03:25:00
makizhventhan@gmail.com

Sarvathikaram is needed to eradicate castesim in eelam... ofcourse Prabakaran may think this and informed to frontline megazine....... we need this kind of approch atleast for 10 years....

look out karunanidhi speech about uttapuram.... valiyum irrukattum, Vazhiyum irrukattum... vote porukkikaLukkum, pathavikkum eppadi solpavarkaL ivalkaL.

சமரன்
2009-02-09 04:52:00
samara@gmail.com

இலங்கையில் தமிழ்தேசியக் கூட்டணியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இன்று புலிகளைத்தான் ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர், என்று தோழர் பெ.மணியரசன் கூறுகிறார்.
உண்மைதான். ஆனால், ஏன் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்... என்று கேள்வியையும் எழுப்பிப் பார்த்தால் உண்மையின் உட்பொருள் தெரிந்து விடும்.
புலிகளை ஆதரிக்காமல், இலங்கையில் தமிழ் அமைப்புக்கள்- அதன் தலைவர்கள் இயங்க முடியுமா என்ன? அல்லது அந்த தலைவர்கள் உயிர் வாழத்தான் முடியுமா?
மதுரையில் அண்ணன் அஞ்சா நெஞ்சனை(?) யாராவது, எதிர்க்கிறார்களா? அப்படித்தான் இலங்கையில் புலிகளுக்கு கிடைக்கும் ஆதரவும்.
இது உண்மை இல்லையென்றால், மதுரை மத்தியத் தொகுதி, மதுரை மேற்குத் தொகுதி, மதுரை திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் திமுக, 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பதற்கு- இத்தொகுதிகளில் திமுகவிற்கும்- தென்மண்டல 'அரசர்' அழகிரிக்கு உள்ள மதிப்பும் மரியாதையும்- அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பும்தான் காரணம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Dr. V. Pandian
2009-02-11 11:46:00
porkkaiponds@yahoo.co.in

ஐயா, சமரன் அவர்களே!

முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சி போடமுடியுமோ? வீண் முயற்சி!

அன்று புலிகளை எதிர்த்து, புலம் பெயர்ந்து வாழ்கின்றவர் கூட, இன்று புலிகளை ஆதரிக்கின்றனர்.

தற்போது, காலம் கடந்தாவது உண்மைகளும்,யதார்த்தமும் புரிந்தவர்களாக! புலிகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் வாழும்போது!!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP