Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLawGeneral
சட்டம்

வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் சட்டம் வழங்கும் உரிமைகள்

Pregnant lady குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்னரும் ஆறு வாரங்கள் முழுச் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட வேண்டும். 12 வாரங்களையும் சேர்த்து குழந்தை பிறந்ததும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

கருச்சிதைவு ஏற்பட்ட மகளிருக்கு, 6 வாரம் விடுப்பு தர வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும்போது பிரசவத்தினால் அல்லது கருச்சிதைவினால் பெண் ஊழியர் நோய்வாய்ப்பட்டால், அவருக்கு ஊதியத்துடன் கூடுதலாக ஒருமாத விடுப்பு தரவேண்டும்.

பிறந்த குழந்தைக்கு 15 மாதம் ஆகும்வரை பணியின் இடையில் இரண்டு முறை குழந்தையைக் கவனிக்கும் அவகாசம் தரவேண்டும்.

கர்ப்பிணி தொழிலாளரின் கடைசி மாதப் பணிகள் கடுமையாக இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தாயையும், குழந்தையையும் பாதிக்கிற எந்தவிதமான கடுமையான வேலையும் தரலாகாது.

பிரசவத்தின் போது பெண் ஊழியர் இறந்து விட்டால், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அவர் பணியாற்றிய அலுவலகம் ஆறு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்து விடுமானால், அந்தக் குழந்தை உயிரோடிருந்த வரையிலான காலத்திற்கு, தாய் பணியாற்றிய கம்பெனி தாய் பெற்று வந்த ஊதியத்தை வழங்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.