புன்முறுவல்
பாதசாரி
இதுவரை ஈட்டியது
மரணமே யென
உதடுகள் உணர்ந்த நொடியில்
பிரிக்க இயலா
மென்மையில் இறுகி
ஆனந்த சாந்தமுடன்
ஒட்டிக் கொண்டதொரு
மனம் மறைந்த
புன் முறுவல்
புன்முறுவலை புதைக்கவோ எரிக்கவோ முடியாது.
என் உடல் மலர் உதிர்ந்து
நறுமணமென பிரிந்த உயிர்
காற்றில் கரைந்த பின்னும்
வெட்ட வெளியில் ஒளிரும்
அந்த புன் முறுவல்
மகனே நானுனக்கு விட்டுச் செல்வது
புன்முறுவலை மட்டுமே
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|