Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
அக்டோபர் 2008 - மார்ச் 2009


வெள்ளைக்காகிதம்
மராத்தி மூலம்: சரண்குமார் லிம்பாலே
ஆங்கிலத்தில்: பிரியா அதர்கர்
தமிழில்: அன்பாதவன்

கேட்கவில்லை
உங்கள் வானத்திலிருந்து
சூரியனையோ சந்திரனையோ

உங்கள் பண்ணையை, நிலத்தை
உங்களின் உயரமான வீடுகளை
மேன்ஷன்களைக் கேட்கவில்லை

நான் கேட்கவில்லை
பொருட்களையோ, சடங்குகளையோ
சாதிகளை அல்லது உட்பிரிவுகளை

உங்கள் அன்னையரையோ
சகோதரிகளையோ மகள்களையோ
கேட்கவில்லை

நான் கேட்பதெல்லாம்
மனிதனாக எனது உரிமையை

எனது நுரையீரலிலிருந்து எழும்
ஒவ்வொரு சுவாசமும்
உங்கள் நூல்களில், பாரம்பரியங்களில்
நரக, சொர்க்கங்களில்
அச்சமூட்டும் மாசுகளால்
உண்டாக்குகின்றன பயங்கர அதிர்வுகளை

எங்களின் உறைவிடங்களை சிதிலமாக்க
திரளுகின்றன உங்கள் கைகள்
அடிப்பீர்கள் என்னை உதைப்பீர்கள்
சூறையாடி எரிப்பீர்கள் எங்கள் வீடுகளை

ஆனால் எங்ஙனம் கிழிப்பீர்கள்
கிழக்கில் ஆதவனைப்போல
விதைக்கப்பட்டிருக்கும்
என் வார்த்தைகளை...?

ஜாதிக் கலவரமெனும் தொற்றுநோய்
நகரம் நகரமாக
கிராமம் கிராமமாக
மனிதர் மனிதராக புரையோடும்
பூட்டப்படவும் விலக்கப்படவும்
சாலை மறிக்கப் படவும்
புலம் பெயர்க்கப்படவும் என...

எனது உரிமைகள் எனக்குத் தேவை
தாருங்கள் என் உரிமைகளை

மறுக்க முடியுமா உங்களால்
இப்படி கொளுத்தப்படும் நிலையை

பிடுங்கி யெறிவேன்
ரயில் தண்டவாளங்களைப் போல
வேத நூல்களை
நகரப் பேருந்தைப் போல எரிப்பேன்
நியாயமற்ற உம் நியாயங்களை

எனது உரிமைகள் உதிக்கின்றன
சூரியனைப் போல
மறுக்க முடியுமா உங்களால்
இந்த சூர்யோதயத்தை...?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.