Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2008

தமிழுக்குத் தலைமகன்
பரணிப் பாவலன்

பரிதியின் மகனாய் புதுவையில் எழுந்து
         பழந்தமிழ் இனத்தின் படையாய் நிமிர்ந்து
உரிமைப் போரில் உதயமாய் உவந்து
         உன்னத மாந்தனாய் வாழ்ந்தான் வளர்ந்தான்
பெரியார் சொன்னதை பாட்டாய்ப் பெயர்த்து
         பொய்யோர் சதையை கண்களால் உரித்து
வரிப்புலி இனமாய் போர்ப்படை சமைத்தான்
         வடவர் இனத்தை அதிலே புதைத்தான்
காவிகள், கசடுகள் பார்த்தால் உடனே
         காட்டு வேழமாய் மிதித்து நசுக்குவான்
காவியத் தமிழைக் காதால் கேட்டால்
         காய்ச்சியப் பாலாய் மொண்டு பருகுவான்
குருதிநீர் முடங்கி அடங்கும் வலியில்
         குன்றாய் நின்றான் தமிழ்க்குலம் காத்தான்
இறுதிநாள் அவனை இறுக்கும் வலியில்
         இன்தமிழ் வாழ்ந்திட இன்னுயிர் நெய்தான்
உருவிய உடைவாள் உறைக்குள் போடாது
         உறவுகள் வாழ்ந்திட காவலாய் நின்றான்
          பெருகிய பாவலர் படைக்கு; தானே


Unable to connect to database! Please try again later.