நாளைய வரலாறு
கவித்துவன்
தென்திசைத் தீவில்
தமிழின உயிர்குடிக்கும்
இருட்டின் ஆர்ப்பாட்டம்
வன்னிக் காடுகளோ
வசந்தம் பரப்ப
தன்னுயிர் ஈந்து
செந்நீர் வடிக்கின்றன
இறுகிவிட்ட
இதயத்தோடும்
பெருகிவிட்ட
வெறிமுகத்தோடும்
இருண்டு இருண்டு -
தமிழ்
இனம் அழிக்கிறது
சிங்களம்
விடுதலை
உணர்வுகளோ
வெளிச்ச நம்பிக்கை
விதைகளை ஊன்றி
வேர்விட்டு நிற்கிறது
ஆதிக்கம் எப்போதும்
அன்பை அறிந்ததில்லை
கனிவைக் கண்டதில்லை
விடுதலை மகரந்தத்தை
ஒருபோதும் முகர்ந்ததில்லை!
அடக்குமுறை ஏவி
நடக்கும் ஆதிக்கம் - தான்
குந்திய இடத்திலேயே
குழிபறித்து வீழும்
சிங்களத்தின் இனவெறி
சீழ் பிடித்துச் சாகும்
ஈழ விடுதலையோ
ஆழ வேரூன்றும்
நாளைய வரலாற்றில்
சோலையாய்ப் புத்திருக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|