“மீண்டும் எழுவோம்!”
கு.ஏகாம்பரம்
முத்துக்குமார்!
நீ
உன் உடலில்
தீ மூட்டடிக் கொண்ட்டாய்!;!
ஆனால்
தமிழர் உள்ளமெல்லாம்
எரிகிறதே...
அது எப்ப்படி?
நீ
ஒரு அறிக்கைதான்
வெளியிட்டாய்!
ஆனால்
ஓராயிரம்
கொத்துக் குண்டுகள்
வெடித்துச் சிதறுகின்றனவே...
அது எப்ப்படி?
இறந்ததால்
“பிறந்தவனே!”
எரிந்ததால்
“ஒளிர்பவனே!”
நாங்கள்
உன் மரணத்துக்காகக்
கண்ணீர்
சிந்தப் போவதில்லை!
அது
உன்னை
இழிவுபடுத்துவதாகும்!
நாங்கள்
உனக்கு
ஒன்றைச்
சொல்லிக் கொள்கிறோம்!
அது
ஃபிடல் காஸ்ட்ரோ
ஐ.நா.மன்றத்தில்
சொன்னதுதான்!
“மீண்டும் எழுவோம்!”
|