மஞ்சுளா கவிதை
வளர்ந்துகொண்டே இருக்கும்
என் உடல் தாண்டிய அழகொன்றை
சித்திரம் தீட்டமுடியாத துயரத்தில்
கண்ணுக்குள் கடல்நுரை பொங்க
தோற்றுப் போகிறது இயற்கை.
கடல் அழகல்ல வானம் அழகல்ல
காடு மலை மரம் மட்டை
எதுவும் அழகல்ல
தோற்ற இயற்கையின் பால்
ஒரு மாலைப்பொழுது வரை
பதிவு செய்யப்பட்ட
இயற்கையின் வெவ்வேறு மொழிகளை
பகலிடமே விட்டு விட்டு
கூடடைய வருகின்றன பறவைகள்
எல்லா வகையிலும் பேசப்பட்ட
அழகின் மொழி தோற்றுப்போய்
மீண்டும் என்னுடல் வரைய
மெருமிதம் கொண்டபடி
இரவு நகர்ந்துகொண்டே வருகிறது
பேசப்படாத என் உடல்மொழி நோக்கி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|