மச்சம்
- ஏ.ஜே. தாமஸ்
ஒரு பெண்ணை எனக்குத் தெரியும்
வலது கன்னத்தில் பெரிய மச்சமிருக்கும்
கொஞ்ச தூரத்தில் வசித்து வந்தாள்
முந்திரி மரங்களோடு
மலைபக்கம் அவள் வீடு
என் வீட்டுப்பக்கம்
அவள் நடமாடும்போது
நான் அவளை பார்ப்பேன், மச்சத்தை நீக்கியபடி
தலையைக் குனிந்தபடி கடப்பாள்
தச்சனின் மகளல்லவா அவள்
அவளுக்கு சிநேகிதர்கள் இல்லை என்றார் அம்மா
பின்னால் தச்சன் ஒருவன் அவளை மணந்து போனான்
அவளுக்கு குடும்பமும், குழந்தைகளும் ஆயிற்று
யாரோ சொன்னார்கள்
என் கவிதையில் ஏதோ குறைவதாய்
"அது பெரிய மச்சமா"
நான் கேட்டேன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|