சில வானங்கள் சில பறவைகள்
சரவணன் மாரியப்பன்
சிறுமி ஒருத்தி பாட்டியிடம்
வானம் உயரேப் போன
கதையன்று கேட்டு வந்தவள்
வானம் எத்தனை உயரத்தில் இருக்கிறது என்றாள்
நான் அப்பொழுது குடித்திருந்தேன்
எளக்குத் தெரியாது நான் வெளியூரு
வேண்டுமென்றால் பறவைகளிடம்
கேட்டுத் தெரிந்து கொள் என்றேன்.
வல்லூறிடம் கேட்டிருக்கிறாள் அதுவும்
நான் எப்பொழுதாவது ஒரு முறை அதன்
உச்சியைத் தொட்டு வருவேன் என்றிருக்கிறது.
புறாவிடம் கேட்டிருக்கிறாள் நான் அதன்
உச்சத்தில்தான் இருக்கிறேன் என்றிருக்கிறது பெருமையாக
வண்ணத்துப் பூச்சியிடம் கேட்டிருக்கிறாள்
நான் அதன் உச்சியில்தான் பறக்கிறேன்
என்றிருக்கிறது - இவ்வளவு கீழயா
இருக்கிறது வானம் பாட்டி
நீ இன்னொரு முறை இடி
அது இன்னும் மேலேப் போகவில்லை என்றாள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|