Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..?

Sleep walking

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் ஒருவித மனநோயின் வெளிப்பாடாக வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கிவைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகின்றதோ, அந்த மாதிரியே ஆழ்மனதில் நீண்ட காலமாக பதிந்திருக்கும் கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள், ஆசைகள், இச்சைகள், ஆவேச உணர்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்றீக்கொள்ளும் முயற்சிதான் ‘துயில் நடை’. தூக்கத்தில் கனவுக்கு அடுத்த கட்டம் துயில் நடை. தூக்கத்தில் நடப்பதற்கும் அந்தக் கணத்தில் அவர் காணும் கனவுக்கும் தொடர்புண்டு. கனவில் தோன்றும் உணர்வுகளுக்கு ஏற்ப அவர் அசைவு கொடுக்கிறார். புரிந்துக்கொள்ள முடியாத சில வார்த்தைகளையோ, வாக்கியங்களையோ சொல்வார், எழுந்து நடப்பார், தண்ணீர் குடிப்பார், கதவைத் தட்டுவார். எல்லாம் ஓரிரு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் சுய உணர்வுக்கு வந்துவிடுவார். ஆனால் நடந்தது, கதவைத் தட்டியது எல்லாமே அவருக்கு மறந்துவிடும் கனவு மாதிரி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.