Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
விலங்குகளைக் கொல்லாமல் கிடைக்கும் இறைச்சி...

விலங்குகளைக் கொன்று பெறும் இறைச்சியை ஆய்வுக் கூடத்தில் செயற்கையாகவே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் கொல்லப்படுவதன் மூலம் நாம் இறைச்சி பெறுகிறோம். ஆனால் எதிர்காலத்தில் இதற்க்கு முடிவு கட்டி ஆய்வுக் கூடங்களிலிருந்து நேரடியாக இறைச்சியே கிடைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

விலங்குகளிலிருந்து பெறப்படும் திசுக்கள் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படும் போது அவை இறைச்சியாகின்றன. இவற்றை வேண்டிய அளவுக்குக் கொழுப்பு மற்றும் சத்துக்களையும் அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும் என்பதும் இந்த முறையில் செயற்கை இறைச்சியை தற்போதே ஆய்வுக் கூடத்தில் உருவாக்க முடியும். ஆனால் வர்த்தக ரீதியில் ஒட்டு மொத்தமாக உருவாக்குவது பற்றிதான் இப்போது பேச்சே.

ஒரு செல்லிலிருந்து இந்த உலகத்துக்குக் தேவைப்படும் இறைச்சியை விலங்குகளைக் கொல்லாமலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். முதலில் மருத்துவத் தேவைக்காக விலங்குகள் செல்கள் திசு வளர்ப்பு முறையில் அதிகரிக்கப்பட்டன. தற்போது இறைச்சித் தேவையையும் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். விலங்கு செல்தான் இதற்கு மூல ஆதாரம் என்றாலும் ஆய்வுக்கூடங்களில் வளர்ந்த கறி விலங்கிலிருந்து எடுக்கப்படவில்லை என்பதால் அது சைவமா அசைவமா என்ற சர்ச்சை கூட எதிர்காலத்தில் எழும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.