தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 750 கிராம்
பட்டாணி - 50 கிராம்
தேங்காய் விழுது - 3 மேசைக்கரண்டி
வெங்காய விழுது - 2 மேசைக் கரண்டி
கசகசா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை - 1
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பட்டை - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கிராம்பு - 4
பச்சை மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி விழுது - 1 மேசைக்கரண்டி
பொரிகடலை மாவு, உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். அதனுடன் தேங்காய், உப்பு, கசகசா, மஞ்சள், ஊறவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வாசனைப்பூ, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெந்த கறிக் கலவையைக் கொட்டி தனியாத் தூள், தக்காளி விழுது, பொரிகடலை மாவு சேர்த்து கலக்க வேண்டும். கொதித்த பின் கொத்துமல்லி தூவி இறக்கினால் கோழி குருமா தயார். சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி