தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் அறிக்கைப்படி 38,000 இளம் பெண்கள்; தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கணக்குப்படி 4 லட்சம் இளம் பெண்கள், சுமங்கலித் திட்டம் என்கின்ற பெயரில் அதிக வேலைக்கு குறைவான சம்பளம், கூடுதல் நேர வேலைக்கு கூடுதல் சம்பளமின்மை, கட்டயாப்படுத்தி வேலை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைவான தூக்கம், உடல் சோர்வு, பாலியல் தொந்தரவு போன்ற வன்கொடுமைகளில் வதைக்கப்படுகின்றனர்.
இன்றைய சூழலில் விவசாயக்கூலிகளை விடவும் பஞ்சாலைக் கூலிகள் தான் அதிகளவில் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இந்தியப் பொருளாதாரத்தில் பஞ்சாலை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தியில் 14% பங்கையும், தேசிய மொத்த உற்பத்தியில் 5% பங்கையும், அன்னியச் செலவாணி வகையில் தேசிய உற்பத்தி வருமானத்தில் 20% பங்கையும், ஆடைத் தயாரிப்பு தொழில்கள் கொடுக்கின்றனவாம். 2009-ம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் மட்டும் 839 பஞ்சாலைகள் உள்ளனவாம். இப்படியாக பட்டி தொட்டியெங்கும் கொட்டி முழங்குகிறது இந்த பஞ்சாலைத் தொழில். திருப்ரில் துவங்கிய பனியன் கம்பெனி மோகம் தமிழகத்தின் பல கோடுகளிலும் பரவிக் கிடக்கின்றது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கோபிசெட்டிபாளையத்திலும் கூட இன்று பனியன் கம்பெனிகள் ஆதிக்கம் துவங்கி விட்டது. ஊர் ஊருக்கு பேருந்துகளை அனுப்பி கொத்து கொத்தாய் ஆட்களை வேட்டையாடுகின்றனர். விவசாயக் கூலிகள் பனியன் கம்பெனி மேல் மோகம் கொண்டு சென்று விட்டதால் விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை என்று வாட்டி வதைக்கும் இந்த பஞ்சாலைகள் தொழிலாளர்கள் உழைப்பை ஒட்டுமொத்தமாய் உறிஞ்சி விட்டு சக்கையாக்கி தூக்கி எறிகின்றன.
1990-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையால் பஞ்சாலைத் தொழில்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறைந்த சம்பளத்தில் அதிக வேலை வாங்க வேண்டும் என்பது தான் பஞ்சாலை உரிமையாளர்களின் முக்கியக் குறிக்கோளாய் இருந்தது. தொழிற்சங்க சட்டப்படி அது சாத்தியப்படாததால் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரை தான் தொழிற்சங்க சட்டம் உரிமை மறுக்கப்பட்ட கொத்தடிமை முறையான இந்த சுமங்கலித்திட்டம் குறிப்பாக திருமணம் ஆகாத இளம் பெண்களை குறிவைத்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் குறைந்த சம்பளத்தில் அதிக வேலை வாங்குவது. இதற்காக இளம் பெண்களை தரகர்கள் மூலம் வலைவீசி தேடிப் பிடிக்கின்றன இந்த பஞ்சாலைகள். இதன் வலையில் சிக்கும் இளம் பெண்கள் சிலந்தியின் வலையில் சிக்கிய ஈ-யைப் போலத்தான் உழைப்பு உறிஞ்சப்பட்டு சக்கையாக்கி அனுப்படுகின்றனர்.
1996-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி 14 வயது முதல் 20 வயது நிரம்பிய இளம்பெண்களை மூன்று ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு மூன்றாண்டு முடிவில் 30,000 தருவதாக நம்பகமொழி கூறப்படுகிறது.
பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு மணமுடித்து வைத்து, ஆனந்த கண்ணீரோடு புகுந்த வீட்டிற்கு அனுப்புவது, பெற்றோருக்கு தேனினும் இனிப்பான செயல். ஆனால், ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தினக்கூலித் தொழிலாளாளர்களுக்கு மலையினும், சுமையானது இந்தத் திருமணம். அன்றாட பிழைப்பிற்கே அல்லாடும் அன்றாடங்காய்ச்சிகள் பெண்குழந்தைகளுக்கு மணமுடித்து வைப்பது என்பது கடமை என்றாலும், ஒரு புறம் சுமையும் கூட அதற்காகவே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் ஏழை பெற்றோர்கள் அதிகம் பேர். குறிப்பாக திருப்பூர் பனியன் கம்பனிகளிலும், சிவகாசி தீப்பட்டித் தொழிற்சாலைகளிலும், கல்வியைத் தொலைத்து வாழ்க்கையைத் தேடும் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் ஏராளாமானோர்.
"இதப் பாரு, பொம்பள புள்ளைய பெத்துட்டாமேன்னு கவலையே படாத, இதுக்காகதான் சுமங்கலித் திட்டமின்னு ஒண்ணு புதுசா வந்திருக்கு, மூணு வருசம் உம் புள்ளைய வேலைக்கு அனுப்பு, தங்கறதுக்கு ஹாஸ்டலு, திங்கறதுக்கு கேண்டீன், எல்லாம் கொடுத்து வேலை செஞ்சு முடிச்சா வெளிய வரும்போது, கல்யாண செலவுக்கு 30,000 பணமும் குடுப்போம்." இப்படித்தான் ஆசை வார்த்தைகள் கூறி ஆட்களை தேற்றுகிறது இந்த தரகுக் கும்பல். இந்த ஆசை வார்த்தைகளில் சொக்கிப் போனவர்கள் சுமங்கலித் திட்டத்தில் பணிக்குச் சேர்ந்து சோர்ந்து போய் விட்டனர்.
இந்த சுமங்கலித் திட்டத்தை தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் நவீன முறை கொத்தடிமைத்தனம் என்றே பறைசாற்றுகின்றனர். சிறை வாழ்க்கை முறைக்கு இணையான கொத்தடிமை முறை தான் சுமங்கலித்திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை. பஞ்சாலைகளிலேயே தங்கி வேலை புரியும் இவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறைதான் பெற்றோரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். கூண்டுக் கிளியாக அடைப்பட்டு கிடக்கும் இவர்களது நிலை பரிதாபத்திற்குரியது.
இதற்காக கோவை சமூக ஆய்வு மையம், அருந்ததியர்கள் அதிகமாக வாழும் ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் பணிபுரியும் அருந்ததிய சமூக இளம்பெண் மற்றும் குழந்தைகளின் வேலை, சூழ்நிலை, அவர்கள் எதிர் நோக்கும் வன்முறைகள், உடல்நலப் பிரச்சனைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இத்திட்டத்தில் பெரும்பான்மையானோர், கடன்சுமை, வறுமை, வேலையின்மை என பஞ்சத்தில் தத்தளிக்கும் ஏழ்மையானவர்களே பலிக்கிடாய் ஆகின்றனர். குறிப்பாக சொல்லப் போனால் இந்த சுமங்கலித் திட்டத்தில் பணிபுரியும் 70% பேர் தாழ்த்தப்பட்டவர்களாகவும், அவற்றில் 40% பேர் அருந்ததியர்களாகவும், மீதமுள்ள 30% பேர் வறுமையில் வாடும் பிற வகுப்பினர்களாக உள்ளனர். இத்திட்டத்தில் அருந்ததியர்கள் பெருமளவில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
பொருளாதாரச் சூழலில் மிகவும் பின்தங்கியவர்களாய் உள்ள இந்த அருந்ததிய மக்களை தேடிச் செல்கின்றனர் தரகர்கள். இவ்வாறாக ஆட்களைச் சேர்த்து விடும் தரகர்களுக்கு ஒரு பெண்ணுக்கு மூன்றாயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்படுகிறது. இந்த சுமங்கலித் திட்டம் உழைப்பை சுரண்டும் ஒரு கொத்தடிமைத்தனம். இந்த ஆய்வுக்காக மாவட்டத்திற்கு 50 பெண் குழந்தைகள் வீதம் 250 அருந்ததியப் பெண் குழந்தைகள் மாதிரி தேர்வு செய்யப்பட்டது. இவர்களில் குடும்ப சூழல் காரணமாகவே பலர் பணியாற்ற வந்திருக்கின்றனர். தங்களது பெண் குழந்தைகளின் திருமணச் சூழலை சமாளிக்க முடியாமல் பெற்றோர்களே சுமங்கலித் திட்டத்தில் இணைத்துள்ளனர்.
சுமங்கலித் திட்டத்தில் பணிபுரியும் அருந்ததியர் சமூக தொழிலாளர்களில் 10% மாணவர்கள் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். 9% பேர் எழுத, படிக்கத் தெரியாதவர்களும், 30% பேர் மட்டும் 8-ம் வகுப்பு படித்தவர்களாக உள்ளனர். இவர்களில் 48%பேர் தரகர்கள் மூலம் பணியில் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும், இத்திட்டத்தில் பணிபுரியும் 86% பேர் 8மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்கின்றனர். 8 சதவீதம் பேர் 12 மணி முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். 83 சதவீதம் பேர் வார விடுமுறையின்றி வேலை செய்கின்றனர் என்பது தெளிவாகிறது. 82 சதவீதமானவர்கள் பணிபுரியும் இடத்தில் தங்களது மேற்பார்வையாளர்களால் கடுஞ்சொற்களால் திட்டப்படுவதாக கண்ணீர் வடிக்கின்றனர். 5 சதவீதமானவர்கள் தங்களுடன் பணியாற்றும் மற்ற பெண்களுக்கு பாலியல் தொந்தரவு நடந்ததாகத் தெரிவித்துள்ளனர். கொடுமையிலும் கொடுமையாக 11 சதவீதம் பேருக்கு பணிநிறைவுக்குப் பின் தருவதாக தெரிவித்த 30,000 ரூபாய் தொகையைத் தரவில்லை என்று கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
வன்கொடுமையில் வாட்டி வதைக்கப்படும் இந்த சுமங்கலித் திட்டம் இளம் பெண்களின் திருமண உதவிக்காகத்தான் சொல்லப்படுகிறது. ஆனால் சுமங்கலித் திட்டத்தால் தங்களது வாழ்க்கையையே தொலைத்து விட்ட பெண்களும் இருக்கின்றனர். எத்தனையோ பேர் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது அவலங்களை மறைத்து விடுகின்றனர். இப்பெண்களின் நிலை உண்மையிலும் கண்ணீர் மயமானது எனபதற்கு உதாரணமாய் இத்திட்டத்தால் தன் வாழ்க்கையைத் தொலைத்து நிர்கதியாக்கப்பட்டிருக்கும் துளசிமணி, தேவியை சொல்லலாம்.
துளசிமணி, தேவி இருவரும் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த இளம்பெண்கள். தரகர்களின் ஆசை வார்த்தை வலைகளில் சிக்கி சின்னபின்னமானவர்கள். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா, புதுவடவள்ளியைச் சார்ந்தவர் துளசிமணி. குடும்பச் சூழல் காரணமாய் 4-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்ட துளசிமணி 18 வயதில் இளமைக் கனவோடு சிறகடித்துப் பறந்த பறவையாய் இத்திட்டத்தில் சேர்ந்திருக்கிறார். அங்கு இவருக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளால் இன்று சிறகொடிந்து நிற்கிறார் என்பது வேதனைக்குரியது. துளசிமணிக்கு வெறும் 22 வயதுதான் ஆகிறது. சுமங்கலித் திட்டம் இவருக்குத் தந்த பரிசினால், 60 வயதுடையவரைப் தோற்றத்தோடு இருக்கும் இவரை பார்க்கவே பரிதாபம்தான்.
இந்த சுமங்கலித் திட்டத்தின் இன்னல்களை துளசிமணியிடம் நான் கேட்டபோது, ’’பெத்தவங்களுக்கு நான் ஒரு சுமையா இருக்ககூடாதுன்னு நெனச்சு என் கல்யாணத்துக்கு நானே சம்பாதிக்கலாமுன்னு ஆசையோட இந்த திட்டத்தில சேர்ந்தேன். ஆனா எனக்கு கடைசிவரைக்கு கல்யாணமே ஆகாதுங்கற வேதனையாத்தான் இருக்கு. பெத்தவங்களுக்கு சுமையா இருக்க கூடாதுன்னு நெனச்சேன். ஆனா நடக்க கூட முடியாம நான் அவங்களுக்கு சுமையாவே இருக்கேன். ஒரு நாளைக்கு பன்னெண்டு மணி நேரம் நின்னுட்டே வேலை செஞ்சதால என்னவோ என்னோட கால் தசையெல்லாம் இறுகி நடக்கக் கூட முடியாம ஆயிட்டேன். என்னால தரையில உட்கார முடியாது. உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாது, வேகமா நடக்க முடியாது. மொத்தத்துல நான் உயிர் வாழுறதே இந்த பூமிக்கும் என்னைப் பெத்தவங்களுக்கும் சுமைதான்” என்று பரிதாபமாய்ச் சொன்ன துளசிமணி, சுமங்கலித் திட்டத்தின் அவலங்களை கொட்டித் தீர்த்தார்.
இவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. வார விடுமுறை என்று அறிவிக்கப்படும் ஒரு நாளில் இவர்களுக்கு மற்ற வேலை கொடுக்கப்படுகிறது. தூங்குபவர்களை எழுப்பியும் வேலை வாங்கப்படுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்களிடமும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிறது. இவ்வாறான அவலங்களை நம்மிடம் சற்றே கண்ணீரோடு கூறினார் துளசிமணி.
தேவி சத்தியமங்கலம் அருகே பெரியூரைச் சார்ந்தவர். சுமங்கலித் திட்டத்தில் பணிபுரிந்து விட்டு வந்த பின்னர் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நடக்கவிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீராத வயிற்றுவலியால் துடித்திருக்கிறார். பஞ்சாலைகளில் சுவாசம் வழியே உட்புகுந்த பஞ்சுகள் வயிற்றில் தேங்கிவிட்டதாக டாக்டர் சொல்லியிருக்கிறார். இதனால் நடக்கவிருந்த திருமணமே நின்றுவிட்டது.
ஏதோ அரசின் திட்டத்தைப் போல பெயரைக் கொண்டுள்ள இந்த சுமங்கலித் திட்டத்தின் நோக்கமே பஞ்சாலை முதலாளிகளின் பேராசைப் பசிக்கு இளம்பெண்களை இரையாக்குவதுதான். தொழிற்சங்க சட்ட விதிகளின்படி பஞ்சாலைத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, விடுமுறைகளுக்காக தொழிற்சங்கங்களாய் ஒன்று பட்டு போராடி உரிமையைப் பெற்றனர். இதனால் பாதிப்படைந்த ஆலை உரிமையாளார்கள் பெருலாபத்தை ஈட்ட வேண்டி கூலி குறையவேண்டும் என்கிற நோக்கில் பெருமளவில் பெண்களை பணிக்கு அமர்த்தினர்.
தொழிற்சங்க சட்டப்படி மாலை 6 மணிக்கு மேல், எந்தவொரு பெண்ணும், எந்தவொரு தொழிற்சாலையிலும் பணிபுரியக்கூடாது. பணபலத்தின் முன் இந்த சட்டம் கூட தோற்றுப்போனது. இந்த சட்டத்தையே மாற்றி அமைக்க முதலாளி கும்பல்கள் முன்வந்தன. பெண்களுக்கு சமஉரிமை வேண்டும் என்கிற கோரிக்கையின் அடிப்படையில் ஆணுக்கு சரி சமமான நேரம் பெண்களும் வேலை செய்யலாம் என்று வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றன. முதலாளிகளின் சுய லாபத்திற்காக சட்டமே திருத்தி அமைக்கப்பட்டது என்பது முதலாளிகளுக்கானது அரசு என்பதற்கான நிரூபணம். இப்படியாக பெண்களும், ஆண்களுக்கு சரிசமமான வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிற்சங்க சட்டப்படி பெண் தொழிலாளி கர்ப்பம் அடைந்து விட்டால் அப்பெண்ணுக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் தரவேண்டும், இதுவும் முதலாளிகளின் பெருலாபத்தை அடையும் போக்குக்கு எதிராக இருந்தது. இதனால் திருமணம் ஆகாதவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாலை முதலாளிகள் செயல்பட்டனர். அரசால் நியமிக்கப்பட்ட குழுவே மக்களுக்கு பாதகமாகவும், முதலாளிகளுக்கு சாதகமாகவும் ஒரு ஆலோசனையை பரிந்துரைத்தது. அதுதான் இந்த சுமங்கலித் திட்டம்.
சுமங்கலித் திட்டம் என்பது நவீன முறை கொத்தடிமைத்தனம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இத்திட்டம் பல இளம் பெண்களின் கனவுகளையும், எதிர்காலத்தையும் பாழாக்கியுள்ளது. இளம்பெண்களை வதைக்கும் இந்த சுமங்கலித் திட்டத்தை தடை செய்ய வேண்டும். தொழிற்சங்க சட்ட பாதுகாப்பிற்கு எதிராக தொழில் செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் உரிமையை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச கூலியை தொழிலாளர்களுக்கு பெற்றுத்தர அரசு அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சுமங்கலித் திட்டத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக மாற்றப்பட வேண்டும் அல்லது அவர்களது மறுவாழ்விற்கு அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும். இதுவே இப்பிரச்சனைக்கான முக்கியத் தீர்வு என்பது சமூக அமைப்புகளின் கருத்து.
நவீன முறை கொத்தடிமைத்தனமான இந்த சுமங்கலித் திட்டத்தில் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த இளம் பெண்கள் பெரிதளவில் வாட்டி வதைக்கப்படுகின்றனர். என்பது மறுக்கமுடியாத உண்மை. அருந்ததியர் சமூகத்தினர் பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கியவர்களாக உள்ளதால் தரகர்கள் இம்மக்களை குறிவைக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தேவி, துளசிமணி இருவருக்கும் வைப்புநிதி இன்னமும் வழங்கப்படவில்லை. இவர்களின் மருத்துவச் செலவிற்கு பணம் தரமுடியாது என பஞ்சாலை உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். இன்று மருத்துவச் செலவிற்கு கூட அல்லாடி வருகின்ற இந்த தேவி துளசிமணியைப் போல தமிழகத்தில் இன்னும் எத்தனையோ தேவிகளும், துளசிமணிகளும் எதிர்கால வெளிச்சமின்றி இறந்தகால இருட்டினூடே புதைந்து தேம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த கண்ணீர்த் துளிகளுக்கு யார்தான் பதில் சொல்வது?
- கி.ச.திலீபன்
நன்கு சுரண்டுவதற்குப் பயிற்சி பெற்ற முதலாளிகள், பயிற்சியாளர் என்ற பெயர் சூட்டி, இளம் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுகிறார்கள ். உழைப்பின் மதிப்பில் ஒரு பகுதியை மட்டும் தொழிலாளிக்குக் கொடுத்து விட்டு, மறு பகுதியை, கூலி கொடுக்காத பகுதியை, முதலாளி சுரண்டிவிடுகிறா ர். இந்த உபரிமதிப்புச் சுரண்டலின் மீதுதான், முதலாளித்துவச் சமூகமே கட்டி எழுப்பப்பட்டுள் ளது.
உழைக்காமலே கொழுக்கும் முதலாளிகளுக்கு, தந்திர புத்தியும், படைப்பாற்றலும், கற்பனை வளமும், நிறையவே உண்டு, அவர்களுக்கு, ஒட்டச்சுரண்ட, புதுப்புது ஆலோசனை தருபவர்களுக்கும ் குறைவே இல்லை. இத்தகைய ஒரு கண்டுபிடிப்புதா ன், பயிற்சியாளர் முறை.
தொழில் துறை நவீன பெரு முதலாளித்துவம் பிறப்பதற்கு முன்பு, இங்கிலாந்து நாட்டில், பட்டறைத் தொழில்களில், தொழில் பழகுநர் முறை அறிமுகப்படுத்தப ்பட்டது. மூலதனத்தின் பிறப்பு நூலில், மார்க்ஸ் 1860ல் டன்னிங் என்பவர், தொழில்களின் சங்கங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் என்ற தலைப்பில் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார்.
இயற்கை சூனியத்தை வெறுத்தது போன்று மூலதனம் லாபமே இல்லை அல்லது குறைந்த லாபம் என்பதைத் தவிர்க்கவே விரும்புகிறது. போதிய லாபம் பெறும்போது மூலதனம் மிகவும் துணிவுடன் இருக்கிறது. ஒரு 10 சதவீதம் லாபமே எங்கு வேண்டுமாயினும் மூலதனம் ஈடுபடுத்தப்படுவ தை உத்தரவாதம் செய்யும், 20 சதவீதம் என்றால் அது நிச்சயமாயும் ஆர்வத்துடனும் முன்வரும், 50 சதவீதம் லாபம் அதற்கு நேரடியான துடுக்குத்தனத்த ைத் தரும், 100 சதவீதம் லாபம் என்றவுடன் மனிதச் சட்டங்கள் அனைத்தையும் மிதித்துத் துவைக்க அது ஆயத்தமாகிவிடும் , 300 சதவீதம் லாபம் என்றால் அது எந்தக் குற்றச் செயல் புரியவும் தயங்காது. அதன் உரிமையாளர் தூக்கிலிடப்பட நேரிடினும் அந்த அபாயத்தையும் சந்திக்கத் தயாராயிருக்கும் . கொந்தளிப்பும் பூசலும் லாபத்தைக் கொண்டு வருமானால், அது, அவை இரண்டையுமே தாராளமாக ஊக்குவிக்கும்”.
பயிற்சியாளர்கள், தொழில் பழகுநர்கள் முதலில், உலக வரலாற்றில், இங்கிலாந்து நாட்டின் டெர்பிஷயர், நாட்டிங்ஹாம்ஷயர ் மற்றும் லங்காஷயர் பட்டறைகளில், அரங்கேறினர். அவர்களின் துன்பக்கதை பற்றி மூலதனத்தின் பிறப்பு நூல் சொல்கிறது.
“சிறு குழந்தைகளின் சிறிய சுறுசுறுப்பான விரல்களே மிகவும் அதிகமாக வேண்டப்பட்ட தால் லண்டன், பர்மிங்ஹாம் ஆகியவற்றின் பல்வேறு வட்டார வேலைவிடுதிகளிலி ருந்து பழகுனர்களைத் திரட்டிப் பெறும் வழக்கம் திடீரென உதித்தது. பல பல ஆயிரக்கணக்கான இந்தச் சின்னஞ்சிறு மகிழ்ச்சி காணாத ஜீவன்கள் 7 முதல் 13 அல்லது 14 வயது வரை எட்டியவர்கள், அவர்களை ஆலைக்கருகிலுள்ள பழகுனர் விடுதியில் தங்க வைத்துத் தமது பழகுனர்களுக்கு உணவும் உடையும் அளிப்பது வழக்கமாக இருந்தது. வேலைகளைக் கவனிக்க வேண்டி மேலாளர்கள் நியமிக்கப்பட்டா ர்கள். அவர்கள் பெறும் சம்பளம், அவர்கள் கிட்டி கட்டி வாங்கும் வேலையின் அளவின் விகிதாச்சாரத்தி ல் இருந்ததால், அவர்கள் இச்சிறுவர்களைக் கசக்கிப் பிழிந்து அதிகமான வேலை வாங்குவதில் அக்கறை கொண்டிருந்தார்க ள்.
இதன் விளைவு துன்புறுத்தலே என்பது கண்கூடு. பல பட்டறைத் தொழில் மாவட்டங்களில் குறிப்பாக லங்காஷயரில் பட்டறைகளின் எஜமானர்களிடம் இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ுள்ள தீங்கு கருதா உற்றார் உறவோரற்ற இந்த ஜீவன்கள், நெஞ்சையுருக்கத் தக்க கொடுமைகளுக்கு இலக்காகக்கப்பட் டார்கள்; மிகூழைப்பால் அவர்கள் சாவின் விளிம்புக்குச் சரியுமளவுக்குத் தொல்லைப்படுத்தப ்பட்டார்கள். கசையடி பெற்றார்கள். அப்பட்டமான கொடுமையினை கூவிச் சொல்லும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
பெரும்பாலும் பட்டினிபோடப்பட் டு எலும்பும் தோலுமாக இருந்த அவர்கள் கசையடி கொடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குத ் துன்புறுத்தப்பட ்டனர். பொது மக்களின் கண்ணில் படாதவையாக இருந்த டெர்பிஷயர், நாட்டிங்ஹாம்ஷயர ் மற்றும் லங்காஷயரின் எழில் கொஞ்சும், கற்பனைக் காவியப் பின்னணியுடைய பள்ளத்தாக்குகள் , சித்திரவதையின் பல படுகொலைகளின் துயரார்ந்த தனியிடங்களாயின. பட்டறையதிபர்களி ன் லாபங்கள் அமோகமாக இருந்தன. இது அவர்களுக்குத் திருப்தியளிப்பத ற்கு மாறாக மேலும் லாபப் பேராசையைத் தூண்டியது.
எனவே அவர்கள் வரையறை என்ற சாத்தியக்கூறே இல்லாத அளவுக்கு லாபம் அடைவதற்கான ஒரு வழி துறையினைக் கையாளத் தொடங்கினார்கள். அதாவது “இரவு வேலை” எனப்படும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். இதன்படி பகல் பூராவும் வேலை வாங்கி ஒரு பகுதியினரைச் சோர்வடையச் செய்து விட்டு இரவு முழுவதும் வேலை செய்வதற்கு இன்னொரு பகுதியைத் தயாராக வைத்திருந்தார்க ள். இதன் மூலம் இரவு வேலைப் பகுதியினர் இப்போதுதான் விடுத்துச் சென்ற படுக்கைகளில் பகல் வேலைப் பகுதியினர் படுக்கச் செல்வர், அதேபோன்று காலையில் பகல் வேலைப் பகுதியினர் எழுந்தவுடன் அவர்கள் பயன்படுத்திய படுக்கைகளில் இரவு வேலைக்காரர்கள் மறுபடியும் வந்து படுப்பார்கள். லங்கா ஷயரில் படுக்கைகள் எப்போதுமே ஆளின்றி சூடு குறைந்து விடவில்லை என்பது பொது மரபாகிவிட்டது”.
ஜெயலலிதா தாலிக்குத் தங்கம் திட்டம் அறிமுகப்படுத்து ம் முன்பாகவே, நூற்பாலை, ஜவுளி முதலாளிகள் திருமாங்கல்யத் திட்டத்தை அறிமுகப்படுத்தி விட்டார்கள். விவசாயம் வாழ வழி தராத, வேலை வாய்ப்பில்லாத கிராமப்புற மாவட்டங்களிலிரு ந்து, 18 வயதிற்குக் கீழான இளம் பெண்களை, திருமாங்கல்யத் திட்டம், சுமங்கலித் திட்டம் என்ற பெயரால் முகவர்கள் மூலம் முதலாளிகள் தமது ஜவுளி ஆலைகளுக்கு இழுத்து வந்தார்கள். 3 வருடம் வேலை பார், முடிவில் கிடைக்கும் ரூ.30,000, நீயே தாலி வாங்கலாம், சுமங்கலியாகலாம் என வலை விரித்தனர்.
வலையில், ஆயிரம் ஆயிரமாய் இளம் பெண்கள் சிக்கினர். இவர்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட்ட பெயர் “பயிற்சியாளர்கள ்”. இவர்கள் 21ஆம் நூற்றாண்டின் நவீனக் கொத்தடிமைகள்.
எவருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத இளம் பெண்களை, எதிர்த்துக் கேட்க முடியாத நாதியற்றவர்கள் என்பதால், ஒட்டச் சுரண்டினார்கள். எப்படியோ விஷயம் வெளியே கசிந்தது. ஏஅய்சிசிடியு உள்ளிட்ட இடதுசாரி சங்கங்கள், சில தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மத்தியில் இந்த அநியாயத்தை அம்பலப்படுத்தின . ஊடகங்களும் வேறு வழி இல்லாமல், இந்த முறை பற்றி கேள்விகள் எழுப்பத் துவங்கின.
மக்கள் தொகையில் (பாப்புலேஷன்) உற்பத்தியில் (புரொடக்ஷன்) பெரும் எண்ணிக்கையில் உள்ள உழைக்கும் மக்கள், சொத்து (பிராபர்ட்டி) அதிகாரம் (பவர்) ஆகியவற்றில் மட்டும் ஓரஞ்சாரத்தில் உள்ளனர். திருத்த மசோதா 47/2008, உட்பட பல்வேறு உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் தமிழக அரசியலின் நடுநாயகத்திற்கு ஏன் வரவில்லை?
குடும்ப நலன் காக்க மத்திய அரசிற்கு நிர்ப்பந்தம் தரும் திமுக தலைவர், தாம் கொண்டு வந்த திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மத்திய அரசிற்கு எதிரான போராளி எனத் தம்மைப் பற்றிய பிம்பம் உருவாக்குகிற முதல்வர் ஜெயலலிதா, ஏன், மத்திய அரசு திருத்தச் சட்டம் 47/2008க்கு ஒப்புதல் தர வேண்டும் எனச் சண்டை போட மறுக்கிறார்?
அவர்கள் அப்படித்தான், அவர்களது வர்க்க இயல்பு அப்படித்தான் எனச் சொல்லிக் கொண்டு, தமிழகத் தொழிலாளர் இயக்கம் தொழிற்சங்க இயக்கம் செயலூக்கமின்றி இருக்க முடியுமா?
திருத்த மசோதா 47/2008 நிறைவேற நாம் விடாப்பிடியான விட்டுக்கொடுக்க ாத நடவடிக்கைகள் எடுத்துள்ளோமா? நாமே போதுமான அளவிற்குக் கேள்வி எழுப்பாதபோது, திமுக, ஐஅதிமுக அரசுகள் தாமாகவே அக்கறை காட்டுமா?
திரும்பவும் அகில இந்திய தொழிலாளர் வர்க்கப் பொது வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. இரு தினங்கள் வேலை நிறுத்தம் என்றும் பேசப்படுகிறது. தமிழக இடதுசாரி சங்கங்கள் மொத்த தொழிற்சங்க இயக்கம் மீதும் செல்வாக்கு செலுத்தி, திருத்த மசோதா 47/2008க்கு ஒப்புதல், தொழிற்சங்க அங்கீகாரத் திற்கான திருத்தச் சட்டம், குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000, அமைப்புசாரா தொழிலாளர் நலன்கள் ஆகிய உண்மையான பற்றி எரியும் பிரச்னைகளைச் சேர்த்துக் கொண்டு, அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது ஆண்டவனைக் குறிக்காது, உழைக்கும் மக்களைத்தான் குறிக்கிறது என நிரூபித்துக் காட்
RSS feed for comments to this post