அய்யா.. உங்களின் தலித்துகளுக்கு ஆதரவான போராட்டத்தை நினைத்தால் இன்றும் மெய்சிலிர்க்கத்தான் செய்கிறது. ஆம் அய்யா அது அம்பேத்கரின் சிலை திறப்பாக இருந்தாலும் சரி, குடிதாங்கி புரட்சியானாலும் சரி, சரிந்து போய்க்கிடந்த இந்த அரசியலில் ஒரு புதிய பரிணாமத்தை நான் உங்களிடம் கண்டேன். நீங்கள் பேசிய மார்க்சியமும் லெனினியமும் அம்பேத்கரியமும் பெரியாரியமும் என்னை அதிகமாய்க் கவர்ந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் உங்கள் மீது எனக்கு ஈடு இணையில்லாத மதிப்பும் இருந்தது
ஆனால் இப்போது ஏனய்யா நீங்களே அந்த சமுதாயத்தை ஒடுக்க நினைக்கிறீர்கள்? அதன் அர்த்தம் என்ன? இத்தனை நாள் நீங்கள் நடத்தியது அரசியல் நாடகமா அல்லது யாருக்கேனும் அடிமைப்பட்டு போனீர்களா? சொல்லுங்கள் அய்யா! உங்களோடு கடந்த சட்டமன்றத் தேர்தலிலே சிறுத்தைகள் கூட்டணி வைத்து போட்டியிட்ட போதும் எத்தனையோ இழப்புகளையும் தாண்டி ஓடி ஓடி உழைத்தார்களே சிறுத்தைகள், அதை எப்படி மறந்தீர்கள் அய்யா! ஜெயங்கொண்டம் தொகுதி சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பிறகும் நீங்கள் கேட்ட ஒரே காரணத்திற்க்காக காடுவெட்டி குருவிற்காக விட்டுக் கொடுத்தார்களே சிறுத்தைகள், அதையும் எப்படி மறந்தீர்கள்?
குரு மீது எத்தனையோ கசப்புகள் இருந்த போதிலும் உங்கள் முகத்திற்காக ஓடி, ஓடி, வாக்கு சேகரித்து வெற்றி பெறச் செய்தார்களே, உங்களால் எப்படி மறக்க முடிந்தது? காடுவெட்டி தான் நன்றி மறந்து பேசுகிறார்.. நீங்கள் எப்படி அவரின் வன்முறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறீர்கள்?
உங்களை காயப்படுத்தவோ, உங்களை விமர்சிப்பதாய் நினைத்தோ இதை எழுதவில்லை. உங்களிடம் இதையெழுப்ப எனக்கு உரிமை இருக்கிறது. ஆம் எம் விடியலில் உங்களுக்கான பங்கும் இருக்கிறது. அந்த உரிமையில் இதை உங்கள் முன் எழுப்புகிறேன். மற்றபடி இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.
தமிழ்த் தேசியத்தை தூக்கிப் பிடித்த உங்களால் இன்று எப்படி சாதியத்தை தூக்கிச் சுமக்க முடிகிறது? திவ்யா - இளவரசன் காதல் திருமணத்தால் தான் தருமபுரி கலவரம் நிகழ்ந்ததாய்ச் சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கே தெரியும், அந்த காதலுக்கும் கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது முற்றிலும் திட்டம் தீட்டி நடத்தப்பட்ட வன்முறை என்று. உன்மையைச் சொல்லுங்கள் அய்யா, திவ்யாவின் தந்தை தற்கொலைதான் செய்து கொண்டாரா என்று? மையப் புலனாய்வில் தெரிந்து விடும் அய்யா. அந்த நத்தம் கிராமத்திலே ஏற்கனவே 6 குடும்பங்களில் வன்னிய சகோதரிகள் சாதி மறுப்புத் திருமணம் புரிந்து வாழ்கிறார்கள். வன்னியர்களும் தலித்துகளும் எவ்வளவு ஒற்றுமையாய் அங்கு வாழ்ந்து வந்தார்கள்.. அங்கு இயங்கிய நக்சல்பாரிகளின் இயக்கம் சொல்லித்தந்த பாடம் அது. அதற்குச் சான்று தான் அப்பு, பாலன் தோழர்கள். அப்படிப்பட்ட புரட்சி மண்ணில் சாதியத்தைத் தூண்ட எப்படி மனம் வந்தது? அதற்காக எத்தனை நாள் திட்டம் தீட்டி செயல்படுத்தியிருப்பார்கள்? உண்மையைச் சொல்லுங்கள் அய்யா, உண்மையாகவே அது உங்களுக்குத் தெரியாதா?
ஜீன்ஸ் பேண்டும், கூலிங் கிளாசும் போட்டு வந்து வன்னியப் பெண்களை மயக்கி விடுகிறார்கள் என்று சொல்கிறீர்களே, அப்படி மயங்கிப் போகிறவர்களா பெண்கள்? எப்படி அய்யா என் வன்னிய சகோதரிகளை உங்களால் காயப்படுத்த முடிந்தது? அங்கு தானய்யா உங்களின் பெண்ணியம் தோற்று விட்டது.
இந்த வன்முறையை தூண்டியவர்கள் வெளியே நிம்மதியாயிருக்க என் அப்பாவி வன்னிய சகோதரர்களை சிறைக்கு அனுப்ப எப்படி அய்யா உங்களுக்கு மனம் வந்தது? உங்களுக்கு வேண்டுமானால் அப்பாவி வன்னிய தோழர்களின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு இருக்கிறது. திவ்யாவின் குடும்பத்தின் மீதும் வன்னிய சகோதரிகளின் மீதும் எங்களுக்கு அக்கறை இருக்கிறது. நீங்கள் சொல்லும் அதே புள்ளி விவரத்தை உண்மையாய் சொல்ல வேண்டுமாயின், தலித் பெண்கள் தான் அதிகமாய் பாலியல் தொல்லைகளுக்கு பலியாகி இருக்கிறார்கள்.
உங்களின் மீது இருந்த பற்று, உங்களின் வார்த்தைகளாலே வெறுக்கப்பட்டது... ஆம் அய்யா! 1989களில் சொன்னீர்கள், இந்த கட்சி முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்திற்க்காக தொடங்கப்பட்டது; நானோ என் குடும்பத்தாரோ பொறுப்புகளிலோ அல்லது பதவிகளிலோ வந்தால் மின் கம்பத்திலே கட்டி வைத்து அடியுங்கள் என்றீர்கள்.. என்ன நடந்தது? அண்ணன் அன்புமணியை மைய அரசின் அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள்? இதையும் விட்டு விடலாம், பதவிதானே பரவாயில்லை என்று.
அடுத்து வந்த தேர்தலிலே என் செய்தியாளர் சொந்தங்கள் உங்களிடம் அதிமுகவோடு கூட்டனி வைப்பீர்களா என்று கேட்டார்கள் அதற்கு நீங்கள் சொன்னீர்கள், நான் அந்த அம்மாவோடு கூட்டணி வைத்தால் என் அம்மாவோடு படுப்பதற்குச் சமம் என்று மானத்தோடு சொன்னீர்கள். ஆனாலும் எப்படி அய்யா, அந்த அம்மாவோடு கூட்டணி வைத்து உங்கள் தாயின் புனிதத்தைக் கொச்சைப்படுத்தினீர்கள்.
இப்போது திராவிட கட்சிகளோடு கூட்டணியில்லை என்று அறிவித்துள்ளீர்கள். அதுவும் நிலையானது இல்லை என்று எல்லோருக்கும் தெரியும் அய்யா!
நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னீர்கள், ஆம் நான் சாதி வெறியன் தான், வன்னிய சாதி வெறியன் தான் என்று. இதை நம்முடைய மக்கள் தொலைக்காட்சியே பதிவு செய்தது. இருக்கட்டும் அய்யா, நாங்கள் உங்களை தமிழுக்கான தலைவனாய்ப் பார்த்தோம். ஆனால் நீங்களோ, இல்லை இல்லை நான் வன்னிய தலைவன் மட்டும் தான் என்று எங்கள் தவறை உணர வைத்தீர்கள். நன்றி அய்யா.
அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அய்யா குறைந்தது அந்த வன்னிய சொந்தங்களுக்காவது உண்மையாய் இருங்கள். உங்களின் அரசியலுக்கு அந்தத் தோழர்களை பலியாக்கி விடாதிர்கள். வளர்ந்து வரும் இந்த இளைய தலைமுறைகளின் நெஞ்சுக்குள் நஞ்சினை விதைத்து விடாதீர்கள்! ஆம் அய்யா அதை நீங்கள் அறுவடை செய்யப் போவதில்லை. நாளைய தலைமுறைகள்தான் அறுவடை செய்யப்போகிறது. அந்த சமூகப்பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது அய்யா!
ஒன்றை சிந்தித்தீர்களா அய்யா! ஒரு காலத்தில் உங்களோடு கூட்டணி வைக்க கலைஞரும், ஜெயலலிதாவும், சோனியாவும், அத்வானியும், வைகோவும் போட்டி போட்டார்கள். ஆனால் இன்றைய நிலையைப் பார்த்தீர்களா அய்யா! லெட்டர் பேட் அமைப்புகளான சாதிச் சங்கங்களோடு போக வேண்டிய சூழலுக்கு வந்து விட்டீர்களே! 'எங்களோடு 81 சதவிகித சாதி அமைப்புகள் இருக்கின்றன. 19 சதவிகித தலித் அமைப்புகள் எங்களை என்ன செய்ய முடியும்' என்றீர்கள். இதுவே போதுமைய்யா நீங்கள் தரங்கெட்டுப்போனதற்கு.
போதும் அய்யா, காடு வெட்டிக்காகவும் சாதி வெறியர்களுக்காகவும் நீங்கள் அடிமைப்பட்டது போதும். வெளியே வாருங்கள்! உங்களுக்காக இங்கே எத்தனையோ சொந்தங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. சாதிய அரசியல் போதும்! சமூக நல்லிணக்கத்திற்க்காக வாருங்கள்! ஆம் பொது நீரோட்டத்திற்கும் தமிழுக்கும் உங்களின் தேவை இன்னும் இருக்கிறது. இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அடிமை விலங்கை உடைத்தெறிந்து வெளியே வருவீர்கள் என்று.
- கீழ்.கா.அன்புச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
"மதம்" சமத்துவம் என்ற போர்வையில் உருவாக்கும் நன்மையைவிட அது ஏற்படுத்தும் அழிவே அதிகம். ‘சமத்துவத்’துக் கு எதிரான "சாதி"
ஏற்படுத்தும் அழிவைவிட அது உருவாக்கும் நன்மைகள் அதிகம்.
மனித இனம், இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்தது: மதம் என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு… சாதி என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு என வாழ ஆரம்பித்தது. அதில் சாதி மிகவும் இழிவானது என்று மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ ஆரம்பித்த மேற்குலகம் உரத்த குரலில் சொல்லி, அதை சாதிய அமைப்பில் வாழும் நம்மவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்ற னர். இடை, கடை சாதியினர் மிகவும் வேதனை நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் அவர்களுடைய அனைத்து வேதனைகளுக்கும் மேல் சாதியினர்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது . ஆனால், உண்மை நிலை என்ன?
சாதிய வாழ்க்கை முறை அந்த அளவுக்கு இழிவானதுதானா என்பதை முதலில் பார்ப்போம்.
சாதி அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்தில் இந்தியா அனைத்துக் கலைகளிலும் சிறந்ததாக இருந்திருக்கிறத ு. கல்வியில் சிறந்து விளங்கியிருக்கி றது. தத்துவம், ஆன்மிகம் போன்ற துறைகளில் உலகுக்கே முன்னோடியாக இருந்திருக்கிறத ு. தேவையான தளங்களில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள ் அருமையாக இருந்திருக்கின் றன. மையம் அழிக்கப்பட்டு, அதிகாரப் பரவலாக்கம் மிகுந்த ஆட்சி அமைப்பாக இருந்திருக்கிறத ு. விவசாயம் போன்ற அடிப்படைத் தொழில்களில் முன்னேறிய நிலையில் இருந்திருக்கிறத ு. பிற அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்றதாக இருந்திருக்கிறத ு. ஏற்றுமதியிலும் மிகுதியாக ஈடுபட்டிருக்கிற து. ஒரு மனிதனின் உடலில் இருக்கும் வெவ்வேறு உறுப்புகள் வெவ்வேறு பணிகளைச் செய்வதுபோல், சமூகத்தின் பல்வேறு குழுக்கள் மிகுந்த ஒத்திசைவுடன் பணிபுரிந்து வந்திருக்கின்றன .
பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்னால் வரை உலகிலேயே அனைத்துத் துறைகளிலும் இந்தியா உச்சத்தில் இருந்திருக்கிறத ு. இது பிரிட்டிஷாரின் ஆவணங்களிலிருந்த ே ஊர்ஜிதமாகியிருக ்கும் நிலையில் சாதி அமைப்பு ஒரு சாபக்கேடாக இருந்திருக்க முடியுமா?
சாதிக்கும் மதத்துக்கும் இடையில் இருக்கும் பொதுவான அம்சங்களையும் வித்தியாசங்களைய ும் முதலில் பார்ப்போம். அதற்கு முன்பாக இன்னொரு விஷயம்.
தொழில் புரட்சி ஏற்பட்டு, பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தி, கடந்த கால இந்திய சாதி வாழ்க்கை மிகவும் இழிவானது என்று அவர்கள் பற்ற வைத்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த பிறகு நடந்த சம்பவங்களை நாம் வேறு வெளிச்சத்தில்தா ன் பார்க்க வேண்டும். அதுவரையில் மதம் பிரதானமாக இருந்த பகுதிகளிலும் அதே ஏற்றத் தாழ்வுகள்தான் இருந்து வந்திருக்கின்றன . என்றாலும் சாதிய வாழ்க்கை மட்டுமே இழிவானது என்று சொல்லி அவர்கள் செய்த திரிபுகளை அடியொற்றி நம்மவர்கள் நடந்த பாதையில் காணப்படும் சீர்கேடுகளுக்கு நம் முன்னோர்களின் அமைப்பு எந்தவகையிலும் காரணமல்ல.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல் சாதி எதிர்ப்பு இயக்கமானது சாதிய வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாம ல் முன்னெடுக்கப்பட ்டதால் பெரும் சிக்கலாகி பெரும் அழிவை ஏற்படுத்துவதாக இருந்துவருகிறது . இந்தக் காலகட்டத்தை அதற்கான அளவுகோலுடந்தான் பார்க்கவேண்டும் . அதற்கு, தொழில் புரட்சிக்கு முந்திய உலகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டால்தான், பிந்தைய பிரச்னைகளுக்கான காரணமும் அதை எப்படிக் களைய வேண்டுமென்ற தீர்வும் புரியவரும்.
மனித இனம் கண்டடைந்த சமூக அமைப்புகளான சாதி, மதம் இரண்டுமே அடிப்படையில் குழு மனப்பான்மை கொண்டவைதான். ஆனால், மதம் பல்வேறு சாதிகளின் தனி அடையாளங்களை அழித்து, பொது அடையாளத்தின் கீழ் வலுக்கட்டாயமாக அணி திரட்டி உருவான சமூக அமைப்பு. இந்திய சாதி அமைப்பு என்பது பல்வேறு சாதிகள் (பழங்குடி இனங்கள்) தங்கள் அடையாளத்தைக் கைவிடாமல், ஒரு தொகுப்பாகக் கூடி வாழும் ஒரு சமூக அமைப்பு.
சாதி அமைப்பின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள ் ஒவ்வொன்றையாக எடுத்துப் பார்ப்போம். சாதி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுக ிறது. அதை மாற்றிக் கொள்ளவோ விலகிச் செல்லவோ எந்த வழியும் கிடையாது.
மதமும் பிறப்பின் அடிப்படையில்தான ் ஒருவருக்கு வந்து சேர்கிறது. என்றாலும் விருப்பத்தின்பட ி மதத்தை மாற்றிக்கொள்ள அனுமதி உண்டு. இது ஒரு கோட்பாட்டு அளவிலான சுதந்தரம்தானே தவிர ஒரு மதத்தில் இருந்து வெளியேறுபவர்களி ன் எண்ணிக்கை நடைமுறையில் எப்போதும் மிகவும் சொற்பமாகவே இருந்து வந்திருக்கிறது.
அதோடு ஒரு மதத்துக்குள் புதிதாக ஒருவரைச் சேர்த்துக் கொள்ளும்போது, அவருடைய முன்னோர்கள் காலகாலமாகக் கைமாற்றித் தந்த அனைத்தையும் அவர் தூக்கி எறிந்தால்தான் அந்த மதம் அவரைச் சேர்த்துக் கொள்ளும். அந்தவகையில் எல்லாரையும் அணைத்துக் கொள்வது ஒரு போலியான பாவனையாக மட்டுமே மதங்களில் இருக்கிறது. என்னை நானாகவே ஏற்றுக்கொண்டால் தானே எனக்கு சம மரியாதை தருவதாக ஆகும். நான் உன்னைப் போல் மாறிய பிறகுதான் என்னை நீ சமமாக நடத்துவாய் என்றால் உனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்பவதற்காகக் காட்டும் சொற்ப சலுகைதான் நீ தரும் சகோதரத்துவமும் சமத்துவமும். அதுவும் முழுமையானது அல்ல என்ற நிலையில் ஒருவருக்கு அதன் மூலம் கிடைக்கும் நன்மையைவிட இழப்பே அதிகம்.
சாதியில் மேல் கீழ் படி நிலைகள் இறுக்கமாக வரையறுக்கப்பட்ட ிருக்கிறது. கலப்பு என்பது சாத்தியமே இல்லை.
மதத்துக்குள்ளும் படிநிலைகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட வையே. மேற்கத்திய ராஜா தன் மகளை மரம் வெட்டுபவருக்குத ் திருமணம் செய்து கொடுத்ததாகவோ மேற்கத்திய புரோகிதர் தன் மகனுக்கு விவசாயி மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகவோ அங்கும் சரித்திரம் இல்லை. உலகில் மதம் சார்ந்த வாழ்க்கை முறை இருந்த இடத்திலும் மேல் கீழ் நகர்வுகள் வெகு வெகு சொற்பமே. ஆனனப்பட்ட ‘மக்களின் இளவரசி’ டயானாவுக்கு நேர்ந்தகதி ஊருக்கே தெரிந்த ஒன்றுதானே. ராஜ வம்ச ரத்தம் ஓடாத அந்த தேவதையின் வாழ்க்கை கொடுங்காற்றில் சிக்கிய மெழுகுச் சுடராக அல்லவா அணைந்துவிட்டிருக்கிறது.
சாதி அமைப்பில் சகோதரத்துவம் இல்லை.
மதத்துக்குள் சாதியை விட சகோதரத்துவம் கொஞ்சம் போல அதிகம்தான். ஆனால், பிற மதத்தினர் மீது அவை காட்டிய வெறுப்பு, சாதிகளுக்கு இடையே இருந்த வெறுப்பைவிட நூறு மடங்கு அதிகம். அந்தவகையில் சாதி ஒரு சிலந்தி போன்றது. மதம் ஆக்டோபஸ் போன்றது. எனவே, இந்திய சாதி மீதான விமர்சனத்தை முன்வைக்கும் ஒருவரின் நேர்மையை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் இந்த உலகில் ஏற்படுத்தி இருக்கும் அழிவைக் குறித்து என்ன சொல்கிறார் என்ற அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால், நாயைப் பார்த்ததும் கல்லெடுத்து எறிபவர், ரத்தம் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கப் போட்டபடி இருக்கும் ஓநாயைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தால், அவரை நல் மேய்ப்பனாக ஒருபோதும் மதிக்கமுடியாது. ஓநாயின் கைக்கூலியாகத்தா னே அவரைச் சொல்ல முடியும்.
சாதிய அமைப்பில் வேலையானது பிறப்போடு பிணைக்கப்பட்டிர ுக்கிறது. மதம் பிரதானமாக இருந்த பகுதிகளிலும் இதே நிலைதான் தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை இருந்து வந்திருக்கிறது. தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிது புதிதாக பல்வேறு வேலைகள் முளைக்க ஆரம்பித்தன. உற்பத்தி பெருகியது. புதிய சந்தைகள் தேடிக் கண்டடையப்பட்டன. அனைவருக்கும் கல்வி தருவதற்கான தேவை எழுந்தது. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்ப ட்டதால் கல்வியைப் பலருக்கும் கற்றுத் தர வழி பிறந்தது. போக்குவரத்து எளிதானதால் உலகின் எந்த மூலைக்கும் போய்வருவது எளிதானது.
இவையெல்லாம் வேலை வாய்ப்புகளை அதிகரித்தன. எனவே, பெற்றோர் பார்த்த வேலையையே குழந்தைகளும் செய்ய வேண்டியிருந்த நிலை மெள்ள மாற ஆரம்பித்தது. இந்தத் தொழில் வளர்ச்சி இந்தியாவுக்கு சிறிது பிந்தியே வந்து சேர்ந்தது. இந்தியாவில் தொழிலும் விஞ்ஞானமும் அதற்கு முன்பே சிறந்த நிலையில்தான் இருந்தன. என்றாலும் தொழில் புரட்சியின் வெற்றி மிகப் பெரிய பாய்ச்சலாக இருந்தது. அதை வைத்து உலக அரங்கில் முன்னிலை பெறத் தொடங்கிய மேற்கத்திய உலகத்தினர் தாங்கள் சென்ற நாடுகளில் இருந்த அமைப்புகள் அனைத்தையும் தங்களுடைய குறுகலான இன, மத வெறி கொண்ட கண்களுடனே பார்த்தனர். குடியேற்ற நாடுகளில் இருந்த சமூக, அரசியல், பொருளாதார, ஆன்மிக அமைப்புகளை இழிவானது என்று முத்திரை குத்தினர். சாதி அமைப்பு அவர்களுக்கான துருப்புச்சீட்ட ாக ஆனது. ஒருவர் செய்யும் வேலையைப் பிறப்போடு பிணைத்திருக்கும ் சாதி அமைப்பை மிகப் பெரிய கொடூரமான அமைப்பாக பிரசாரம் செய்தனர்.
சாதி அமைப்பில் கல்வியானது பிராமண, சத்ரிய, வைசிய ஜாதிகளுக்கு உள்ளாக மட்டுமே இருந்தது. அதுதான் எல்லா நசிவுகளுக்கும் காரணம் என்று ஒரு வாதம் சொல்லப்படுவதுண் டு. விஷயம் என்னவென்றால், அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்ப ட்டு தொழில் புரட்சி ஏற்பட்டு பலருக்கும் கல்வி கற்றுத் தர வாய்ப்பு உருவான பிறகுதான் மத ஆதிக்கம் நிலவிய பகுதிகளிலும் கல்வி அனைவருக்கும் கிடைக்க ஆரம்பித்தது. அதுவரை கல்வியானது அங்கும் முதல் மூன்று வகுப்பினருக்கு உள்ளேயே இருந்துவந்திருக ்கிறது. அதை ஒப்பிடும் போது இந்தியாவில் அனைத்து சாதியினருக்கும் கல்வி தரப்பட்டுத்தான் வந்திருக்கிறது.
ஆக, சாதி அமைப்பின் குறைகளாகச் சொல்லப்பட்ட அனைத்துமே மத ஆதிக்கம் செலுத்திய பகுதிகளிலும் இருக்கவே செய்திருக்கிறது . அந்தவகையில் அப்போதைய வாழ்க்கை முறையை மனித பரிணாம வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத ஒரு கட்டமாகவே பார்த்திருக்க வேண்டும். ஆனால், சாதியை விட மதமே உயர்வானது என்ற ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டிருக்கிறது . இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், உலகெங்கும் ரத்த ஆறைப் பெருகெடுத்த ஓட வைத்த மதம் உயர்ந்ததென்று சொல்வதில் சாதி வழியில் வந்தவர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்.
சாதி மிகப்பெரிய சாதகமான அம்சமென்னவென்றா ல் அது அதிகாரக் குவிப்புக்கு எதிரானது.
மதம் அதிகாரத்தை பூதாகாரமாகத் தொகுத்து பெரிதாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், மதத்தினால் இந்த உலகுக்கு எந்த அளவுக்கு நன்மை விளைந்திருக்கிற தோ அதை விடத் தீமையே அதிகமாக விளைந்திருக்கிற து. ‘வரையக்கூடாத’ ஒரு கார்ட்டூன் வரையப்பட்டதென்ற ால் உலகம் முழுவதும் ஒரு ஊழிப் பேரலை கிளம்பி அழிவின் கோர நடனத்தை ஆடியே அடங்கும். சற்று உயரமான இரண்டு கட்டடங்கள் வீழ்த்தப்பட்டால ் ஒரு நாடே மயானமாக்கப்படும ். ஆனால், சாதி எழுப்பும் வன்முறைக் குமிழ்களின் எல்லை மிகவும் குறுகியது. அது ஒருபோதும் பேரழிவை உருவாக்காது. மதம் சமத்துவம் என்ற போர்வையில் உருவாக்கும் நன்மையைவிட அது ஏற்படுத்தும் அழிவே அதிகம். ‘சமத்துவத்’துக் கு எதிரான சாதி ஏற்படுத்தும் அழிவைவிட அது உருவாக்கும் நன்மைகள் அதிகம்.
RSS feed for comments to this post