மண்டையில் அடி வாங்கியவன்,
இரத்தம் சொட்டுவதை கண்டு
நியாயம் கேட்க ..

அவர்கள் சொல்கிறார்கள் :
“அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா உனக்கு ?”
இவர்கள் சொல்கிறார்கள் :
“அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா உனக்கு ?”

கண்ணுக்கெட்டிய வரலாற்றை கொண்டு -
நிகழ்வுகளின் சங்கலி கோர்வையில் ,
அநியாயம் எந்த இணைப்பிலிருந்து - என
அறியாது ....
பலவீனமாய் நகர்கிறது நகர வாழ்க்கை

காலுக்கு இழுத்தால் முகம் குளிர்கிறது
முகத்திற்கு இழுத்தால் கால் குளிர்கிறது என
பல சமயங்களில் ..
பத்தியும் பத்தாமலும் இழுபடுகிறது
நியாயங்களும் தர்மங்களும்

- கே.சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It