கோடாரியால் வெட்டுப்படுவதை
நம்பிக்கைக்குரிய வேர்களிடத்தில்
சொல்வதில்லை மரங்கள்.
***
இரவு நிலவைத்
தின்று கொண்டிருக்கிறது
குளத்தில் மீன்கள்.
***
ஆகாயத்திற்குமுண்டு
பறவையைப்
பறிகொடுத்த வலி.
***
வானம் பொய்த்ததால்
வயிற்றுப் பசியைத் தீர்த்தது
விளைச்சலுக்கென இருந்த விதை.
***
குளம் தெளிந்ததும்
இயல்பு நிலைக்குத் திரும்பியது
கல்பட்டு உடைந்த வானம்.
***
இயற்கையை நேசிக்கும்
பறவைகளின் கூடுகளில்
இல்லை கதவுகள்.
குவளையில் நிலவு
தண்ணீர் வழியே நிரப்புகிறது
வயிற்றை.
- பாரியன்பன் நாகராஜன்