கோடாரியால் வெட்டுப்படுவதை
நம்பிக்கைக்குரிய வேர்களிடத்தில்
சொல்வதில்லை மரங்கள்.

***

இரவு நிலவைத்
தின்று கொண்டிருக்கிறது
குளத்தில் மீன்கள்.

***

ஆகாயத்திற்குமுண்டு
பறவையைப்
பறிகொடுத்த வலி.

***

வானம் பொய்த்ததால்
வயிற்றுப் பசியைத் தீர்த்தது
விளைச்சலுக்கென இருந்த விதை.

***

குளம் தெளிந்ததும்
இயல்பு நிலைக்குத் திரும்பியது
கல்பட்டு உடைந்த வானம்.

***

இயற்கையை நேசிக்கும்
பறவைகளின் கூடுகளில்
இல்லை கதவுகள்.
குவளையில் நிலவு
தண்ணீர் வழியே நிரப்புகிறது
வயிற்றை.

- பாரியன்பன் நாகராஜன்

Pin It