தீராத தாகத்தின்
தவிப்புகளில் ஊற்றெடுக்கிறது
வாழ்க்கையின் வேட்கை
ஓடை புரண்டுவந்து
நினைத்த பாதங்கள் உலர்ந்து
அலைகின்றன வெப்ப நிலங்களில்
கழனிகளில் துள்ளிய
ஆரல் மீன்களைக் கொத்திய
கொக்குகள்
வெண்மேகங்களாகித் திரிகின்றன
ஈரப்பதமற்ற காற்றின் திசைகளில்
கானல் மிதக்கும் தெருக்களில்
வாய்பிளந்து கிடக்கின்றன
நகரத்து குடங்கள்
வரப்போகும் தண்ணீர் லாரிக்காய்
மரம் வெட்டியும்
நிலம் உறிஞ்சியும் முடித்த
வாழ்க்கைக் குடங்கள்
நிரம்புகின்றன கண்ணீர்த் துளிகளால்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- "குற்றவியல் நீதியிலிருந்து எங்களை விடுவி" - மூன்று குற்றவியல் சட்ட முன்வரைவுகள் குறித்து…
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை ஐ.நா. சபைக்கு எடுத்துச் செல்லப்படும்
- பழந்தமிழக வரலாறு
- வக்கத்தவளின் மகன்
- கரையொட்டிய கடவுள் சிலை
- பலத்தில் நீளும் வாழ்வு
- யாருக்கு? பாதுகாப்பு மன்னர்களுக்கா? பட்டினிகளுக்கா?
- சிந்தனையாளன் செப்டம்பர் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- கல்விசார் இயக்கங்களில் ஒரு திருப்புமுனை
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2005