சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்
காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்
பறைக்கு எதுக்குடா படிப்பு? என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்
உங்களுக்கென்னப்பா
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே! என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ
ஒன்று செய்!
உன்னையறியாத ஒரு ஊரில்
உன்னைப் பறையனென்று
சொல்லிப்பார்!
என் வலி
உனக்குப் புரியும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! உட்கட்சித் தோழர்களே பிளவுபடுங்கள்!”
- தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்
- காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)
- வினா விடை
- கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு
- சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு
- விவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி
- மக்களாட்சியில் அரசியல் முதலாளித்துவம்
- வாரிசு
- சிந்தனைகளின் தொகுப்பு
தலித் முரசு - பிப்ரவரி 2006
- விவரங்கள்
- ராசை.கண்மணிராசா
- பிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2006
வலி
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.