என்னால் முடியாது!
மலம் சுமக்கும்
மனிதன்
இருக்கும் வரை
மலரின் மென்மை பற்றி
கவிதை எழுத.

*****

பக்கத்து இருக்கை
பயணியிடம்
புன்னகை கூட
செய்யாமல்
நீள்கிறது பயணம்
தூரத்துச் சிறுமி
கையசைத்த படியே
கற்றுத் தந்தாள்
அன்பை.

- ராசை.கண்மணிராசா

Pin It