சொல்லின் அடுக்குகள்
தீப்பற்றி எரிகின்றன
புல்லின் நுனிகளும்
பேராயுதங்கள் ஆகின்றன
இன்னும் நிகழும்
அவமானங்களின் அதிகரிப்பில்
மண்ணில் மனிதர்களை சமமாய்
மதிக்க வேண்டும் என்றவரை
கல்லில் சிலையான பின்பும்
கயவர்கள் அவமதிப்பதை
எண்ணில் நெஞ்சம்
எரிமலையாய் வெடிக்குதடா!
விழிகளின் சிவப்பில்
சேகரித்த நெருப்பில்
மொழியினைத் தோய்த்து
தாளினை எரிக்கின்றோம்
உங்கள் உயிரினை நினைத்து!
புரட்சியாளர் சிலையல்ல
அதுவெங்கள் எழுச்சி அடையாளம்
திரட்சியுற்ற
சாதியழிப்புச் சமரின் படைக்கலம்!
விடுதலைப் போரிது எனில்
வெடிகிடங்கு எமதுடல்
படுகளம் வா உனக்கது
உயிரினின்று விடுபடல்
அதைவிடுத்து
சிலையிடம் என்னடா
சிறுசெயல் செய்திடல்?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை