பகுத்தறிவில்லாதவன் காட்டுமிராண்டியே!

திருக்குறளில் காணப்படும் மூடச் சொற்கள்

1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. இறைவன், 5. அய்ந்தவித்தான், 6. அறவாழியந்தணன், 7. எண்குணத்தான், 8. தாள் தொழல், 9. அடி சேர்தல், 10. நிலமிசை நீடு வாழ்தல்.

11. இருவினை, 12. பிறவாழி, 13. தாளை வணங்காத் தலை, 14. அமிழ்தம், 15. பூசனை, 16. வானோர், 17, நீத்தார், 18. துறந்தார், 19. இருமை, 20. வரன் என்னும் வைப்பு.

21. இந்திரன், 22. நிறைமொழி, 23. மறைமொழி, 24. அந்தணர், 25. சிவிகை பொறுத்தானோடூர்ந்தா னிடை அறமறிதல், 26. இயல்புடை மூவர், 27. இறந்தார், 28. தென்புலத்தார், 29. தெய்வம், 30. வானுறையும் தெய்வம்.

31. புத்தேளிர்வாழு முலகு, 32. புதல்வர், 33. ஏழு பிறப்பு, 34. சாவா மருந்து, 35. அமரர், 36. ஆரிருள், 37. அளறு, 38. ஒத்து, 39. பார்ப்பான், 40. செய்யவள்.

41. தவ்வை, 42. திரு, 43. மேலுலகம், 44. இன்னா உலகம், 45. அவ்வுலகம், 46. இலர் பலர், 47. அவிர் சொரிதல், 48. வேட்டல், 49. உயர்ந்த உலகம், 50. வையத்தின் வானம் நணிய துடைத்து.

51. ஈண்டு வாரா நெறி, 52. எழுமையும் ஏமாப் புடைத்து, 53. குடம்பை, 54. புக்கில், 55. பற்றற்றான், 56. ஊழ், 57. ஆ கூழ், 58. போ கூழ், 59. இழ ஊழ், 60. வகுத்த வகை.

61. மேற் பிறந்தார், 62. கீழ்ப் பிறந்தார், 63. அவி யுணவு, 64. குலம், 65. குடி, 66. குடும்பம், 67. எச்சம், 68. அந்தணர் நூல், 69. அறு தொழிலோர், 70. நூல் மறுப்பர்.

71. துறந்தார் படிவம், 72. அடியளந்தான், 73. மாமுகடி, 74. தாமரையினாள், 75. மந்திரி, 76. அலகை, 77. பேய், 78. உலகியற்றியான், 79. தேவர், 80. இமை யார், 81. அணங்கு, 82. தாமரைக் கண்ணானுலகு.

இவற்றில் சிலவற்றிற்கு பகுத்தறிவுப்படி பொருள் கூறுவதானாலும் அதற்கு எவ்வகையிலும் இடம் இல்லாத இன்றைய அனுபவத்திற்கும், காட்சிக்கும் ஒத்து வராத பல சொற்களுக்கு பகுத்தறிவாளர் என்ன சமாதானம் சொல்லக் கூடும்? வள்ளுவர் மாத்திரமல்ல; தொல்காப்பியர் மாத்திரமல்ல மற்றும் அக்காலத்திய எல்லா மக்களிடையேயும் மூட நம்பிக்கையும், காட்டு மிராண்டித் தன்மை கொண்ட கருத்துகளும், உணர்வு களும் இருந்தே வந்திருக்கின்றன.

ஆகவே, காட்டுமிராண்டித் தன்மை, மூட நம்பிக்கை பகுத்தறிவற்றத் தன்மை என்பவை பழங்காலத்தில் ஏதோ ஒருவர், இருவர் நீங்கலாக எல்லா மக்களிடத் திலும் இயற்கையாய் இருந்து வந்த தன்மைகளே ஆகும். இன்றைக்கு தமிழரிலேயே 100-க்கு 90 பேர் படித்த புலவர் மேதாவிகள் உட்பட காட்டுமிராண்டி களாய் காட்டுமிராண்டிக் கொள்கைக்கும், நடப்புக்கும் ஆட்பட்டவர்களாய் சமாதானம் சொல்ல முடியா விட்டால், சுத்த காலிகள் போன்ற முரட்டு சுபாவ முடையவர் களாயிருந்து குடிபோதையில் ஆழ்ந்த வர்கள் போல பேசுகிறார்கள் என்றால், நடிக்கிறார்கள் என்றால், இன்றைய நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியாத காட்டு மிராண்டிக் காலத்தில் மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை எவ்வளவு குறைந்த அறிவுள்ளவர்களும் நினைத்துப் பார்த்தால் நன்கு விளங்கும்.

இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்ன வென்றால், தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும், தமிழ் இலக்கியங்கள் சமய நூல்கள் காட்டுமிராண்டிகளால் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப்பட் டவை என்றும், நான் சொல்லுவதை மறுக்கிறவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்ள என்னை வைபவர்கள், மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களில் ஒரு நபர் கூட எதனால் இந்தப்படி 40 - 50 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் என்று நான் ஆதாரங்களோடு சொல்கிறேனோ அவற்றிற்கு ஒன்றுக்குக் கூட, ஒருவர் கூட சமாதானம் சொல்லி என்னை வையாமல் போதையில் ஆழ்ந்தவர்கள் போல வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

நமது சமயம், நமது கடவுள்கள், அவற்றின் நடப்புகள், அவற்றிற்குண்டான கதைகள் அதை ஆதாரமாக வைத்துக் கொண்டாடும் பண்டிகைகள், பிரார்த் தனைகள், பூசைகள் வேண்டுதல்கள் இவற்றிற்காக செய்யும் செலவுகள் முதலியவை எல்லாம் காட்டு மிராண்டிக் காலத்து காட்டுமிராண்டிகள் செய்கை என்று சொல்லி வருகிறேனே. என்னை வைபவர்களில் யார் இதற்கு சமாதானம் சொல்லி என்னை வைதார்கள்? வைகிறார்கள்?

எனவே, முதலாவது காட்டுமிராண்டி என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமானால், காரணம் சொல்லாமல், சமாதானம் சொல்லாமல் என்னை வைகிறவர்கள். அதனால் பலனடையலாம் என்று கருதுபவர்கள் ஆகியவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையே முதலில் காட்டுமிராண்டி என்று நான் சொல்லுகிறேன்.

காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன் பகுத்தறிவில்லாதவன் இரண்டும். இருந்தும் சிந்திக்காதவன் சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகிய வர்கள் காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் பொருள்.

மனிதனுக்கு வெட்கம், மானம் ஏற்படும்படி கண்டித்து வலியுறுத்திக் கூறத் தகுதியுள்ள மக்கள் போதியவர்கள். இல்லாததனாலேயே நம் மனித சமுதாயத்தில் 100-க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மேதாவிகள், புலவர்கள், பெரிய வர்கள், மதவாதிகள், பக்தர்கள் என்பவர்களில் இவ்வளவு காட்டுமிராண்டிகள் இருக்க நேர்ந்தது. அது மாத்திரமல்லாமல், சிலர் தங்கள் பிழைப்புக்காகவும், சுயநலத்துக்காகவும் நம்மை வைவதன் மூலம் கண்டுபிடிப்பதன் மூலம் தாங்கள் காட்டு மிராண்டிகளாகத் துணியவும் நேர்ந்தது.

மனிதன் என்றால் பகுத்தறிவுவாதிதான். அதில்லாத மற்றவன் எவனானாலும் காட்டுமிராண்டிதான். பொதுவான முன்னேற்ற வளர்ச்சி காரணமாகவே இவ்வளவு துணிவோடு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. மறுப்புக்களை புனித தன்மையோடு யார் எழுதி அனுப்பினாலும் அவற்றை வெளியிட்டு எனக்குத் தெரிந்த சமாதானம் சொல்ல ஆயத்தமாய் இருந்து கொண்டு தான் என் கருத்தை வெளியிட்டு வருகிறேன்.

(பெரியார் எழுதிய தலையங்கம் - விடுதலை 3.11.1967)

**********************************

பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்

கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.

கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே ஒழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்று என்ன வேலை கொடுக்கிறார்கள்? கடவுள் சக்தி என்று எதைச் சொல்லுகிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயவம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அதுபோலவே கடவுள் இல்லை; கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதுவும் இல்லை என்று அறிந்தும் கூட, பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக்காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள். இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.

கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போல் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைக் காரன் என்றுதான் நினைத்துக் கொள் கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக் கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை.

தனக்கோ, தன் பிள்ளைக்குட்டி, தாய் தந்தைக்கோ சிறு நோய் வந்தா லும் உடனே, டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்று கருதுவ தில்லை. அது வேறு விஷயம்; இது வேறு விஷயம் என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்!

மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோவில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஒரு ஊர் கோவிலை பெரியதாகவும், மற்ற ஊர் கோவிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும், ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்தப் பேதம் சமுத்திரத்தில் கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.

150 கோடி மக்களால் மதிக்கப்படும் யேசு கிறிஸ்து, கோவில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்குமிடம் என்று சொன்னார்! அது மாத்திரமல்லாமல், சுமார் 40 கோடி மக்களால மகாத்மா என்று கருதப்படும் காந்தி கோவில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரர்களில் யார் இதை நம்புகிறார்கள்? அனுசரிக்கிறார்கள்?

கக்கூசு எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டு மிராண்டித்தனமாய் இருக்கிறது?

50 கோடி மக்கள் வாழும் நமது இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோவில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத் தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்!

எவ்வளவு சொத்து பண விரயம் - நேர விரயம் - முயற்சி விரயம். படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட் டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு - ஆபாசம் இருந்து வருகின்றன!

இதற்குப் பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரேயடியாக கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள் (நாத்திகர்கள்) என்று பிள்ளை களுக்குப் பிரச்சாரங்களில், காலட்சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும், எவ்வளவு பகுத்தறிவு வாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக் கூடாது; சேர்க்கக் கூடாது.

இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!

----------------------

பெரியார் எழுதிய தலையங்கம், "விடுதலை" 20.10.1967
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It