forest 360இதமான சிலுசிலு காற்று வீசத் தொடங்கி இருக்கும், மரத்தின் இலைகளின் நிறம் மாறிக் காட்சியளிக்கும், சிறிது காலத்தில் நிறம் மாறிய இலைகள் கீழே விழத் தொடங்கும். இவ்வறிகுறிகள் எல்லாம் குளிர்காலத்தை நோக்கிய பயணம். பூமி சூரியனை விட்டு விலகி சுற்றும் என்பதைக் காட்டும்.

இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. ஆம், "சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யூ" என்று ஜீன்ஸ் படத்தில் வரும் கவிப்பேரரசுவின் வரிகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால், உங்களுக்கு ஒரு சல்யூட்.

Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது.

நமது வழக்காடு மொழியில் அவைகள் எல்லாம் கிறிஸ்துமஸ் மரங்கள். பொதுவாக இந்த மரங்கள் எல்லாம் கூம்பு வடிவில் விதைகளைக் கொடுக்கும். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.

சூரிய ஒளி இல்லாத காலத்திலும், மிகக் கடுமையான குளிர் பிரதேசங்களில் இவ்வகையான மரங்கள் தங்களின் இலைகளை அப்படியே பாதுகாத்துக் கொள்கிறது. அதன் வடிவமைப்பு கூட்டாக ஊசியை போல் அமைந்திருப்பதே அதற்குக் காரணம்.

குளிர் காலத்தில் இதன் metabolism குறைவாக மற்ற மரங்களைப் போலவே இதற்கும் இருக்கிறது. வெண்பனியின் மேல் விழுந்து வரும் அதிகப்படியான சூரியக் கதிர்வீச்சால், இது தனது சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. அதாவது நேரடியான சூரிய ஒளி தேவையில்லை, வெளிச்சம் இருந்தாலே அதற்குப் போதுமானது. (https://academic.oup.com/bioscience/article/54/1/41/234579)

இலைகளின் நிறம் மாறுதல் மற்றும் இலைகள் உதிர்தலை 'deciduous trees' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். உதாரணமாக நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை குறிப்பிடலாம். வட,தென் துருவ நாடுகளில் அதிகம் காணப்படும் Oak trees, Elm trees, Maple trees, போன்று இவைகளைக் குறிப்பிடலாம்.

இலைகளின் நிற மாற்றம்:

பூமி சூரியனை விட்டு விலகி செல்வதால் நமக்கு பகல் பொழுது குறைவாகவும் வெப்பநிலையும் குறையும், இரவு பொழுது நீண்டும் காணப்படும். எதிர்வரும் குளிர் காலத்தை நோக்கி சில விலங்குகள் தனக்கான உணவை ஆயத்தப்படுத்திக் கொள்ளும். குளிர்காலம் முடியும் வரை விலங்குகள் வெளியே வராது இதனை ஆங்கிலத்தில் hibernate என்கிறோம். இது போன்ற நிகழ்வு தான் மரங்களிலும் நிகழ்கிறது. மரங்களும் குளிர் காலத்தை நோக்கி ஆயத்தம் ஆகின்றன.

மரம் உயிர் வாழ சூரிய ஒளி தண்ணீர் கார்பன் டை ஆக்சைடு இவை அனைத்தும் தேவை என நாம் சிறுவயதில் பாடப் புத்தகத்தில் படித்து இருக்கிறோம். இதை 'Photosynthesis' என்று அழைப்பார்கள். இலையுதிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக கிடைக்கப் பெறுகிறது. அதாவது சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் சக்தி குறைவாக கிடைப்பதால், photosynthesis நிகழ்வை குறைத்துக் கொள்கின்றன.

இதனாலேயே இலைகளின் நிறங்கள் மாறத் தொடங்குகின்றன. மரங்கள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் சூரிய ஒளியை தேடும். அது அவற்றின் இலைகளின் வழியே நடைபெறும். இலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வேலை செய்யும் இதை 'Pigments inside the leaves' நிற மானிகள் எனலாம். அதாவது இலைகளின் நிற மானிகள் சூரிய ஒளியைப் பெற முயற்சிக்கும்.

இலைகளுக்குள் பலவகையான நிற மானிகள் அடங்கி இருக்கும் சூரிய வெளி கிடைப்பதைப் பொறுத்து இலைகளின் நிறம் மாறத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் பசியுடன் அவ்வகை மரங்கள் வாழும் என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

சரி முதலில் பச்சை நிறம் எவ்வாறு வருகிறது என்பதை பார்ப்போம். மரங்கள் அதிகப்படியான சூரிய ஒளியைப் பெறும் போது இலைகளில் உள்ள Chlorophyll பச்சையம் (பச்சை நிறம்) அதிகமாக வெளிப்படும். இது கோடைகாலம் தொடங்கி இலையுதிர் காலம் வரை அதிக அளவில் சூரிய ஒளி கிடைப்பதால் இலைகள் பச்சையாகவே காணப்படுகிறது.

இந்த பச்சை Chlorophyll தான் இலைகளின் Pigmentsல் அதிகம் காணப்படுகிறது முறையே இது தான் photosynthesis சுழற்சிக்கு உதவியாக இருக்கிறது. பருவநிலை மாற்றம் நிகழும் போது 'Environmental cues' இந்த நிற மாற்றம் நிகழ்கிறது. Cues என்றால் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல். குறைவான சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த வெப்பநிலை இதை மாற்றுகிறது.

இலைகள் நிற மாற்றத்தின் முதல் வடிவம் Pigment Carotenoids இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம். பச்சை தன்மையுடைய Chlorophyll இழக்கும் போது, மஞ்சள் நிறமுடைய Carotenoids வரத் தொடங்கும். சிறிது காலம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். பின்னர் இலைகள் தனது அடுத்த கட்ட நிலையான anthocyanins நிலைக்கு மாறிவிடும். இது தான் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் இலைகள் தோற்றமளிக்கக் காரணம்.

இந்த Pigment -ன் நிறம் மாற்ற நிகழ்வுகள் முடிந்த பின்னர் இலைகள் தாமாகவே உதிர்ந்து விடும். தமக்குள் சேமித்து வைத்திருந்த சக்திகள் எல்லாம் முடிவுக்கு வந்தது run out of the pigments. ஆனால், மரம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.

ஏன் இவ்வாறு இலைகளின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன என்பதை நாம் முன்னரே பார்த்ததுபோல, குளிர்காலத்தில் தனக்குத் தேவையான ஆற்றலை சேமித்து கொள்ளவே இவ்வாறு தனக்குள் நடைபெறுகிறது.

இலையுதிர் காலத்தை முன் வைத்தே பல நாடுகளில் சுற்றுலா நிகழ்சிகள் மிகவும் சிறப்பாக செயல்படும். 'Fall colours வந்து இருக்கிறது பார்த்தீர்களா' என்று நண்பர் செய்தி அனுப்பி இருந்தார். வானொலியில் இலையுதிர் காலத்தில் மரங்களின் நிறம் ஏன் மாறி காட்சியளிக்கிறது என்ற தொகுப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.

சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு இருபுறங்களிலும் மரங்களின் நிறங்கள் மாறி காட்சி அளித்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆங்காங்கே பழுத்த இலைகள் கீழே விழுந்து கிடந்தன.

வாருங்கள் நண்பர்களே நாமும் சமூக வலைத்தளங்களை சற்று ஒதுக்கிவிட்டு, இலையுதிர் காலத்தில் மரங்களின் பழுத்த இலைத் தழைகளை கண் குளிர பார்த்து ரசிப்போம.

(நன்றி: https://www.npr.org/2020/10/21/926278247/micro-wave-why-do-leaves-change-color-during-fall)

- பாண்டி

Pin It