தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் மகா மகால் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கிப் பேசினார். தமிழறிஞர் அண்ணா தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் அண்ணல் தங்கோ, தமிழ்த் தேசியப் பேரியக்கச் சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் பா.க. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவலர்கள் முழுநிலவன், பிரகாசு பாரதி ஆகியோர், “தூக்கைத் தூக்கிலிடுவோம்” என்ற தலைப்பில் பாவீச்சு நிகழ்த்தினர்.
முன்னதாக நிகழ்வின் தொடக்கத்தில், மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. உணர்ச்சி பொங்க அதனைப் பார்வையாளர்கள் கண்ணுற்றனர்.
பின்னர் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொண்டார்.
இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா, ஓவியர் கு. புகழேந்தி, தமிழர் ஆன்மிகச் செயற்பாட்டாளர் திருவாட்டி. கலையரசி, ‘லாக்கப்’ நாவலாசிரியர் திரு. சந்திரக்குமார் ஆகியோர் சிறப்புப்படி பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.
நூலைத் திறனாய்வு செய்து, சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர் திரு. அஜய் கோஷ் பேசினார். “தமிழினத்தைத் தவிர மற்ற எல்லா இனங்களிலும் இன ஒற்றுமை இருக்கிறது. ஆனால், தமிழினத்தில்தான் அது இல்லை” என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆதங்கத்தோடு பேசினார். ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தடையாக உள்ள சிக்கல்கள் குறித்து, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கருத்துரை வழங்கினார்.
நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்தினார். “தமிழ்நாடு அரசு, உடனடியாக பேரறிவாளனுக்கும் மற்றவர்களுக்கும் முதற்கட்டமாக விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும். அதன்பின், மாநில அமைச்சரவையைக் கூட்டி, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்கீழ் ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தீர்மானம் இயற்றி, அதை தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர், நெறிப்படுத்தினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி கூறினார்.
நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் வெற்றித்தமிழன், தோழர் குடந்தை தீந்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இருக்கைகள் போதாமல் பலரும் நின்றுகொண்டு கேட்ட, அரங்கம் நிறைந்த கூட்டமாக அமையும் அளவுக்கு, திரளான தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த உண்மை நிலையை “மணிகண்டன்” போன்றவர்கள் தெரிந்து கொண்டு வாதாட வேண்டும்.
இன்று ராஜீவ் காந்தியை கொன்று விட்டு இவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்தால் நாளை வேறு ஒரு தீவிரவாத இயக்கம் தேசிய தலைவரையோ அல்லது மாநில தலைவரையோ கொன்று விட்டு தங்கள் ஆதரவு பத்திரிக்கை இயக்கங்கள் மூலம் பொய் பிரச்சாரங்களை செய்து விடுதலை பெறுவார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கே கேள்வி குறியாகும்..
ஏன் விசாரிக்கவில்லை . ....?
தன் தலைவன் உயிரை காப்பாற்றுவதை விட கட்சி தலைவர்களுக்கு என்ன வேலை...?
காங்கிரஸ் தலைவர்களுக்கு இதிலுள்ள தொடர்பை விசாரிக்கவே இல்லை. ஒரு காங்கிரஸ் தலைவர்களா கூட சாகவில்லையே. ஓடி ஔிந்து கொண்ட உத்தமர்கள்.
ஒரு வெடிகுண்டு சோதனை கருவி கூட இல்லையா காவல்துறையிடம்.
ராசீவ் காந்தி கொல்லப்படுவது தெரிந்து தான் காங்கிரஸ் தலைவர்கள் ஓடி ஔிந்தார்கள். தனக்காக டில்லியிலிருந்த ு பிரச்சாரம் செய்ய வந்த தலைவர் பக்கத்தில் நில்லாமல் மரகதம் சந்திரசேகர் எங்கு போய் ஓடி ஔிந்தார்....?
" கொலைக்கு யாரையாவது தண்டிக்க வேண்டும். இல்லையென்றால் இந்தியாவிற்கு அவமானம் "என்ற வகையில் அப்பாவிகளை அடைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களின் தண்டனை காலம் முடிந்து விட்டது. விடுதலை செய் என்கிறோம். தொடர்ந்து சொல்லுவோம். மாரத மாதா பஜனை கோஷ்டிகளுக்கு மணியடிக்கும் மணிகண்டனை பற்றி எங்களுக்கு கவலையில்லை....
சிறை தண்டனை முடிந்து விட்டது. விடுதலை செய் என்கிறோம். தேச துரோகம் என்று பட்டம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி. எங்களின் தேச துரோகம் தொடரும்.
ஏழு தமிழரை விடுதலைசெய்ய தொடர்ந்து குரல் கொடுப்போம். பாரத மாதா பஜனை கோஷ்டிகளுக்கு பாடமும் கொடுப்போம்..
இவர் தண்டனை அனுபவிச்சு வராறா....? நல்லா இருக்குயா வாதம்.
ஏழு தமிழர் விடுதலையை சாத்தியமாக்குவோம்.....!
சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வைப்போம்.
RSS feed for comments to this post