பேய்களைப் பற்றிய
அச்சங்களை
ஒதுக்கி விட்டு
மனிதர்களைப் பற்றிய
அச்சங்களை
ஏற்றி வைக்கிறது காலம்.
குழந்தைகள் தொடங்கி
பெரியவர்கள் வரை
எச்சரிக்கையோடு பார்க்கும் விழிகள்,
புன்னகையைப் பார்க்கும் போது
சற்று தளர்ந்து போகிறது...
இப்போது தொடங்குகிறது
தனித்து விடப்பட்ட
வாழ்வினில் பேரிருள்!

- மு.முபாரக்

Pin It