சுற்றுச் சூழல் கெட்டுப் போவதும்
மற்றும் புவியின் வெப்பம் உயர்வதும்
தடுத்தே உயிரினம் காத்திடும் வழியை
எடுத்துச் சொல்லத் தெரியா நிலையில்
அறிவியல் அறிஞர் மயங்கிக் கிடந்தார்
குறியாய் இலாபம் கொள்ளா முறையால்
கேடுகள் தம்மைத் தடுப்பது மன்றி
ஈடு செய்துத் திருப்பவும் முடியும்
என்றே ஒருவர் சொல்லிச் சென்றார்
நன்று யாரெனப் பிறரிடம் வினவி
மார்க்சியம் கற்றவர் அவரென அறிந்தார்

(சுற்றுச் சூழல் கெட்டுப் போவதாலும், புவி வெப்பம் உயர்வதாலும் உயிரினங்கள் அழிந்து போவதைத் தடுக்கும் வழிகளை எடுத்துச் சொல்ல முடியாமல் அறிவியல் அறிஞர்கள் திணறிக் கொண்டு இருக்கும் பொழுது, இலாபத்தைக் குறியாகக் கொள்ளாத (சோஷலிச உற்பத்தி) முறையினால் (இவ்வுலகைச் சூழ்ந்துள்ள) கேடுகளைத் தடுப்பதற்கும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள கேடுகளைக் குறைத்து (இவ்வுலகை) அழிவுப் பாதையில் இருந்து திருப்பி விடுவதற்கும் முடியும் என்று ஒருவர் கூறிச் சென்றார். அவர் யாரென்று பிறரிடம் விசாரித்த போது அவர் மார்க்சியம் கற்றவர் என்று (அறிவியல் அறிஞர்கள்) தெரிந்து கொண்டார்கள்.)

- இராமியா

Pin It