பாரதிய ஜனதாவுடனான வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான்.
இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது?
‘எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி’ என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!
ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறுபுறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத - இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள்1. பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?
பார்க்கப் போனால், இந்த நான்கு தரப்பினரில் பா.ஜ.க ஒரு வகையில் மேலெனவே சொல்லலாம். காரணம், மற்ற மூன்று தரப்பினருக்கும் இருப்பது போலத் தமிழர்களுக்கோ தமிழீழத்துக்கோ எதிரான தனிப்பட்ட விரோதம் எதுவும் பா.ஜ.க-வுக்கு இல்லை.
காங்கிரசின் தமிழ்ப் பகை நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடைசி நேரத்தில், தமிழர்களைக் காப்பாற்ற அமெரிக்கா களமிறங்க இருந்த தறுவாயில், “இஃது என் தனிப்பட்ட விவகாரம். யாரும் தலையிடக்கூடாது!” என்று சோனியா சொல்லித் தடுத்து நிறுத்தியதை நாம் என்றைக்கும் மறந்துவிட முடியாது!
போராட்டத்துக்குப் பெயர் ‘போன’ பொதுவுடைமைத் தோழர்களின் தமிழீழம் குறித்த நிலைப்பாட்டையும் மேலேயே பார்த்தோம்.
அடுத்தவர் ஜெயலலிதா. அவரை நம்ப முடியுமா? படாத பாடெல்லாம் பட்டு, தமிழ்நாடு முழுக்கச் சுற்றியலைந்து, காலங் காலமாகத் தமிழினப் பகையாளியாகக் கருதப்பட்ட தனக்குத் தமிழினத் துரோகிக்கு எதிரான வாக்குகள் அனைத்தையும் மொத்தமாக மடைமாற்றி விட்ட வை.கோ அவர்களைக் கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்த ஜெயலலிதா, நாளை பிரதமராக்கி விட்டால் மட்டும் வை.கோ சொல்வதைக் கேட்டுத் தமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தந்துவிடுவாரா? முதலமைச்சராக இருக்கும்பொழுதே தமிழர்களை மதிக்காதவர், பிரதமராகிவிட்டால் நம்மை மதிப்பாரா? தமிழர்கள் அனைவரும் மொத்தமாக வாக்களித்தால் மட்டுமே பிரதமர் பதவியை நினைத்தாவது பார்க்க முடியும் எனும் நிலைமையில் இருக்கும்பொழுதே, அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்திலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கை வைக்கிறாரே, இவரா நாளை பிரதமரானால் தமிழர் தரப்பில் நிற்பார்? சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!
பா.ஜ.க-வினர் மட்டும், ஆட்சி அமைத்த அடுத்த நிமிடம் தமிழீழத்தை நமக்குப் பெற்றுத் தந்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் எனச் சொல்லவில்லை. ஆனால், மற்ற மூவரைப் போல் தமிழர்களுக்கோ, தமிழீழத்துக்கோ எதிரான தனிப்பட்ட பகை எதுவும் அவர்களுக்கு இல்லை எனும் நிலையில் அவர்களை விட்டால் நமக்கு வேறு தேர்வு இல்லை இங்கே என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்!
மேலும், அடுத்து பா.ஜ.க ஆட்சியமைக்கப் போகிறதோ இல்லையோ, ஆனால், அப்படி ஓர் எண்ணம் இப்பொழுது நாடெங்குமுள்ள மக்களிடையில் விதைக்கப்பட்டுவிட்டது. “இந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள்தாம் அடுத்த நாடாளுமன்றத்தை முடிவு செய்யப் போகின்றன” என்று கட்சிகளும் ஊடகங்களும் சொல்லிச் சொல்லியே மக்கள் உள்ளத்தில் அந்தக் கருத்தை ஆழப் பதித்து விட்டன. கண்டிப்பாக, இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்காது. நம் மக்களிடையே ஒரு (!) கெட்ட பழக்கம். தகுதியானவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட வெல்பவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அது. தான் வாக்களிக்கும் கட்சி வெற்றி பெறாவிட்டால், தன் வாக்கு வீணாகிவிட்டதாகவும், அது தனக்கு இழுக்கு எனவும் நினைப்பவர்கள் நம் மக்கள். எனவே, ‘அடுத்தது பா.ஜ.க-தான்’ என்கிற தோற்றத்தை இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதால், பெருவாரியான மக்கள் அந்தக் கட்சிக்குத்தான் வாக்குகளை வாரி வழங்குவார்கள். ஆக, ஏதோ ஒரு வகையில் அடுத்தது பா.ஜ.க-தான் என்று ஓரளவு உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களுடன் நாம் கூட்டணி வைத்தாக வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். காரணம், நடுவண் அமைச்சரவையில் தமிழுணர்வுள்ள கட்சிகள் இல்லாததும், ஏற்கெனவே அதில் பங்கு வகிக்கும் கட்சிகள் தமிழுணர்வுள்ள கட்சிகளாக இல்லாததும்தான் ஈழத் தமிழினப்படுகொலைக்கும் காரணம்; கடந்த நான்கரை ஆண்டுக்காலத் தமிழர் போராட்டம் எதற்குமே பதில் கிடைக்காததற்கும் காரணம். ஆகவே, இந்த முறையாவது, அடுத்து அமையும் நாடாளுமன்றம் தமிழர் சொல்வதைக் கேட்பதாக அமைய வேண்டியது கட்டாயம்.
அப்படி அமையாவிட்டால்... ம.தி.மு.க போன்ற உண்மையான தமிழர் கட்சி எதனோடும் கூட்டணி வைக்காமலே ஒருவேளை அடுத்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துவிட்டால்... அடுத்து நடக்கப்போவது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவின் அடுத்த ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு இலங்கை தன் தமிழர் அழிப்பைச் சாவகாசமாகத் தொடரும். இப்பொழுதே அதற்கான முன்னோட்டமாக, பா.ஜ.க தலைமைகளை நோக்கி இலங்கை தன் காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டதாக முகநூலில் தகவல்கள் பரபரக்கின்றன! இதைத்தான் விரும்புகிறோமா நாம்?
சரி, வை.கோ, சீமான், பழ.நெடுமாறன் என உண்மைத் தமிழுணர்வுக் கட்சிகள் மட்டும் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கலாமே என்றால், சந்திக்கலாம்; ஆனால், வெல்வோமா? அப்படி ஒரு சோதனை செய்து பார்க்கக்கூடிய நிலைமையிலா நாம் இப்பொழுது இருக்கிறோம்?
அங்கே இலங்கையில் நம் மக்கள் ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நரக வேதனை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே நம்பிக்கையான நமது உடனடிக் கடமை, சிங்கள இராணுவக் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் அவர்களை விடுவித்தல், அவர்களுக்குப் பாதுகாப்பும், உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதிகளுடனுமான வாழ்க்கை ஒன்றை அமைத்துத் தருதல். இவற்றை எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகச் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவுதான் நாம் அவர்களைக் காப்பாற்ற முடியும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அங்கு நம் மக்கள் சிலர் பலராகச் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை மென்மேலும் சீரழிவின் உச்சத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திராவிடக் கோட்பாடு, தமிழர் கொள்கை, மதச்சார்பின்மை போன்றவற்றுக்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இவற்றையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் கடைப்பிடித்து, தமிழருக்கு ஆதரவான ஒரு நல்லாட்சியை நாடாளுமன்றத்தில் அமைத்து, அதன் பின் தமிழீழம் பெற்றுத் தருவதற்குள் அங்கு தமிழர் ஒருவரும் மிச்சமிருக்க மாட்டார் அதைப் பெற்றுக்கொள்ள.
மோடியும் இனப்படுகொலையாளிதான். அந்தாளுடன் கூட்டணி வைப்பது தமிழர் கொள்கைக்கு மட்டுமின்றி, மனிதநேயக் கொள்கைக்கே எதிரானதுதான். இவற்றையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம் மக்களைக் காப்பாற்றுவது யார்? ஆயிற்று, தமிழினப் படுகொலை நடந்து முடிந்து நான்கரை ஆண்டுகளுக்கும் மேல். எந்த நாடு வந்து நம் மக்களைக் காப்பாற்றியது? ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை இணைந்து நம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைத்து, இன்று வரை அவர்கள் உயிர் வாழ அரும்பேருதவி ஆற்றி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால், நம் மக்களை மீட்கவோ, நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கவோ, தமிழீழம் பிறக்கவோ இந்த நான்கரை ஆண்டுக்காலத்தில் எந்தப் பெரிய முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை.
ஐ.நா-வோ அதில் உறுப்பினராயிருக்கும் நாடுகளுள் ஒன்றே ஒன்றோ மனம் வைத்திருந்தால் கூட ஒரே இரவில் தமிழீழத்தை மலரச் செய்திருக்க முடியும். ஆனால், இந்த இவ்...வளவு பெரிய கால இடைவெளியில் அவர்கள் யாரும் அதற்கு முன்வரவில்லை. இனிமேலும் அப்படி முன்வரக்கூடிய அறிகுறியும் ஏதும் தெரியவில்லை. அப்படியிருக்க, நம் மக்களைக் காப்பாற்ற நாம் எப்படியாவது நமக்குச் சாதகமான ஓர் ஆட்சியை இங்கு அமைத்தாக வேண்டியது இன்றியமையாதது இல்லையா? அட, சாதகமாக இல்லாவிட்டாலும், பாதகமாகவாவது இல்லாமல் இருக்க வேண்டாவா? கொள்கையில் உறுதி என்பது உயிரினும் மேலானதுதான். ஆனால், கோடிக்காணக்கான மக்களின் உயிர்க் காப்பு, இன, மான மீட்பு என வரும்பொழுது நடைமுறைச் சாத்தியங்களுக்கு நாம் அனுசரித்துப் போக வேண்டியது இன்றியமையாதது இல்லையா?
இவையெல்லாம் வெறும் சமாளிப்புகள் என்கிறீர்களா? சூழ்நிலைக்கேற்றாற்போல் மாற்றி மாற்றிப் பேசும் அரசியல் கயவாளித்தனம் என்கிறீர்களா? சொல்லுங்கள்; ஆனால், அப்படிச் சொல்ல வாய் திறக்குமுன், உலகின் மிகக் கொடுமையான ஒரு சூழலில் வாழும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நினைத்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்!
வயிற்றிலிருக்கும் தமிழ்க் குழந்தையைக் கூட விட்டு வைக்காத கொடூரர்களுக்கிடையில், எந்நேரம் என்ன நடக்குமோ என ஒவ்வொரு நிமிடமும் உயிரையும் மானத்தையும் கையில் பிடித்துக்கொண்டு வாழும் நம் தாய்மார்களை நினைத்துப் பார்த்து, வறுமையும் அதிகாரப் பேய்களின் கொடுமையும் கண்ணெதிரே தன் குடும்பத்தைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருக்கும் நம் அண்ணன் தம்பிகளை நினைத்துப் பார்த்து, செத்தால் நரகத்துக்குப் போவது என்பதற்கு மாறாகப் பிறவியே நரகத்தில் வாய்த்திருப்பதை உணராத நம் பிஞ்சுக் குழந்தைகளின் களங்கமில்லாப் புன்னகையை நினைத்துப் பார்த்து, அதன் பிறகு சொல்லுங்கள், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது சரியா இல்லையா என்று!
அனைத்து விதமான வசதிகளும், பாதுகாப்பும் நிரம்பிய உயர்மட்டச் சமூகமான சென்னை மாநகரத்தில் வாழும் நமக்கே, நம் பெண் பிள்ளை மாலையில் வீடு திரும்பச் சற்றுத் தாமதமாகிவிட்டால் கொஞ்சம் பதறுகிறதே, தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்துவதைப் பொழுதுபோக்காகவே செய்யக்கூடிய அந்தச் சிங்களச் சமூக அமைப்பில் நம் அக்கா தங்கைகளை ஒரு நாள், இரண்டு நாள் கூட அல்லாமல், நான்கரை ஆண்டுகளாக விட்டு வைத்திருக்கிறோமே, அந்தப் பெண் பிறப்புகளில் ஒருவரையாவது நம் உடன்பிறப்பாக ஒரு நிமிடமாவது நினைத்திருந்தால் நாம் இப்படிக் கூட்டணி குறித்து வக்கணையாக நியாயம் பேசிக் கொண்டிருப்போமா?
அப்படியானால், இங்குள்ள சிறுபான்மையினர் நலன் நமக்கு முக்கியமில்லையா எனக் கேட்டால் முக்கியம்தான்! நம்முடனேயே சாப்பிட்டு, இந்தக் காற்றையே மூச்சிழுத்து, நம்மிடையிலேயே வாழ்கிறவர்களை விட்டுவிட்டு எங்கோ இருப்பவர்களுக்காகக் கடைப்பிடித்தால் அது மனிதநேயம் ஆகாதுதான். ஆனால், இரண்டு தரப்பினருக்குப் பாதிப்பு என வரும்பொழுது அவர்களில் கூடுதலான பாதிப்பு யாருக்கு எனப் பார்த்து அவர்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுவதுதானே நியாயமாக இருக்க முடியும்?
அப்படிப் பார்த்தால், நாளை அமையக்கூடிய பா.ஜ.க ஆட்சியால் பாதிக்கப்பட இருக்கிற நம் சிறுபான்மையின உடன்பிறப்புக்களை விட ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களுக்கு உதவுவதுதானே நம் முதல் கடமை? நன்றாக இருப்பவர்களின் பாதுகாப்பை விடப் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மீட்புதானே முதன்மையானது?
இதை நம் சிறுபான்மையின மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் எனத்தான் நம்புகிறேன். ஏனெனில், பசித்திருப்பவனுக்கு உணவளிப்பதை விடத் தவித்திருப்பவனுக்குத் தண்ணீர் அளிப்பது எவ்வளவு முக்கியமானது என்பது அவர்கள் அறியாததில்லை!
- இ.பு.ஞானப்பிரகாசன்
# இது உன்மை தானா...தமிழ் மானிலத்தையே இன்னும் இவர்கள் ஏற்றக்கொள்ளவில் லையே...அதை தானே மோடி தமிழகத்தில் பேசினார் மொழி வாரி மாநிலங்கள் இருக்கக்கூடாது என்று..என்றாவது ஒரு நாள் அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரித்து பேசி இருக்கிறார்களா? ?? ஆட்சியில் இல்லாத பொழுதும் கூட தமிழ் ஈழத்திற்கு எதிராக தானே பேசி இருக்கிறார்கள். அல்லது என்றாவது ஒரு நாள் தமிழ் ஈழத்திற்கு எதிராக பேசாமல் இருந்திருக்கிறா ர்களா??? எந்த பொருளாதார கொள்கையிலாவது அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் வேறுபட்டு இருக்கிறார்களா? ?? ஊழல் மதவாதம் என்று எதிலாவது காங்கிரசுக்கு சளைத்தவர்களாக இருந்திருக்கிறா ர்களா??? தமிழர்களின் நெருங்கிய நண்பனான சுப்பிரமணிய சாமி அங்கு தான் இருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம்.
இவையெல்லாம் வெறும் சமாளிப்புகள் என்கிறீர்களா? சூழ்நிலைக்கேற்ற ாற்போல் மாற்றி மாற்றிப் பேசும் அரசியல் கயவாளித்தனம் என்கிறீர்களா? சொல்லுங்கள்; ஆனால், அப்படிச் சொல்ல வாய் திறக்குமுன், உலகின் மிகக் கொடுமையான ஒரு சூழலில் வாழும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நினைத்துப் பார்த்துவிட்டுப ் பேசுங்கள்!//
# இந்கு பாஜகவால் முன்னிறுத்தப்பட ும் மோடி இதனை செய்யவில்லையா.. .இவர் எப்படி அதை தடுப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ...மோடிக்கும் ராஜபக்சேவுக்கும ் என்ன வித்தியாசத்தை கண்டீர்கள்...
ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் இதே கட்டுரையை காங்கிரசுக்கு எடிட் செய்து வெளியிடுவீர்கள் ...கொள்கைக எதுவுமே இல்லாமல் மாற்றம் என்று பேசுபவர்களால் அதை மட்டும் தான் செய்ய முடியும்...தமிழ கத்தில் உள்ள ஜெயலலிதா கருணாநிதி போல அடுத்தது இவர் அடுத்தது அவர் என்று பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
//இது உன்மை தானா...தமிழ் மானிலத்தையே இன்னும் இவர்கள் ஏற்றக்கொள்ளவில் லையே...அதை தானே மோடி தமிழகத்தில் பேசினார் மொழி வாரி மாநிலங்கள் இருக்கக்கூடாது என்று..என்றாவது ஒரு நாள் அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரித்து பேசி இருக்கிறார்களா? ?? ஆட்சியில் இல்லாத பொழுதும் கூட தமிழ் ஈழத்திற்கு எதிராக தானே பேசி இருக்கிறார்கள். அல்லது என்றாவது ஒரு நாள் தமிழ் ஈழத்திற்கு எதிராக பேசாமல் இருந்திருக்கிறா ர்களா???// - தமிழீழத்துக்கு எதிராய் பா.ஜ.க தலைவர்கள் பேசியதாக இது வரை எனக்குத் தெரியாது. ஆணையாக, இது எனக்குப் புதுத் தகவல். ஆனால், விடுதலைப்புலிகள ுக்கு எதிராக, இலங்கைக்கு ஆதராக ஒரு முறை வாஜ்பாய் அரசு நடக்க முயன்றதை அறிவேன். அவையெல்லாம், ஒரு நாட்டின் அரசாங்கம் இன்னொரு நாட்டின் அராசங்கத்தைத்தா ன் ஆதரிக்குமே தவிர, அந்நாட்டுப் போராளி இயக்கத்தை ஆதரிக்காது என்கிற வகையிலான நடவடிக்கைகள் என்றுதான் நான் புரிந்து வைத்திருந்தேன். ஆனால், நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின், தமிழீழத்தை அடிப்படையிலேயே பா.ஜ.க எதிர்க்கிறது என்பது உண்மையானால் கண்டிப்பாக அவர்களுடன் கூட்டணி வைப்பது தவறுதான்.
மற்றபடி, பா.ஜ.க-வுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான பொதுத் தன்மைகள், ராஜபக்சவுக்கும் மோடிக்கும் இடையிலான பொதுத் தன்மைகள் ஆகியவற்றுக்கான பதில்கள் கட்டுரையிலேயே இருக்கின்றன. ஐயமிருப்பின் இன்னொரு முறை படித்துப் பாருங்கள்!
//அட... சுடர் விட்டு எரியும் அறிவுக் கொழுந்தே... ரசியா தனி ஈழத்தை ஆதரிச்சா என்ன, ஆதரிக்கலேனா கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன... ரசியாவுல முதலாளித்துவம் இருக்கு... அதுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவத்த ஆதரிக்குதா?// - இதை நீங்கள் கம்யூனிஸ்ட்டுகள ிடம்தான் கேட்க வேண்டும். இரசியா தனி ஈழத்தை எதிர்ப்பதால் தாங்களும் எதிர்க்கிறோம் என அவர்கள்தான் சொல்கிறார்கள். நானா சொல்கிறேன்? என்னிடம் கேட்கிறீர்கள்? இப்படி ஒரு காரணத்தைச் சொன்னவன் அறிவுக் கொழுந்தா, அதைச் சுட்டிக் காட்டியவன் அறிவுக் கொழுந்தா? எது கொழுந்து எனப் பார்த்து, முடிந்தால் நடிகர் செந்தில் சொல்வது போல் கிள்ளி வாயில் போட்டுக் கொள்ளுங்கள்! ;-)
முள்ளிவாய்க்கால ை விட மிக பெரிய இனபடுகொலை அவலம் இனியும் அரங்கேற வாய்ப்புண்டா? ஒருவேளை காங்கிரஸ் வந்தால் வாய்ப்புண்டு..
காங்கிரசின் கோட்பாடு என்பது "சோனியா குடும்பத்தின்" விருப்பம் என்பதை தாண்டி வேறென்ன?
ஆனால் பாஜக_வில் பல முகங்களை ஒரு பிரசினைக்காக அணுக முடியும்.
தமிழீழ விவகாரத்தில் ஈழம்-இந்தியா என்கிற நிலைப்பட்டிற்க் கும் மேல் ஈழம்- சோனியா குடும்பம் என்கிற பூதாகரமான வடிவம் தான் முன் நின்றது.., கடைசியில் சோனியா வஞ்சம் தீர்த்தார் என்பதே உண்மை.
ஆனால் பாஜக_வின் நிலை வேறு. இஸ்லாமியர்களின் நெஞ்சில் நிலைத்து விட்ட குஜராத் கலவரம் ஏற்கனவே பாஜகவை அவர்களிடமிருந்த ு குறிப்பிடதக்க அளவிற்கும் மேலாகவே தனித்து வைத்திருக்கிறது . இது போன்ற நிலையில் அதே பாஜக தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இன்னொரு "தனிமைப்படுத்தல ை" விரும்புமா என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்றாகும்..,
ஈழம் என்பதற்கும் மேல் இந்தியா ஊழலால் சீரழிந்து சீக்காளியாய் நொண்டி கொண்டிருக்கிறது . இந்நிலையில் காங்கிரசுக்கு மாற்று தேவை என்கிற கருத்து பெருன்பான்மையாக ஒலிக்கிறது. அதை பாஜக தனக்கான வரவாக செயல்படுத்தி கொள்ளுமா என்பது அதன் தேர்தல் அறிக்கைகளில் தரப்பட வேண்டிய ஒப்புதலில் இருக்க வேண்டும்.
முந்தைய பாஜக ஆட்சிக்கு வக்காலத்து தர வேண்டிய அவசியம் எமக்கில்லை ஆனால் நிச்சயமாக 2002 கலவரத்தை தவிர்த்து நோக்கின் அந்த ஆட்சி காங்கிரசின் கடந்த 10 வருட ஆட்சியை காட்டிலும் மேல் என்பதே உண்மை. ஆனால் என்ன செய்ய 2002 கலவரம் தான் பாஜக_விற்கு தடையாய் முன் நிற்கிறது..,
தொடர்ச்சியான 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி அவர்களுக்கு பெரும் அதிகாரத்தை தந்ததால் ஊழல்கள் பல குழி தோண்டி புதைக்கப்படும் நிலையில் உள்ளன. அவற்றை கொஞ்சமாவது உயிர்ப்புடன் வைக்க ஆட்சி மாற்றம் தேவை.
மத கலவரங்களை பற்றிய பெருன்பான்மை இந்துக்களின் பயமும் விரும்பமின்மையு ம் தான் கடந்த இருமுறை காங்கிரஸ் வெல்ல காரணம்.., ஆனால் அதையே சாக்காக, ஆயுதமாக வைத்து காங்கிரஸ் செய்து முடித்துள்ள பெரும் பொருளாதார கொள்கைரீதியான அழிவுகள் இப்போது மக்கள் கண் முன்னே பூதாகரமாக நிற்கின்றன.., இம்முறை காங்கிரஸ் எப்போதும் பயன்படுத்தும் "மதவாதம்" என்கிற ஆயுதத்தை மக்கள் புறந்தள்ளவே முனைகிறார்கள் என்பதே என் கணிப்பு.., "மதவாதம்" பற்றிய மிக அதிகமான, அதீதமான பேச்சுக்கள் காங்கிரசின் மீது பெரும் வெறுப்பை உண்டாக்கி வைத்துள்ளன என்பதும் கூட உண்மை. இந்துத்துவ சித்தாந்தத்திற் கு இடமளிக்காத நடுநிலை இந்துக்களை கூட காங்கிரசின் தேவையற்ற பேச்சுக்கள் முகம் சுளிக்க வைத்துள்ளன. இவையாவும் காங்கிரசுக்கு எதிராக மாறுகிற போது இங்கே பெருன்பான்மை இந்துக்களை மதரீதியாக கவர்ந்து பாஜக பெற விரும்பும் வாக்குகளை காங்கிரசே அவர்களையும் அறியாமல் தள்ளி விடுகிறது என்பதும் உண்மை.
இப்படிப்பட்ட சூழலில் சென்ற முறை ஆட்சியிலிருந்து ஊழலில் திளைத்த திமுக போன்ற கூட்டங்கள் அணிமாறி செய்ததையே தொடர்வதா?
அல்லது மத்தியில் புதிய அதிகார வாய்ப்பிற்காக காத்திருக்கும் அதிமுக_போன்ற கட்சிகள் நுழைய வேண்டுமா?
அல்லது மதிமுக போன்ற மக்கள் போராட்டங்களில் பெரும் கவனம் செலுத்தும் கட்சிகள் மத்தியில் அதிகாரம் பெற வேண்டுமா?
என்பதே சிந்திக்க பட வேண்டிய விஷயம்..,
rsamy அவர்கள் விடுதலைப்புலிகள ுக்கெதிரான வாஜ்பாயின் நடவடிக்கையை நினைவூட்டியிருந ்தார். அது யாரும் மறக்கக்கூடியதில ்லை. மேலே ffff அவர்களுக்கு அளித்த பதிலில் "விடுதலைப்புலிக ளுக்கு எதிராக, இலங்கைக்கு ஆதரவாக ஒரு முறை வாஜ்பாய் அரசு நடக்க முயன்றதை அறிவேன்" என்ற வரிகளில் நான் குறிப்பிட்டிருந ்தது அதைத்தான். எல்லாருக்கும் அது நினைவிருக்கும் என்ற நம்பிக்கையில்தா ன் அப்படிப் போகிற போக்கில் குறிப்பிட்டிருந ்தேன். ஆக, எல்லோருக்கும் இங்கு எல்லாமே நினைவிருக்கிறது . குசராத் கலவரம் முதல் பா.ஜ.க-வின் ஈழத்துக்கு எதிரான நிலைப்பாடு வரை யாரும் எதையும் இன்னும் மறந்துவிடவில்லை . அப்படியிருந்தும ் நாங்களெல்லாரும் வை.கோ-வின் இந்த முடிவை ஆதரிக்கக் காரணம், மீண்டும் சொல்கிறேன், நமக்கு வேறு வழியில்லை. "என்னடா அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறாய்?" எனக் கேட்டால், அண்ணன் சீமான் எழுதிய வரியைச் சொல்வேன்: "உண்மை. அதனால்தான்." (செந்தில் அவர்களுக்கும் இதே பதில் பொருந்தும்).
பொன்மலை ராஜா அவர்களுக்கான பதில்:
கூட்டணி என்பது கட்சித் தலைவர்களுக்கிடை யிலானது. பூசாரிகள் குறித்து நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை. மேலும், ஈழத் தமிழர் நலனுக்காக உயிரினும் மேலான கொள்கைகளையே மீறித் தமிழ்த் தலைவர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கிறோம் எனும்பொழுது நம் தனிப்பட்ட மதிப்பு மரியாதைகள் பற்றிக் கவலைப்படுவது நியாயமா?
மொத்தத்தில், பதிவுக்கு எதிரான எல்லாக் கருத்துக்களினுட ைய சாரம் யாதெனில், பா.ஜ.க சிறுபான்மையர் நலனுக்கு எதிரானது, ஈழத் தமிழர் நலனுக்கும் எதிரானது என்பதுதான். அதை நான் பதிவிலேயே ஒப்புக்கொண்டு அதற்கான விளக்கமும் அளித்திருக்கிறே ன். அப்படியிருந்தும ் இந்தப் பதிவு இவ்வளவு சலசலப்புகளை எழுப்புகிறது என்றால், நான் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என நினைக்கிறேன். எனவே, இதையே வேறு கோணத்தில் பாருங்கள்! அதாவது, இப்படிச் சிறுபான்மைச் சமூகத்தினர், ஈழத் தமிழர்கள் என எல்லாருக்கும் எதிராக இருக்கிற, இவ்வளவு மோசமான கட்சி என நீங்கள் குறிப்பிடுகிற பா.ஜ.க, சிறுபான்மையர் நலன் விரும்பும், தமிழ்ப் போராளிகளாகத் திகழும் வை.கோ போன்றவர்களும் உடன் இல்லாமல் தனித்தே ஆட்சியைப் பிடித்துவிட்டால ் என்னாவது? தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்! வை.கோ, சீமான் போன்றோர் அந்தக் கூட்டணியில் இணைந்தால் தமிழ்நாட்டில் இந்தத் தமிழ்க் கட்சிகளுக்கு நிறைய இடம் ஒதுக்கப்படும். இருக்கிற, தமிழர் ஆதரவு நிலைப்பாட்டுக்க ு இந்தக் கட்சிகள்தாம் ஆட்சியையும் பிடிக்கும். அப்படி நடந்தால், பெரியார் வழி வந்த வை.கோ-வையும் சீமானையும் நம்பியிருக்கும் மோடியால் சிறுபான்மையருக் கு எதிராகவோ, ஈழத் தமிழருக்கு எதிராகவோ ஒரு துரும்பையும் அசைக்க முடியாத நிலை ஏற்படும். அதே நேரம், காங்கிரசு இல்லாத ஒரு நல்ல ஆட்சியும் இந்தியாவுக்குக் கிடைக்கும் இல்லையா? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! கொள்கைகள் என்பவையே மக்கள் நலனுக்காகத்தான் . அவையே மக்கள் நலன் சார்ந்த முடிவுக்குத் தடையாக இருக்குமானால், கொள்கைகளைக் கொஞ்சம் மீறியாவது மக்கள் நலனுக்குத்தானே நாம் முதன்மை தர வேண்டும்?
பதிவுக்கு எதிரான கருத்துரைத்தவர் களில், அப்துல் காதர் அவர்களின் கருத்துத்தான் ஏற்கும்படியாக இருந்தது. இந்தக் கட்டுரையை எழுதும்பொழுதே, கூட்டணி இன்னும் முடிவாவதற்குள்ள ேயே எழுதுகிறோமே, நாளை திடீரெனக் காட்சிகள் மாறிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தோடேதான் எழுதினேன். நீங்களும் அதையே சுட்டிக் காட்டியிருக்கிற ீர்கள். நன்றி! காத்திருப்போம்!
இவ்வளவு சரமாரியான விவாதங்களை இந்தப் பதிவு தூண்டியிருப்பதே ஒரு நல்ல அரசியல் போக்குதான்.
There is a huge disappointment over congress's performance for the past 4-5 years but is that justifiable to bring in RSS micromanaging BJP to power ? Modi is just a hand pick of RSS. To an extent vajpayee had some amount of control over his party and now it is fully in the hands of RSS.
2002 riots alone is not the problem,it continued with the Maya kodnani's mininisterial berth as Women and child development as a reward for killing 98 human lives which was termed as rarest of rare crimes by the court.she is also now out in bail now. Fake encounters and now muzzarfarnagar riots... Tried to even evict sikh farmers from gujarat saying they are outsiders.Broug ht anti-conversion law just to harass christians. There is not even a single muslim bjp candidate for gujarat state elections,is this not intentional isolation of muslims ? Is 18 crores muslims,crores of sikhs and christians less important ? RSS is trying to sideline muslims as untouchables as their ancestors did to dalits 1000s of years. Their main election point is against muslims to get votes by saying hindus are 85% but the fact is 25% of india's population are dalits.bjp will not consider them even as humans but include them as hindus when they want votes. Just see who occupy key positions in BJP governments,all upper caste people- recent example chattisgarh. They are trying to use the same intellectual brainwashing which they did to subdue the indians to make them superior.The same logic still works.The hinduism which they say is not true hinduism it is vedic brahmanism- supporting the hegemony of brahmins.
Till date there is no action plan to setright the economic conditions of the country and other problems ,just accusing congress and its leaders personally. Everything is like if we come to power everything will change automatically.
BJP is corrupt free ? They are joining hands with yeddurappa for votes.Sushma swaraj is strong supoorter of reddy brothers.Why gujarat is not having lok ayukta for more than 10 years. what is the debt of gujarat government ? Gujarat cricket board chief didnt utter a word against BCCI chief srinivasan when IPL scam broke out. Remember nearly 1.40 crore people voted against BJP in gujarat state elections. why corporates support bjp just because they will do anything they wanted as in case of tata nano,mining and many other deals. They oppose dynasty rule but support shiv sena and Akali dal.In recently concluded assembly elections many of the bjp candidates are sons of former bjp leaders, does this not encourage dynasty politics ? Very keen on tejpal but silent on snoopgate.
BJP says congress ruled because of muslims.Just look at the states where there is substantial muslim population(more than 15-20%),there will not be congress governments.jus t accusing for the sake of votes.
No double standards please.congress is no saint so is bjp.dont try to project BJP as honest and so on.. both are same. see how they unitedly trapping AAP in delhi just to make AAP lose in next elections.
Vaiko shouldnt get trapped by BJP.
If one says Majoritarian's views alone should be taken into account,then it will be disastarous for a country like india as we have so many different ethnicities,rac es,regions,lang uages and religions.If Hindi/Sankrit is imposed once again saying majority speaks/respects it,problem arises.Even now when we talk of tamils issue and releae of innocent tamils,there is no voice in the center because we are a minority.If sikhs speaks,there is no respect for them too now (demanding release of six sikhs who has spent more years in jail) because they are a minority.
I will not say do not support BJP or congress or any other party.It is individuals decision to do that.But just because someone opposses BJP dont project as anti-hindu,anti -india and so on.This is what is happening now.Democracy is what each individual is allowed to think and decide.
நாளை பாஜாகவே ஆட்சி அமைத்தாலும், அதில் ஏதோ தமிழர் மற்றும் ஈழத்தமிழர் உரிமைகளைப் பேசி நமக்கும், ஈழத்தமிழர்களுக் கும் வெற்றியை வாங்கித்தருவார் என்று பகல் கனவு கான்பதிலிருந்து சற்றே விழகி சிந்தித்து பாருங்கள் – பாஜாக தன்னுடைய ஆட்சியில் அய்யா வைகோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமா அல்லது சுப்ரமணிய சுவாமி போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமா? பதில் நான் சொல்லத் தேவையில்லை. சுப்ரமணிய சுவாமி போன்றவர்களின் ஈழத்தமிழர் நலன் குறித்து, தமிழர் அனைவரும் அறிந்ததே. உங்கள் முடிவை உங்கள் மனசாட்சியே வெறுத்திருக்கும ் நிலையில் சமாதானம் செய்ய கிளம்பியிருக்கு ம் வெற்று விவாதங்களை விடுத்து ஆகிற வேலையைப் பாருங்கள்.
இப்படிக்கு
வைகோ அவர்களை தமிழின பாதுகாவலராக மட்டுமன்றி ஒட்டுமொத்த மனிதகுல அநீதிக்கு எதிரானவர் என்றென்னி ஏமாந்து போய் நிற்கும் ஒரு முஸ்லிம் மதிமுக அனுதாபி
RSS feed for comments to this post