கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- விஞ்ஞானி க.பொன்முடி
- பிரிவு: புவி அறிவியல்
இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப்பட்டது. ஆனால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?
இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை.
குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் மிதக்கிறது.
இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிக் கொண்டிருப்பதால் பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது அதிலிருந்து நீரும் வாயுக்களும் பிரிவதால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் பாறைத் தட்டுகளின் கன அளவும் அதிகரிக்கின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன.
இவ்வாறு பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயரும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் அப்பகுதியில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பழைய பாறைத் தட்டுகளை மேல் நோக்கி தள்ளுகின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன. இவ்வாறு ஒரு இடத்தில பாறைத் தட்டுகள் உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அப்பகுதியில் உள்ள மற்ற பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
மற்றபடி சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகருவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மையென்றால் இந்தியாவில் எல்லா இடத்திலும் ஒரே நாளிள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்
1679 ஜனவரி 28 அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 10 அன்று சென்னையில் நில நடுக்கம்.
1816 செப்டம்பர் 16 அன்று சென்னையில் லேசான நில நடுக்கம்.
1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.
1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.
1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.
1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.
1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம்.
1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
1841 ஜூன் 26 அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
1988 ஜூலை 7 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு.
1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம்.
2000 டிசம்பர் 12 அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் லேசான நில நடுக்கம்.
2001 ஜனவரி 7 அன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 ஜனவரி 26 குஜராத்தில் ஏற்ப்பட்ட கடுமையான நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 செப்டம்பர் 26 அன்று புதுவை கடலோரத்தில் லேசான நில நடுக்கம்.
2001 செப்டம்பர் 26 அன்று சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம்.இரண்டு பேர் பலி.
2001 அக்டோபர் 28 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் நாகர்கோவிலில் லேசான நில அதிர்ச்சி.
-மூலம்: இணையம்.
மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன, டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.(தினத்தந்தி-19.07.2009)
தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம். எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும். சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
- விஞ்ஞானி.க.பொன்முடி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
வேட்டையாடி பிழைத்துவந்த வாழ்க்கையை விட்டு வேளாண்மை செய்து பிழைக்கும் நிலைக்கு மனிதன் வாராதிருந்தால் நாடு, நகரம், அறிவியல் தொழில் நுட்பம் என்று எதுவுமே ஏற்பட்டிருக்காது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் வேட்டைக்காரனாகத் தானிருந்தான். அவனது பற்களின் பலத்தையும், பெரிய தாடையின் அளவையும் இன்றைய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நவீன மனிதனின் பற்கள் வெறும் அவலுக்கு சமம். தாடை கூட சிறியதாகி உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
பல்துலக்காமல் இருந்தும், பல்சொத்தையில்லாமலேயே வேட்டை மனிதன் வாழ்ந்தான். இன்று பல்லுக்கென்று மனிதன் எத்தனை நேரத்தையும் பொருளையும் செலவு செய்கிறான்! இந்த மாற்றத்திற்குக் காரணம் வேகவைத்த அரிசி, கோதுமை உணவை சாப்பிடுவதுதான். அதிக கார்போஹைட்ரேட் மிகுந்த உணவின் மூலம் நாம்பெற்ற தீமைகள் இவை. வேலைக்காக மனிதன் பெருங்கூட்டமாக நகரத்தில் வாழ ஆரம்பித்ததும்தான் சிப்பிலிஸ், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் தோன்ற ஆரம்பித்தன. நாகரிகத்தில் முன்னேறிச் சென்றால், ஆரோக்கியம் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இன்னும் இரண்டு மில்லியன் பூஞ்சை உயிரினங்கள் பூமியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது என்று லண்டன் க்யூ (Kew) தாவரவியல் பூங்கா ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட 2023ம் ஆண்டிற்கான உலக தாவர மற்றும் விலங்குகள் (State of Flora & fauna) நிலை பற்றிய ஆய்வறிக்கை கூறுகிறது.
மனிதனின் கண்டுபிடிப்பு தேடலில் பூஞ்சையினங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தாவரங்களும் அழியும் ஆபத்தில் உள்ளவை என்பதால் அவை நிரந்தரமாக அழிந்துவிடும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.
கண்டுபிடிக்கப்படும் புதிய உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி உயிரினங்களும் மறையும் ஆபத்தில் உள்ளன. மனித உடலில் வயிற்றுப்பகுதி செரிமான மண்டலத்தில் உள்ள மைக்ரோபியோமில் (gut microbiome) உணவு செரித்தல், ஆற்றல் பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தி பெற உதவும் பூஞ்சைகள் வாழ்கின்றன.இந்தப் பூஞ்சைகள் முதல் பூமியில் உள்ள மிகப் பெரிய தரைவாழ் பூஞ்சையினம் வரை காணப்படும் உயிரினங்கள் அவற்றின் உயிர்ப்பன்முகத் தன்மையில் முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன.
இவை காற்று, தாவர விலங்குகளுக்குள், மண் மற்றும் கடலில் பல அளவுகளில் பல வடிவங்களில் வாழ்கின்றன. இவற்றில் 90% இன்னமும் அறிவியலால் அறியப்படாதவை என்று க்யூ ராயல் பூங்கா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் பூஞ்சைகள் உள்ளன. 155,000 பூஞ்சை உயிரினங்கள் மட்டுமே இதுவரை கண்டறியப் பட்டுள்ளன. “இது மனிதன் இன்னமும் கால் பதிக்காத எல்லை ப்பகுதி (uncharted territory). கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் நம் வாழ்வின் நிலைத்தன்மை, விவசாயம் போன்றவற்றில் இந்த உயிரினங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் மிக உயிர் வாழ்வில் மிக முக்கிய இடம் உள்ளது.
அண்டவெளியில் கரும்பொருட்கள் பூமியில் பூஞ்சைகள்
இப்போது உயர் தர டி என் ஏ பகுப்பாய்வு வசதிகள் உள்ளன. அறியப்படாத பூஞ்சைகள் பற்றிய ஆய்வுகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் அண்டவெளியை ஆராய்வது போல. விண்வெளி ஆய்வில் கரும்பொருட்கள் போல பூஞ்சைகள் என்று ராயல் பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Prof Alexandre Antonelli) கூறுகிறார்.
கண்டறியப்படாத புதிய பூஞ்சை உலகம் பற்றிய இச்செய்தி ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது என்றாலும் அவற்றில் பல இனங்கள் அழியும் ஆபத்தில் இருப்பவை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் அடையாளம் காணப்பட்ட சிறப்பு கடத்து திசுக்களைக் கொண்டுள்ள வாஸ்குலர் தாவரங்களில் 70% ஏற்கனவே விரைவில் அழியும் ஆபத்தான நிலையில் (threatened) உள்ளன.
இந்த வகை உயிரினங்களில் 59% இனங்கள் அழியும் ஆபத்தை (Endangered (EN)) நிலையிலும் 24% இனங்கள் இந்த நிலையை விரைவில் அடையும் ஆபத்திலும் வாழ்கின்றன. பூமியில் இதுவரை 350,000 வாஸ்குலர் வகை தாவரங்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. 100,000 இனங்கள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இவற்றில் மூன்றில் ஒன்று அழியும் நிலையில் உள்ளது.
புதிய உயிரினங்கள் வேறெந்த நிலையிலும் வாழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவை அணைத்தும் அழிவை நெருங்கி விட்டவையாக வகைப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொது மக்கள் புதியவற்றை கண்டுபிடிப்பதை உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் ஊக்குவிக்கின்றனர். புதிய டி என் ஏ மரபணு வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தின் (DNA sequencing technique) புரட்சியால் ஒரு ஸ்பூன் மண்ணில் நூற்றுக்கணக்கான புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் மண் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பும் மண் மாதிரியின் ஒரு ஸ்பூன் மண்ணில் கண்டுபிடிக்கும் புதிய பூஞ்சை ஒன்றிற்கு பெயர் சூட்டும் வாய்ப்பு அதை அனுப்பும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. 2020 முதல் இத்திட்டத்தின்படி 10,200 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. ஆண்டிற்கு 50,000 புதிய இனங்களை அடையாளம் காண முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
2023ல் க்யூ பூங்கா விஞ்ஞானிகள் பிரேசில் அட்லாண்டிக் பகுதி மழைக்காடுகளில் ஜாம்பி-எறும்புத் தின்னி (zombie-ant fungi) போல trapdoor வகையைச் சேர்ந்த சிலந்தியை உண்ணும் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையினத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய இனங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் அவற்றை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. ”புதியவை கூடுதலாக கண்டுபிடிக்கப்படுவது மருத்துவம், வேளாண்மை, பொறியியல் மற்றும் மனித நோய்களை இன்னும் மேம்பட்ட முறையில் புரிந்துகொள்ள உதவும். தாவர விலங்குகளை விட டி.என்.ஏ. தொழில்நுட்பம் பூஞ்சைகளை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது.
பூஞ்சைகள் என்றால் ஆரம்பத்தில் நாய்க்குடைகள் மற்றும் லைக்கன்கள் (lichens) எனப்படும் பூக்களற்ற, மஞ்சள் அல்லது சாம்பல் நிறமுடைய, பாறைகள், சுவர்கள், மரங்கள் மீது படர்ந்து வாழும் சிறிய தாவரங்கள் மட்டுமே ஆராயப்பட்டு வந்தன. நம் மைக்ரோபையோமில் ஏராளமான பூஞ்சைகள் உள்ளன என்று இன்று அறியப்பட்டுள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்கள் பூஞ்சைகளால் ஏற்படுகின்றன அல்லது சமநிலையற்ற நிலையில் அவை நம் உடலிற்குள் இருப்பதால் தோன்றுகின்றன.
"மண்ணிற்கடியில் வாழும் பூஞ்சைகள் மரங்களை மண்ணோடு பிணைக்கின்றன. மரங்களின் வேர்களுடன் கூட்டுயிரி வாழ்க்கை வாழ்வதற்கான உறவை (symbiotic relationship) இவை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பரம் உதவி செய்து வாழ்கின்றன. நீரையும் சத்துப் பொருட்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த உயிரினங்களின் ஸ்போர்களை இப்போதும் நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றுராயல் பூங்காவின் மூத்த ஆய்வாளர் எஸ்ட்டர் கயா (Ester Gaya) கூறுகிறார்.
புதிய தாவரங்கள் மற்றும் பூஞ்சையினங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி விவரிப்பது உயிர்ப்பன்மயத் தன்மை அறிவியலில் ஒரு முக்கிய சவால். மோசமான அறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இடைவெளியுள்ள கொலம்பியா, நியூ கினி போன்ற 32 தாவர உயிர்ப்பன்மயத் தன்மை இருண்ட இடங்கள் (Plant biodiversity dark spots)அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகின் பல இடங்களில் போதுமான அளவில் ஏராளமான தாவரங்கள் இது வரை சேகரிக்கப்படவில்லை. ஆராயப்படவில்லை அல்லது அந்த இடங்களின் உயிர்ப்பன்மயத் தன்மையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் ஏராளம் என்பதால் இவை இருண்ட இடங்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
இன்று நாம் அறியாமல் நம்முடன் வாழும் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கும்போது கண்டுபிடிக்கப் படாதவையும் அவற்றை நாம் அறியும் முன்பே அழிந்துவிடும் என்பது மனிதன் உடனடியாக சூழலைக் காக்க உருப்படியாக அவனால் ஆனதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்