Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruHistoryIndia
தனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாறு

Gandhi உலகச்சந்தை பங்கீட்டுப் போட்டி முதல் உலகப்போரோடு முடியவில்லை. வெர்சல்ஸ் உடன்படிக்கையும் பன்னாட்டு சங்கமும் தோற்றன. பாதிக்கப்பட்ட ஹிட்லரின் தலைமையில் போலந்தின் சங்கமும் தோற்றன. பாதிக்கப்பட்ட ஹிட்லரின் தலைமையில் போலந்தின் மீது படையெடுக்க பிரிட்டனும், பிரான்சும் 1939 செப்டம்பர் 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சியையோ, அமைச்சர்களையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் பிரிட்டனுக்காகப் போரில் கலந்து கொள்ளும் என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இந்தியா தனது மனித சக்தியை இந்தப் போர்களின் மூலம் விரயம் செய்யாது என காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது.

இதனையடுத்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கைகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டது. 1939 அக்டோபர் 2ம் தேதி பம்பாய் தொழிலாளர்கள் அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜானாமா செய்தனர். இந்துமகா சபை ஆங்கிலேயருக்கு ஆதரவு கொடுத்தது. முழுச்சக்தியையும் திரட்டி சட்டமறுப்பு இயக்கம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்தது. போரட்டத்தை இறுதிப்படுத்துகிற பொறுப்பை காந்தியிடம் ஒப்படைத்தது காங்கிரஸ். போரில் உதவினால், இறுதியில் இந்தியாவை முழுசுதந்திர நாடாக்க வேண்டும் என்றது காங்கிரஸ். பிரிட்டிஷ் அரசு சம்மதிக்கவில்லை. ஒரு நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க விரும்பாத காந்தி ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ அறிவித்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.