Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2009

யார் பிரதமர் வேட்பாளர்
கணேஷ்

(பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்று “கோடீஸ்வரன்’’ ஸ்டைல் போட்டியை நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்கிறது. இந்த நிகழ்ச்சியை இந்தியில் நடத்திய அமிதாப்பச்சன் இதற்கும் பொறுப்பேற்கிறார். கேள்விகளை சந்திக்கிறார் எல்.கே.அத்வானி) பல்வேறு கேள்விகளைத் தாண்டி இறுதிக் கேள்வியை எதிர்கொள்கிறார்

authvani_amithab. அமிதாப்: அத்வானிஜி, நாம் முக்கியமான

கட்டத்தில் இருக்கிறோம்...

அத்வானி: நீங்களும்தான் அமிதாப்... ஜெயிச்சா நான் எழுதப்போற புத்தகமே உங்களப்பத்திதான்

இருக்கும்.. “உங்கள் நாடு, உங்கள் வாழ்க்கை’’னுஅதுக்குப் பேர் வெப்பேன்... அமிதாப்

(சிரித்தவாறே): நல்லது அத்வானிஜி... உங்க

லைப்லைன் எல்லாம் அப்படியே இருக்கு... 50_50,

பார்வையாளர் கணிப்பு, நண்பரிடம் தொலை-

பேசியில் கேட்பது... நாம அடுத்த கேள்விக்குப்

போலாமா...?

அத்வானி: போலாமே...!

அமிதாப்: உலகப் பொருளாதார நெருக்கடினால இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கு... இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.. கேள்வி

என்னன்னா.. அதுக்கான காரணமென்ன...?

1) தாராளமய, தனியார் மய மற்றும் உலகமயக் கொள்கைகளை நாடு பின்பற்றியதுதான்.

2) அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவில்லை.

3) பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திர மோடியும்

தயாராகிறார்.

4) பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் குறைவு

அத்வானி: ரொம்ப சிரமமான கேள்வியா கேட்டுட்டீங்களே.. என்னோட புத்தகத்துக்கு “நாடே இல்லை, வாழ்க்கையே இல்லை’’னுதான் பேர்

வெக்கணும்..

அமிதாப்: உங்ககிட்ட எல்லா லைப்லைனும் இருக்கு அத்வானிஜி..

அத்வானி: என்னையக் குழப்பிட்டீங்க. அமிதாப்...

அமிதாப்: உங்க கட்சி, வித்தியாசமான கட்சினு கட்சிக்காரங்க சொல்லி நான் கேட்டுருக்கேன்...

அத்வானி: ஆமா... “லட்சுமணன் கிழித்த கோடு’’ன்னு ஒண்ணு வெச்சிருந்தோம்...அதோட எல்லை என்னனு சொல்லாமலேயே இருந்தோம்.. ஆனா அது “பங்காரு லட்சுமணன் கிழிச்ச கோடு’’ ங்குற உண்மை அம்பலமாயிடுச்சு.. இப்ப கட்சில எல்லாருமே அதவிடப் பெரிய கோடு போட்டுட்டு இருக்காங்க...

அமிதாப்: பொருளாதார நெருக்கடிக்கு நடுவுல,

உங்க கட்சிக்கு அந்த மாதிரி நெருக்கடியெல்லாம் இல்ல... அப்படித்தான..

அத்வானி: நிச்சயமா இல்லை... எல்லாத்துறைல

யும் நிபுணர்கள் இருக்காங்க, எங்ககிட்ட... மனித வளத்துறைக்கு கடாரா, நில மேம்பாட்டுக்கு வெங்கய்யா நாயுடு, ஜவுளித்துறைக்கு லால்ஜி டாண்டன், இரும்பு எஃகுத்துறைக்கு பிரவீண் தொகாடியா...அது ஏன், ஹவாலால நானே வல்லுநர்தானே...

அமிதாப்: சரி அத்வானிஜி... கேள்விக்கு வருவோம்...லைப்லைன் எதையாவது பயன்படுத்துறீங்களா...

அத்வானி: ஆமா... 50_50.. அமிதாப்: கம்ப்யூட்டர்ஜி... இரண்டு பதில்களை நீங்கள் எடுத்து விடலாம்... (2 மற்றும் 3ஐ கம்ப்யூட்டர் நீக்கி விடுகிறது) அத்வானி பெருமூச்சு விடுகிறார்

அமிதாப்: என்ன அத்வானிஜி..

அத்வானி: நல்லவேள 2ஐ எடுத்துட்டீங்க... அதுதான் ரொம்ப குழப்புச்சு..அந்த அயோத்திங்குறது எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருந்துச்சு... அது எங்கருக்குனு மண்டையப் போட்டு உடைச்சுட்டுருந்தேன்...

அமிதாப்: சரி.. இப்ப பதில் சொல்ல விரும்புறீங்களா...இல்லைனா மக்கள்கிட்டகேக்குறீங்களா...?

அத்வானி (அரைமனதுடன்): சரி...கேக்கலாம்...

அமிதாப்: ஓகே.. கம்ப்யூட்டர்ஜி, தயாரா..? (பார்வையாளர்கள் வாக்களிக்கிறார்கள்)

அமிதாப்: அத்வானிஜி..மக்கள் 1 தான் சரி என்கிறார்கள். தாராளமய, தனியார்மய மற்றும் உலகமயக் கொஷீமீகைகஷீமீதான் பொருளாதார

நெருக்கடிக்குக் காரணம்னு வாக்களிச்சுருக்காங்க...

அத்வானி (தலையைச் சொறிந்தவாறே): ம்..ம்..ம்ம்ம்...

அமிதாப்: நீங்க மக்கஷீமீ கருத்தோட ஒத்துப் போறீங்களா..அத்வானிஜி..? அத்வானி (அதச் செஞ்சதே கிடையாதே என்று மனதுக்குள் கூறியவாறே) : நண்பர்கிட்டயும் கேட்டுறலாமே...!

அமிதாப்: யார் அந்த நண்பர்...?

அத்வானி: பிரதமர் மன்மோகன்சிங்குதான்..

பொருளாதாரக் கொள்கைகள்ல நாங்க ஒரே மாதிரிதான் யோசிப்போம்..!

அமிதாப் (எண்களைத் தட்டுகிறார்) : மன்மோகன்சிங்ஜி... நான் அமிதாப் பேசுறேன்... யார் பிரதமர் வேட்பாளர் நிகழ்ச்சிலருந்து...

மன்மோகன்சிங்: யார் பிரதமர் வேட்பாளரா... ராங் நம்பர்...

அமிதாப்: மன்மோகன்சிங்ஜி... நான் அமிதாப் பேசுறேன்...

மன்மோகன்சிங்: அமிதாப்... பிரதமர் வேட்பாளர் யார்னு சோனியாஜிகிட்டதான் கேக்கணும்... அவங்ககிட்ட கேக்கலாமான்னு ராகுல் காந்திகிட்ட

கேட்டுட்டு சொல்றேன்...

அமிதாப்: இல்ல மன்மோகன்ஜி..உங்க அத்வானி இந்தப் போட்டில இருக்கார்...கேள்விக்கு பதில எதிர்பார்க்குறார்... (கேள்வியைச் சொல்கிறார்)

மன்மோகன்:
4தான் விடை...

அமிதாப்: உங்க நண்பர் மன்மோகன்சிங், பொருளாதார சீர்திருத்தங்களோட வேகம் குறைவுதான் காரணம்னு சொல்லிருக்கார்... மக்கள் கருத்த ஒத்துக்குறீங்களா... அல்லது உங்க நண்பர் சொல்றத கேக்கப்போறீங்களா...?

அத்வானி: 4தான் விடை.

அமிதாப்: கம்ப்யூட்டஜி...விடையைச் சொல்லலாமா...? (1 - இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு தாராளமய, தனியார்மய மற்றும் உலகமயக் கொள்கைகளை நாடு பின்பற்றியதுதான் காரணம் என்று திரையில் பளிச்சிடுகிறது)

அமிதாப்: மக்கள் பேச்ச நீங்க கேட்டுருக்கலாமே

அத்வானிஜி... (அத்வானி வெளியேறுகிறார்.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com