Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2006

கடவுளின் மீட்பன்
ஆதவன் தீட்சண்யா

சைரன் அலறப் பதறியோடும்
ஒரு தீயணைப்பு வண்டியின் மணியோசை
கர்ப்பகிரஹத்தையோ தேவாலயத்தையோ
நினைவுபடுத்துமானால்
கடவுளைப்பற்றி அறிந்த அளவுக்கு
உனக்கு மனிதர்களைத் தெரியாதென
குறித்துக் கொள்வேன்

ஒருவேளை
நீயே கடவுளாய் இருக்கும் பட்சம்
உனக்கு மனிதர்களைப் பற்றித்தான் தெரியுமேயொழிய
சடசடத்தெரியும் நெருப்பையும்
கருகி வெடிக்கும் உயிர்களையும்
நீ ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று
தீர்ப்பளித்துவிடுவேன்

நல்வாய்ப்பாய்
கடவுளாகிய நீயே வெந்து கொண்டிருப்பாயானால்
அப்பெருந்தீயின் சுடரொன்றில்
காதோரம் செருகி வைத்திருக்கும்
துண்டு பீடியை சாவகாசமாய் பற்ற வைத்துக் கொண்டு
தகிப்பின் உக்கிரத்தை போதிப்பேன் உனக்கு
(இவ்விடத்தில் அடுப்பங்கரை / நந்தன் /
வெண்மணி / இராக் வீதிகளை
நினைவூட்டுவது எனது நோக்கமல்ல)

ஆனால்
அப்போதாவது
கடவுள் என்ற பீடம் விட்டிறங்கி
ஒரு உயிரைப்போல் கதறுவாயானால்
வென்னீரை ஊற்றினாலும் தீயணையுமாதலால்
என் மூத்திரத்தையும் எச்சிலையும் தெளித்தேனும்
நெருப்பையணைத்து மீட்பேன் உன்னை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.