 |
யாழன் ஆதி கவிதை
இரைதேடி தரை கிளறும்
கோழியைப் போல்
கவிழ்ந்து கிடக்கிறது தலை
வறண்ட நிலத்தின் வெடிப்புகளென
பயனற்றதாய் போய்விட்டது
மனிதர்களின் மானமும் சுயமரியாதையும்
மவுனத்தின் கரைகள்மேல் நின்று
மக்கள் பார்க்கின்றனர் கூத்துகளை
அவமானம் குறித்தோ
அடிமைத்தனம் குறித்தோ
கவலைகள் ஏதுமற்றவர்கள்
மதிநலம் மிக்க மந்திரிகள்
முன்னாள் முதல்வரெனினும்
டயரடி மண்போற்றும் தகுதிபோதும்
வீரத்தமிழக அரசியலுக்கு
கானல் நீர் பாய்ந்த
கண்ணுக்குத் தெரியாத புற்களை
மானங்கெட்டு மேயப்போயிருக்கின்றன
மயிர்நீப்பின் உயிர்நீக்கும் கவரிமான்கள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Unable to connect to database! Please try again later.
| |