 |
யாழன் ஆதி கவிதை
சிரிப்பின் எக்காளத்தில்
அமிழ்கிறது
உள்ளங்களில் கிடக்கும்
வெஞ்சினம்
இடங்களின் மீது நடக்கும்
அரசியலின் சூதில்
ஏமாற்றுவதற்காய் காலியாக்கப்படுகின்றன
இல்லாத இதயத்தில் இடங்கள்
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
செரித்துக் கிளம்புகின்றனர்
கோரிக்கைகளின் கைகளை
சுருண்டு குழையும் வாலென
புறந்தள்ளி
ஒட்டிய மண்ணை
உதறிவிட்டு எழுகிறது
அழிக்க விம்மும் தடைகளை
மோதி உடைக்க
எளிய மக்களின்
புறக்கணிக்கப்பட்ட அரசியல்
புதிய விடியலாய்
புதிய விருட்சமாய்
புதிய விடுதலையாய்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Unable to connect to database! Please try again later.
| |