Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Dalithmurasu
K.R. Narayanan
டிசம்பர் 2005
யாழன் ஆதி கவிதை

Jeyandrar and L.Ganesan

குற்றவாளிகளால்
தீர்மானிக்கப்படுகின்றது
நீதி தேவதையின் இருப்பிடம்

வாக்குமூலங்களில் தொனிக்கின்ற
வர்ணமூலங்களே
நீதியின் விதைகளென
இருக்கின்றன

மரணங்களின் துர்வாடைகளின் மீது
தெளிக்கப்பட்ட மந்திர
வாசனைகளில் மயக்கமுறுகிறது
ஜனநாயகம்

ஆசிர்வாத மேடையில் அமரும்
பயங்கரவாதிகள் சூழ
வலம் வருகிறது குற்றம்
கையில் தண்டத்தோடு

நீதியின் கைகளில்
விலங்கினைப் பூட்டிவிட
இரைச்சல் போடுகின்றது மதத்திமிர்

வெட்டவெளியெங்கும் தகிக்கிற
கோபத்தை கொட்டி வைக்கிறோம்
இன்னும் அழியாத உங்களின்
செருக்கின்மீது


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.