Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Dalithmurasu
ஆகஸ்ட் 2005

மவுனக் கொலையாளிகள்
என்.டி. ராஜ்குமார்


நாம் செல்லுவோம் என்கிறது
அரவம் நுழைந்த காவியோசை

Yaakkan மசூதிகளையும் தர்க்கா பறவைகளையும்
அடித்து நொறுக்க

நாமென்பது நாமா

நீ வேறு நான் வேறு
நீங்கள் வேறு நாங்கள் வேறு

எல்லோரும் பற்பல இனம்
எல்லோர்க்கும் பலப்பல கடவுள்கள்

பனங்கள்ளும் தென்னங்கள்ளும்
கலந்தடித்த போதை கிறுக்கில்
கருவாடு சுட்டுத் தின்னுகிறாள் எனதம்மை

வலம்புரிச் சங்கிலும் கெண்டியிலும்
மாட்டு மூத்திரம் பிடிப்பவர்களே

பசுக்களை நடுக்காட்டிலிட்டு பின்புறம் தடவும்
ரிஷிமார்கள் கதைக்கிறார்கள்

அஷ்வமேத யாகத்தில் குதிரைகளைப் போட்டு
சுட்டுத் தின்ற கதையை

வரலாறை விழுங்காதே மாமிசப் பாம்பே

எல்லோரும் ஓர் குலம்
எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர் மக்களென்பதொரு

பரிகாசச் சொல்தானே
மவுனக் கொலையாளிகளே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.