Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஏப்ரல் 2006

வன்கொடுமையைப் பதிவு செய்!
பூமிநாதன்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த கருங்கம்மாள் என்ற தலித் பெண்ணை, அக்கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மற்றும் முத்து என்ற சாதி இந்துக்கள் 1.3.2006 அன்று பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியுள்ளனர். இவர்கள் வசிக்கும் ராமநாதசுவாமி நகரில் தலித் மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளுமில்லை. குறைந்தபட்சம் கழிப்பறைகூட இல்லாததால், அம்மக்கள் அருகில் இருக்கும் வேதனைகுழை தோப்பைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட, இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட கருங்கம்மாளே தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்தும் முதல் தகவல் அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவாகியுள்ளன. பாலியல் கொடுமை நடைபெற்ற 24 மணி நேரத்தில், மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக இதைச் செய்யாமல் காலத்தைக் கடத்தி வருகிறது காவல் துறை. இங்கு பாலியல் வன்கொடுமைகள் தொடர, காவலர்களின் மெத்தனப் போக்கே காரணம். முனியசாமி மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யக் கோரியும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அருந்ததியர் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

- பூமிநாதன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.