சுப்ரமணியபுரம் நூறாவது நாள் கொண்டாட்டம்
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா சத்யம் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. மீடியாக்களே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என இயக்குனர் தெரிவித்தார்.
சுப்ரணியபுரம் படத்தில் நூறாவது நாள் வெற்றிவிழா சென்னை சத்யம் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் அப்படத்தின் இயக்குனர் சசிகுமார் பேசும்போது,
சுப்ரமணியபுரம் படத்தை முதலில் விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்தனர். படத்தை விற்பதற்கே பெரிதும் போராட வேண்டியிருந்தது. அதன் பின்னர் சில தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியானது. அதிலும் பல திரையரங்குகள் இரண்டாவது நாளே படத்தை மாற்றி விட்டனர். ஆனால் மீடியாக்கள் படத்தைப் பற்றி உயர்வாக விமர்சனங்கள் எழுதின. அதன்பின்னர் படம் தமிழகம் முழுவதும் அதிக அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு மீடியாக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|