ஸ்ரீனிவாசன் ஜோடியாக பத்மப்பிரியா
மிருகம் படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் பத்மப்பிரியா.
மிருகம் படத்தில் சிறப்பாக நடித்திருந்தும் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் பத்மப்பிரியாவுக்கு கிடைக்கவில்லை. இதனால் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கத பறயும் போள் வெற்றிக்குப் பிறகு நடிகர் ஸ்ரீனிவாசன் ஜோடியாக ‘பச்சமரத்தணலில்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் இயக்குனர் லியோ தடியாஸ். இவர் இயக்குனர் பத்ரனிடம் உதவியாளராக இருந்தவர். ஒரு குடும்பத்தலைவியாக ஒரு குட்டிப் பெண்ணின் அம்மாவாக இந்தப் படத்திலும் பத்மப்பிரியா மிகச் சிறப்பாக பெயர் வாங்குவார் என்கிறார் இயக்குனர் லியோ.
|