டைரக்டராகும் அடுத்த டான்ஸர்
நடிகர் நாகேந்திர பிரசாத்தும் அடுத்து ஒரு படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
நடன இயக்குனர்கள் ராஜூசுந்தரம். பிரபுதேவா, நாகேந்திரபிரசாத் மூவரும் சகோதரர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். மூவருமே நடனத்தை தாண்டி நடிப்பிலும் தனி இடத்தை பெற்றவர்கள்.
நடிப்பை அடுத்து பிரபுதேவா தமிழிலும், தெலுங்கிலும் படங்களை இயக்கி சிறந்த இயக்குனர் என்றும் பெயர் வாங்கி விட்டார். ராஜூசுந்தரமும் தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இவர்களை அடுத்து நாகேந்திர பிரசாத்தும் ஒரு படத்தை இயக்க ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ளாராம். இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் தெலுங்கில் வாங்கித் தருவதாக வாக்களித்துள்ளாராம் பிரபுதேவா.
கலக்குங்க பிரதர்ஸ் !
|