1200 பிரிண்டுகள் வெளியாகும் தசாவதாரம்
கமல் பத்து வேடங்களில் நடித்து ஏப்ரலில் வெளியாகவுள்ள தசாவதாரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் வகையில் 1200 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது.
மாயாஜால் காம்ப்ளக்ஸின் பத்து திரையரங்குகளிலும் தசாவதாரம் திரையிடப்படுகிறது. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் வீதமும், அடுத்த ஐம்பது நாட்களுக்கு தினமும் நான்கு காட்சிகள் வீதமும் திரையிடப்படுகிறது. ஒரு மல்டிப்ளக்ஸ் காம்ப்ளக்சில் தொடர்ந்து ஐம்பது நாட்கள் புக் செய்யப்பட்ட முதல் இந்தியப்படம் என்ற பெருமையை தசாவதாரம் பெற்றுள்ளது.
|