ரஜினிக்காக காத்திருப்பேன் - அரவிந்த் கிருஷ்ணா
குசேலன் படத்தில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் ரஜினிக்காக இன்னும் காத்திருப்பேன் என்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா.
பொல்லாதவன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் அரவிந்த் கிருஷ்ணா. அந்தப் படத்தின் ஒளிப்பதிவிற்காக பெரிதும் பாராட்டப்பட்டார். படத்தை பார்த்த இயக்குனர் வாசு அரவிந்த் கிருஷ்ணாவை பாராட்டியதோடு தனது அடுத்த படமான குசேலன் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் ஆக்கிவிட்டார்.
இதுகுறித்து அரவிந்த் கிருஷ்ணா கூறும்போது,
ரஜினிகாந்த் என்னுடைய கனவு ஹீரோ. அவரோடு பணிபுரியும் வாய்ப்பு இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சினிமாவுக்கு வரும்போதே ரஜினிகாந்துடன் பணிபுரிய வேண்டும், அதற்கு வாழ்நாள் எல்லாம் காத்திருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவோடு தான் வந்தேன். ஆனால் அது சீக்கிரம் நிறைவேறி விட்டது. அதற்காக ஆண்டவனுக்கும், ரஜினி சாருக்கும், பி.வாசு சாருக்கும் நன்றி என்றார்.
|